BIGG BOSS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
BIGG BOSS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

உண்மையைச் சொல்லணும்னு நான் நினைக்கிறேன் ; கேஸ் போடுவோம்'னு மிரட்டுறாங்க - மதுமிதா

உண்மையைச் சொல்லணும்னு நான் நினைக்கிறேன் கேஸ் போடுவோம்'னு மிரட்டுறாங்க - மதுமிதா 


பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியாக மதுமிதா நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சக போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், ஆனால் தொகுப்பாளர் கமல்ஹாசனும் கூட அதனை கண்டிக்கவில்லை எனவும் தபால் மூலம் அவர் புகார் அளித்துள்ளார். தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி 56-வது நாளில் வலுக்கட்டாயமாக போட்டியிலிருந்து வெளியேற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில்  'ஒண்ணு நீ இங்க இருக்கணும்.. இல்லாட்டி நாங்க இருக்கணும் டீ' எட்டு போட்டியாளர்கள் தன்னை கட்டாயப்படுத்தி போட்டியிலிருந்து வெளியேற்றியதாகவும். ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கத்தியால் தன் கையை அறுத்துக் கொண்டார். விதியை மீறி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு ஷோவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.  

அந்த எட்டு பேர்  தந்த மன அழுத்தத்தை மற்றும் நடந்த உண்மையைச் சொல்லணும்னு நான் நினைக்கிறேன். அதனாலதான் 'ஒண்ணு நீங்க பத்திரிகையாளர்களை சந்திக்க ஏற்பாடு பண்ணுங்க, இல்லை நானே பேட்டி தாரேன். 

ஆனால் நிகழ்ச்சி தொடர்பா மதுமிதா வாழ்நாள் முழுவதும் எங்கயுமே பேட்டி தரக்கூடாதுன்னு விஜய் டிவி நிர்வாகத்துல இருந்து மெயில் அனுப்புறாங்க. நீங்க பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி  எங்கேயும் எதையும் பேசக்கூடாது. மீறினால் அக்ரிமென்ட் படி கேஸ் போடுவோம்னு மிரட்டுறாங்க. ஆனா, நிகழ்ச்சியில் கலந்துகிட்டதுக்காக டிவி நிர்வாகம் எனக்குப் பேசின சம்பளம் முழுசையும் இப்போ கொடுத்திட்டாங்க. ஆனால் வாயைக் கட்டிப் போட்டு வச்சிருக்காங்க.

புதன், 4 செப்டம்பர், 2019

பிக்பாஸில் என்னை கொடுமைப்படுத்தினார்கள் - மதுமிதா போலீஸில் புகார்

பிக்பாஸில் என்னை கொடுமைப்படுத்தினார்கள் 
- மதுமிதா போலீஸில் புகார்


கடந்த ஆகஸ்ட் 17 தேதி  பிக் பாஸ் நிகழ்ச்சி 55 நாட்கள் கடந்து இருந்த போது, பிக் பாஸ் விதிகளை மீறி நடந்ததால் நடிகை மதுமிதா வெளியேற்றப்பட்டார். ஆனால் அதற்கான காரணத்தை தொலைக்காட்சி நிர்வாகமும், மதுமிதா தரப்பிலும் கூறவில்லை.  பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியில் வரும் மதுமிதா அவரது இடது கையில் கட்டுப் போடப்பட்டிருந்தது. மதுமிதா வெற்றியை தட்டிவிட்டு விட்டு இங்கு வந்து நிற்பது எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது என்று கம்ல ஹாசன் கூறுகிறார். மேலும், உங்களுடைய இந்த தியாகம் அகிம்சை கலந்ததாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். என்னைப் பொறுத்தவரை மது எடுத்த இந்த முடிவு ஒரு தவறான முடிவு. 

