கடலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவக்கல்லூரியில் தனியார் கல்லூரிக்கு இணையாக கட்டணம் வசூலிக்கும் முறையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கோரிக்கை மற்றும் மாணவர்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக, இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை, கடலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகப் பெயர் மாற்றம் செய்து கடந்த 2020-ல் அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், தற்போது பயின்று வரும் மாணவர்களுக்கும், இனிமேல் பயிலும் மாணவர்களுக்கும், மற்ற அரசு மருத்துவக்கல்லூரியில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.








