வியாழன், 30 நவம்பர், 2023

இந்தியா-இங்கிலாந்து பாதுகாப்பு ஆலோசனைக் குழு பிராந்திய பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.


 புதுதில்லியில் நடைபெற்ற வருடாந்திர இந்தியா-இங்கிலாந்து பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டத்திற்குப் பாதுகாப்பு செயலாளர் திரு கிரிதர் அரமானே, இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் நிரந்தர செயலாளர் திரு டேவிட் வில்லியம்ஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.  பிராந்திய பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

நடந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மறுஆய்வு செய்த அவர்கள், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் நிலைமை மற்றும் சாத்தியமான ஒத்துழைப்பு, ஏவுகணை அமைப்புகள், மின்சார உந்துவிசை ஆகியவற்றில் பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு முன்மொழிவுகள் குறித்தும் விவாதித்தனர்.