ஆகஸ்ட் 22 :இந்நிலையில், நேற்று விஜய் டிவி சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் என்பவர் சென்னை கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து மதுமிதா வெளியேறிய போது நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கான பில் கொடுக்கப்பட்டது. ஏற்கனவே அவருக்கு ரூ. 11.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நிலுவைத் தொகையான ரூ. 80 ஆயிரத்துடன், 42 நாட்களுக்கான பாக்கி பணம் திருப்பித் தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதற்கு ஒப்புக்கொண்ட மதுமிதா, கடந்த 19ம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பியுள்ள வாட்ஸ் ஆப் மெசேஜில், நிலுவைத் தொகையை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார் என அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மதுமிதா தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் மதுமிதா. அப்போது பேசிய அவர், பிக் பாஸ் நிகழ்ச்சி குழுவினருக்கு தான் எந்தவித தற்கொலை மிரட்டலும் விடவில்லை. என் மீது விஜய் டிவி கொடுத்துள்ள புகார் பொய்யானது என்று கூறினார். 


ஆகஸ்ட் 22 தேதி : பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து விசாரணை நடத்த கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பில் அதன் நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா தலைமையில் நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்து விட்டு இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை செய்ய வேண்டும், நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவரது கையில் கட்டுப்போட்ட நிலையில் எந்தவித விளக்கமுமின்றி வெளியேற்றப்பட்டார். மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.


தற்போது 70 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்த நடிகை மதுமிதா, தனக்குத் தானே தீங்கு விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், விதிமுறைகளை மீறியதாகவும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியாக மதுமிதா நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சக போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், ஆனால் தொகுப்பாளர் கமல்ஹாசனும் கூட அதனை கண்டிக்கவில்லை எனவும் தபால் மூலம் அவர் புகார் அளித்துள்ளார். தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி 56-வது நாளில் வலுக்கட்டாயமாக போட்டியிலிருந்து வெளியேற்றியதாவும் அவர் கூறியுள்ளார்.

சனி, 31 ஆகஸ்ட், 2019

பிக்பாஸிடம் மொக்கை வாங்கிய லாஸ்லியா

பிக்பாஸிடம் மொக்கை வாங்கிய லாஸ்லியா 



இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி காலையில் கவின் உடல்நிலை சரியில்லாததால் மாத்திரை கொண்டு வந்து கொடுத்த லாஸ்லியாவிற்கு கவின் நன்றி கூறினார். இதற்கு எதற்கு நன்றியெல்லாம் என்று லாஸ்லியா கேட்டார். மேலும் லாஸ்லியா கவினிடம் எதையும் கண்டு கொள்ளாமல் இருக்குறீங்க. பார்த்தும் பார்க்காத மாதிரி போறீங்க, நீங்கள் எப்போதும் போல் இருக்க வேண்டும். கேம் விளையாடுங்கள், சிரித்துக் கொண்டே இருங்கள் என்று அறிவுரை வழங்கினார். பின்னர் வருத்தத்துடன் நான் இனிமேல் உங்களிடம் பேச மாட்டேன் என்று லோஸ்லியா தெரிவித்தார். நீண்ட நேரம் வெயிலில் உட்க்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

பின்னர் லாஸ்லியா தர்ஷன் பேசிக் கொண்டிருந்தனர். இதில் தர்ஷனை வாடா போடா என்று கூறினார். ஆனால் கவினை மட்டும் அவர் இவர் என்று கூறியதைக் கேட்டு சேரன் மற்றும் தர்ஷன் கிண்டல் செய்து சிரித்தனர். 

லாஸ்லியா மற்ற போட்டியாளர்களிடம் பேசினார், நான் மட்டும் தான் இந்த வீட்டில் ரூல்ஸ் எல்லாவற்றையும் ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கிறேன். மைக்கை சரியாக மாற்றவில்லை என்றால் கூட பிக் பாஸ் என்னிடம் எதுவும் கூறியதில்லை என்று கூறியதைக் கேட்டு தர்ஷன் வீட்டில் ரூல்ஸ் பின்பற்றாமல் இரண்டு தடவை ஜெயிலுக்கு போனீங்க என்று கேட்டார். அதற்கு லாஸ்லியா மற்றவர்களை ஜெயிலுக்கு அனுப்பி அதன் மூலம் சந்தோஷப்படும் ஆள் நான் இல்லை என்று லோஸ்லியா கூறிக்கொண்டே இருக்கும் போது பிக் பாஸ் லோஸ்லியா மைக்கை சரியாக மாட்டுங்கள் என்று கூறியதைக் கேட்டு மற்ற போட்டியாளர்கள் நக்கலாக சிரித்தனர். 


லாஸ்லியா தொடர்ந்து மைக்கை பயன்படுத்தாமல் இருந்த லோஸ்லியாவை, மைக் பயன்படுத்தும்படி பிக் பாஸ் கூறினார். இதில், தர்ஷன் என்னது நீங்க தான் ரூல்ஸ் பாலோ பண்ணுறேன் என்று சொன்னீங்கள் இப்போ எதுக்கு பிக் பாஸ் உங்களை சொல்கிறார் என்று கேள்வி கேட்க, பிக் பாஸ்க்கு எனது பெயரை சொல்ல வேண்டும் என்று ஆசை இருப்பதால், அவர் எனது பெயரை கூறுகிறார் என்று லோஸ்லியா சமாளித்தார். லாஸ்லியாவை தொடர்ந்து பிக்பாஸ் காலாய்த்து வந்தார்.



வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

32 லட்சம் பண மோசடி ; கவினின் தாயார் ராஜலட்சுமிக்கு 5 ஆண்டுகள் சிறை

32 லட்சம் பண மோசடி : கவினின் தாயார் ராஜலட்சுமிக்கு 5 ஆண்டுகள் சிறை 


(கவின்) கவின் ராஜ் , கனா காணும் காலங்கள் என்ற தொடரில் மாணவர் கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு சரவணன் மீனாட்சி தொடரின் 2ம் பாகத்தில் வேட்டையன் என்ற ரோலிலும் நடித்துள்ளார். சின்னத்திரையைத் தொடர்ந்து வெள்ளித்திரையிலும், கால்பதித்துதார். நட்புன்னா என்னான்னு தெரியுமா ? திரைபடத்தில் காதநாயகனாக நடித்துள்ளார்.

தற்போது பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காதல் மன்னன் ஆக வலம் வரும் நடிகர் கவின் (கவின் ராஜ் ) திருச்சி கே.கே நகர் பகுதியை சேர்ந்தவர். கவின் தாத்தாவும் அருணகிரி, தமயந்தி தம்பதிகள் இவருடைய  மகன் சொர்ண ராஜன், மகள் ராஜலட்சுமி மற்றும் மருமகள் ராணி. ஆகியோர் இணைந்து அந்தப் பகுதியில் சீட்டு கம்பெனி ஒன்றை அனுமதி இல்லாமல் 1998 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை நடத்தி வந்ததாக தெரிகிறது. ராஜலட்சுமி என்பவர் நடிகரும் பிக்பாஸ் சீசன் போட்டியாளருமான கவினின் தாயார் ஆவார்.

சீட்டு கம்பெனியில்  பலர் சீட்டு கட்டி வந்துள்ளனர். இதில் 34 நபர்கள் கட்டிய பணம் 32,28,000 ஆயிரம் திருப்பி தரவில்லை. எனவும் கடந்த 2007 ஆம் ஆண்டு பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு விசாரணை திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த நிலையில் மேற்படி வழக்கு விசாரணையில், கடந்த வாரம் சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன.  இதுதொடர்பான குறுக்கு விசாரணையில் இருதரப்பு வாதங்கள் முடிந்தநிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் நடிகர் கவின் ராஜின் பாட்டி, மற்றும் தாய் ராஜலட்சுமி உள்ளிட குற்றவாளிகள் அனைவருக்கும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு குற்றவாளிகள் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கவும், அந்தத் தொகையை வழக்கு தொடர்ந்த 2007ஆம் ஆண்டு முதல் 5 சதவிகித வட்டி விகிம் கணக்கிட்டு ரூ.55.10 லட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்.கவின் குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது குறித்து பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கவினுக்கு தெரிய வந்த பிறகு அவர் உடனடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவாரா என்பது தெரியவில்லை

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

வனிதாவின் வஞ்சகத்தில் மதுமிதா பலியானது எப்படி ?

வனிதாவின் வஞ்சகத்தில்  மதுமிதா பலியானது எப்படி ?



வனிதாவின் காழ்ப்புணர்ச்சிக்கு காரணம்

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நாள் முதல் வனிதா சின்ன பிரச்சனை கூட பெரித்தாக்குவார், முதல் வாரமே தலைவர் ஆனார், அப்போது முதல் பிக்பாஸ் வீட்டில் கத்தி கொண்டிருக்கும் வனிதா, மற்ற போட்டியாளர்களிடம் கடுமையான வாக்குவாதம் செய்வார். மற்றவர் போட்டியாளர்களும் ஒரு கட்டத்தில் விலகி செல்வர், இதனை சாதமாக பயன்படுத்தி வந்தார். கேப்டன் தேர்ந்து எடுக்கப்படும் போட்டியில் எற்பட்ட பிரச்சனையில் வனிதாவிடம் தர்ஷன் முதல் முறையாக கேள்வி கேட்டு பிக்பாஸ் வீட்டிலும் மற்றும் வெளியிலும் பிரபலமானார். வனிதா அப்போதும் கூட மைக்கை கழட்டி வைத்து பிக்பாஸ் தன்னிடம் பேச வேண்டும் என்று முறையிட்டார், ஆனால் பிகபாஸ் கண்டுக்கவே இல்லை. மாறாக சாக்க்ஷி தலைவராக அறிவித்தார். பிறகு வனிதாவும் தர்ஷனுடன் சமரசம் செய்தார். பின்னர் வரும் வாரத்தில் ஏலிமினேட் ஆனார். இவருடைய எலிமினேஷனுக்கு பிறகு நிகழ்ச்சியின் டி.ஆர்.பி அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது. 

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த வனிதா தன்னை எதிர்த்தால் தான் மக்களிடம் தர்ஷன் பெரும் வரவேற்பு பெற்றார், என்பதை அறிந்து கொண்டார். லாஸ்லியா மற்றும் முகின்ராவ் மக்களிடம் வரவேற்பு இருப்பதை அறிந்து மேலும் காழ்ப்புணர்ச்சி ஆகி இருகிறார். 

வனிதாவின் மறுபிரவேசம்

இந்நிலையில் தான் நிகழ்ச்சியில் அதிரடியாக மறுபிரவேசம் செய்தார் வனிதா. ஹவுஸ்மேட்ஸுகளின் வெறுப்புக்கும், விமர்சனங்களுக்கு ஆளான வனிதா மீண்டும் நிகழ்ச்சிக்குள் வந்தது ஹவுஸ்மேட்ஸுக்கு பேரதிர்ச்சி தான். ஆனால் அதை யாரும் காட்டி கொள்ளவில்லை நிகழ்ச்சியில் தொடக்கத்தில் இருந்ததை விட மிகவும் மோசமாக வனிதா மாறியிருந்தார். நேற்று அனைவரிடமும் மிகவும் நல்லவர் போல பேசினார். முகின், தர்ஷன், மற்றும் லோஸ்லியா அவர்களை குறிவைத்து வனிதா செயல்பட்டார். மூவர் குறித்தும் சிண்டு முடியும் வேலையில் ஈடுபட்டார். லோஸ்லியாவை கஸ்தூரியிடம் கோர்த்து விட்டார். அபிராமிக்கும் முகினுக்கும் சண்டை மூட்டி விட்டார். சேரன், மது, மற்றும் ஷெரீனிடம் லோஸ்லியா, தர்ஷன் குறித்தும், கோள்மூட்டி பிளவுபடுத்தி வந்தார். அதை தொடர்ந்து காய்களை நகர்த்தி வந்தார்.

ஆணதிக்கம்

ஆண்களுக்கு எதிராக மதுவை நன்றாக தூண்டிவிட்டார் வனிதா. பிக்பாஸ் வீட்டுக்குள் ஆணதிக்கம் தழைத்தோங்குவதாக அவருடைய கருத்தை மதுமிதாவுக்குள் திணித்தார். பிறகு தர்ஷன் மேல் விமர்சனங்களை உருவாக்க வைத்தார். தர்ஷனை ஆதரித்த  சாண்டி, கவின், லோஸ்லியாவை குறிவைத்து மதுமிதா எப்போதும் சண்டையை உருவாக்க இதை வனிதா  நன்றாக தூண்டி கொண்டே இருந்தார். ஆனால் ஆண்களிடம் அவர் மட்டும் சகஜமாக பேசி வந்தார். 

உணராத மதுமிதா

இதனை உணராத மதுமிதா மனதிற்கு தோன்றியதை படபடவென பேசிய வண்ணம் இருந்தார். இந்த நிலையில் வனிதாவின் வரவிற்கு பின் மதுமிதாவிடம் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. வனிதாவின் தூண்டுதலினால் கவின் உள்பட ஐவர் குழுவினர்களிடம் வேண்டுமென்றே வம்புக்கு இழுத்த மதுமிதா, நான்கு பெண்கள் விஷயத்தில் சம்பந்தப்பட்ட பெண்களே அமைதியாக இருந்த நிலையில் மதுமிதா மீண்டும் கவினுடன் விவாதம் செய்தார். இதனால் சேரன், கஸ்தூரி தவிர மற்ற பிக்பாஸ் போட்டியாளர்களின் வெறுப்பையும் மதுமிதா சம்பாதித்தார்.

தற்கொலைக்கு முயன்ற மதுமிதா

இந்த நிலையில் ஹலோ செயலி டாஸ்க்கில் மதுமிதா தெரிவித்த ஒரு கருத்து தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் உள்ள காவிரி நதிநீர் பங்கீடு குறித்து சர்ச்சைக்குரிய இருந்ததாகவும் இதன் காரணமாக மதுமிதாவிற்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்ததாகவும், இதனையடுத்து மதுமிதா தான் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அதனால், பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறையை மீறி செயல்பட்டதாக கூறி இந்நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். 

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

பிக்பாஸ் வீட்டில் தொடரும் வனிதாவின் ஆட்டம்

பிக்பாஸ் வீட்டில் தொடரும் வனிதாவின் ஆட்டம்


பிக்பாஸ் வீட்டில் வனிதா வழக்கம் போல காலை முதலே ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் சிண்டு முடியும் வேலையில் ஈடுபட்டார். சேரன், மது, மற்றும் ஷெரீனிடம் லோஸ்லியா, தர்ஷன் குறித்தும், கோள்மூட்டி பிளவுபடுத்தி வருகிறார். முகின், தர்ஷன், மற்றும் லோஸ்லியா அவர்களை குறிவைத்து வனிதா செயல்படுவதாக தோன்றுகிறது. அதை தொடர்ந்தே காய்களை நகர்த்துகிறார் வனிதா.

ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் அபிராமி உடல் நலிவடைந்து காணப்பட்டார். இதை கண்ட லோஸ்லியா வீட்டின் தலைவரான சாண்டி மாஸ்டரிடம் முறையிட்டார். சாண்டி மாஸ்டர் பிக்பாஸ் அறிவிப்பதற்குள் சாவியை எடுத்து வந்து அபிராமியை வெளியே வரும்படி அழைத்தார். ஆனால் அபிராமி வர மறுத்தார். அப்போது சாண்டிக்கும், கஸ்தூரிக்கும் சின்ன வாக்குவாதம் நடந்தது. சேரனும் அனைவரும் சேர்ந்து பிக்பாஸிடம் கோரிக்கை வைக்கலாம் சாண்டி ஆலோசனை கூறினார். அதை தொடர்ந்து அபிராமியை விடுக்குவிக்குமாறு பிக்பாஸ் உத்தரவிட்டார். 

சேரன் இதற்கிடையில் தர்ஷன், கவின், சாண்டி, முகின் ஆகியோரை வாங்க, போங்க, சார் என்று குறிப்பிட்டு அழைக்கத் தொடங்கினார். இதை கவனித்த நான்கு பேரும் தங்களுக்குள் பேசி கொண்டனர். உடனே கவின் சேரனை குறை கூற ஆரம்பித்தார். ஆனால் ஆண்கள் யாரும் சேரனிடம் சென்று பேசவில்லை. 

ஆண்கள் பெண்களும் பிரிந்திருப்பதை உணர்ந்த பிக்பாஸ் அதற்கு ஏற்றார் போல ’சபாஷ் சரியான போட்டி’ டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த விவாத டாஸ்க்கில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக பிரிந்தனர். இது மேலும் பிரச்னையை கூட்டியது.

வனிதாவும் முகின், தர்ஷனை குறிவைத்து காத்து கொண்டு இருந்தார்.  ஆண்கள், பெண்களில் சிறந்த தோழமை எண்ணம் கொண்டவர்களில் யார் என்ற விவாதத்தில் பேசும் போது அபிராமி, முகின் வாதத்தில்  தர்ஷன் முகின் ஆதரவாக கருத்து தெரிவித்தார். இதற்க்காக காத்திருந்த வனிதா தர்ஷனை சீண்டினார். உனக்கு ஏன் கோபம் வரவேண்டும், வாதத்தில் ஈடுபட்டார், இது மேலும் பிரச்னையை கூட்டியது.

ஒருவழியாக விவாதம் டாஸ்க் முடிவடைந்தது.  சிறந்த தலைவர்களாக இருந்தவர்கள் யார் ? சமைக்க தெரிந்தவர்கள் யார் ? தொடர்பான விவாதங்களில் பெண்கள் அணியினர் வெற்றி பெற்றனர். சிறந்த தோழமை எண்ணம் கொண்டவர்களில் யார் ?  ஆண்கள் அணியினர் வெற்றி பெற்றனர்.

பிறகு வனிதா, கஸ்தூரிக்கும் சிறு சலசலப்பு ஏற்பட்டது.  உடனே வனிதா ஆண்களிடம் வந்து  கஸ்தூரியை கேலி செய்தார். அப்போது அங்கே வந்த கஸ்தூரியை நையாண்டி செய்து பாடல் பாடினார்கள். இதனால் கஸ்தூரி எரிச்சலுடன் காணப்பட்டார். கவின் மற்றும் சாண்டி கஸ்தூரிக்கு காக்கா என்று பட்ட பெயர் வைத்து அவ்வப்போது காகம் போல் கரைந்து கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் வனிதாவின் போக்கைக் கண்டு ஆத்திரமடைந்த முகின், அவரை கன்னத்தில் அறைந்து விட்டதாகவும்,  முகின் தன்னை கன்னத்தில் அறைந்ததால் உடனே பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதா வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. அதனால் முகின் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் உண்மையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

தீதும் நன்றும் பிறர்தர வாரா; முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். - கமல் கூறியதன் காரணம்

தீதும் நன்றும் பிறர்தர வாரா
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். கமல் கூறியதன் காரணம் இப்போது தான் புரிந்தது.
சரவணனுக்கு அநீதி இழைத்த பிக்பாஸ்.


கடந்த வாரங்களில் மீரா மிதுன் மற்றும் சேரனின் நாட்டாமை டாஸ்க்கில்  சேரன் தன்னை தவறாக பிடித்து இழுத்ததாக மீரா தெரிவித்த புகாரை அவர் விசாரித்தார். ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அப்போது பேசிய கமல், மீரா போல பேசிக்கொண்டிருந்தால் எந்த பெண்ணும் அரசு பேருந்தில் செல்ல முடியாது. பெண்களை உரச வேண்டும் என்று சிலர் வருபவர்களும் உண்டு என்று கமல் சொன்ன போது, அதை கையை உயர்த்தி ஆமோதித்தார் சரவணன்.

சனி, 3 ஆகஸ்ட், 2019

அன்புள்ள சேரன் அவர்களுக்கு உடனே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள்

அன்புள்ள சேரன் சார் அவர்களுக்கு வணக்கம்!




இயக்குநர் வசந்த பாலன் தனது பெஸ்புகில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் :

உங்களுக்கு இது கேட்காது என்று தெரியும்.காற்றின் ரகசியப் பக்கங்களில்  இந்த செய்தி ஊடேறி  உங்களைத்தொடும் என்றே நம்புகிறேன். உங்களின் படங்களின் ரசிகனாய் சொல்கிறேன்.வித்யாகர்வத்துடன் நீங்கள் இருந்த இடம் மிக கம்பீரமானது. பருந்து பறக்கும் வானத்தின் உயரத்தில் சஞ்சரிப்பவர் நீங்கள். பாரதிகண்ணம்மா, பொற்காலம், ஆட்டோகிராப் என அற்புதமான இலக்கியப்படைப்புகள்.

திரையில் இலக்கியம் செய்ய ஆசைப்பட்டு அதில் வென்று காட்டியவர் நீங்கள்.
காலத்தின் கரையான் உங்களையும் உங்கள் படங்களையும் அழித்துவிட முடியாது.இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் பாலுகேந்திராவுடன் 
ஒப்பிடக்கூடிய திரை ஆளுமை நீங்கள். பிக்பாஸ் அரங்கில் இருப்பவர்களுக்கு 
உங்களின் உயரம் தெரியாது. நீங்களும் நடிகர் சரவணனும் ஒன்று என்று தான் நினைப்பார்கள். அறியாமை என்ன செய்ய..


உடனே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள். இயக்குனர் சங்கப் பதவியில் கௌரவக்குறைவு ஏற்பட்ட போது  உடனே அதை விட்டு வெளியேறினீர்கள். ஆகவே கலைஞன் எந்த நிலையிலும் அவனின் மேன்மையை  எந்த கீழ்மைக்கும் உட்படவிடுதல் வேண்டாம்.

ALSO READ  THIS : 
கவின், லாஸ்லியா, சாக்‌ஷியை காதல் படுத்தும் பாடு ? - ஒரு ஷைக்காலஜி ரிப்போர்ட்
ALSO READ THIS : 
கவின், லாஸ்லியா, சாக்‌ஷியை காதல் படுத்தும் பாடு ? - ஒரு ஷைக்காலஜி ரிப்போர்ட். 
ஒரு ஆணின் நினைவை பெண்களின் மனதிலிருந்து போராடிப் பிய்த்து எறிவது என்பது நடவாத காரியம். 


ALSO READ THIS: 
சாண்டி வெளியே வரும் போது அவருக்கு கண்டிப்பாக ஜெயில் காத்திருக்கிறது.



வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

கவினின் விளையாட்டு ; யாருக்கு வினையானது ?

கவினின் விளையாட்டு; யாருக்கு வினையானது ?




கவின் - சாக்‌ஷி - லாஸ்லியா ஆகியோரது முக்கோண காதல் விவகாரம் பிக்பாஸ் வீட்டில் இப்போது விஸ்வருபம் எடுத்துள்ளது. கவின் ஆரம்பித்த விளையாட்டை சாக்‌ஷி முடிக்க விடாமல் தொடர்கிறார். இது மற்ற ஹவுஸ்மேட்ஸுக்கும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யார் மீது தவறு ?

யாரை ஆதரிப்பது யாரை எதிர்ப்பது ? யார் மீது தவறு என்று புரியாமல் ஹவுஸ்மேட் திணறி வருகிறார்கள். தொடர்ந்து இந்த விவகாரத்தில் எழுந்து வரும் பிரச்னையால் பிக்பாஸ் வீட்டில் புயல் வீசி வருகிறது. மேலும், கடந்த வாரம் நடந்த பிரச்னைகளை மீண்டும் தட்டி எழுப்பும் வகையில் மொட்டை கடுதாசி டாஸ்க்கை வடிவமைத்தார் பிக்பாஸ். 

ஹவுஸ்மேட் பொருத்தவரை கவின் சாக்‌ஷியிடம் நெருக்கம் காட்டினார். அதை கவின் நட்பு என்ற பெயரில் காதலுக்கான அச்சாணியை அமைத்தார். அப்போது லாஸ்லியா மீது ஈர்ப்பு ஏற்பட கவின் அவர் பக்கம் சாய்ந்தார். இது சாக்‌ஷிக்கு பொறுக்கவில்லை. இவ்வாறு இருபெண்களுக்கான உணர்வுகளில் கவின் விளையாடியது உறுதியானது.

மொட்டை கடுதாசி டாஸ்க்

நேற்று வழங்கப்பட்ட மொட்டை கடுதாசி டாஸ்க்கில் கவின் மீதான கோபத்தை வெளிப்படையாகவே காட்டினார் சாக்‌ஷி. லோஸ்லியாவிடம் கவின் நெருங்கி பழகியதை மறைமுகமாக பேசினார். இதனால் கோபமடைந்த லோஸ்லியா சாக்‌ஷிக்கு எதிராக பேசினார். கவினுக்கும் தனக்கும் இருந்தது நட்பு தான். அதை தாண்டி எங்கள் இருவருக்கும் எதுவுமில்லை. இதற்கு மேல் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றார் லோஸ்லியா.

இதே பிரச்னை இன்றைய நிகழ்ச்சியிலும் தொடர்கிறது. அதன்படி, சாக்‌ஷிக்கு ஆதரவாக ஹவுஸ்மேட் கவினிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அதற்கு கவின், சாக்‌ஷி தன்னை வைத்து நாடகம் ஆடுகிறார். எல்லாம் முடிந்துவிட்டதாகவே பேசுகிறார். 

கவினுக்கு எதிராக ஹவுஸ்மேட் 

சாக்‌ஷிக்கு ஆதரவாக பேசிய ரேஷ்மா கவின் மற்றும் லாஸ்லியாவின் நட்பு சாக்‌ஷியின் மனம் புண்படுவதற்கு காரணம் அமைகிறது என்றார். அப்போது பேசிய சரவணன் ஒருவர் மீது அன்பாக இருந்து விட்டு பின்பு விலகி, மற்றொருவர் மீது கவனம் செல்லுத்தினால். அது சாக்‌ஷி மனம் காயபடுவது இயல்பானது தான். இது மனிதர்களுக்கு மட்டுமில்லாமல், மிருகங்களுக்கும் இந்த நிலை ஏற்படத்தான் செய்கிறது என்றார். 

இதற்கிடையில் பேசும் தர்ஷன், கமல் பேசியதை சுட்டி காட்டி ஒன்றுமில்லாமல் லோஸ்லியாவின் கையை பிடித்துக் கொண்டு தற்காக நள்ளிரவு 2 மணி வரை பேச வேண்டும் என்று கவினை பார்த்து கேட்கிறார். இதை ஆமோதிக்கும் மது, லோஸ்லியாவிடம் நள்ளிரவு 2 மணி வரை பேசும் வகையில் அப்படியென்ன நட்பு என்று ஆவேசமாக கேட்கிறார். 


லாஸ்லியாவின் மனநிலை

இப்படி ஒட்டுமொத்த பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸும் கவினுக்கு எதிராக திரும்பினர், இதுவரை கவினுடன் இருந்த சாண்டி மாஸ்டர், சரவணன் ஆகியோர் சாக்‌ஷி ஆதரித்தனர். என்பது உணர்ந்து கொள்ள முடிகிறது. லாஸ்லியாவும் சாக்‌ஷியின் நடவடிக்கையால் மிகவும் வருந்தி நிற்கிறார். பின்பு சாக்‌ஷிக்கு ஏற்பட்ட அநீதிக்கு காரணம் நான் தான். எல்லோரும் தர்மத்தின் பக்கம் நில்லுங்கள். அதனால் அபிராமியை தவிர மற்றவர் யாரும் தயவு செய்து என்னிடம் யாரும் பேசாதீர்கள், என்று கூறி வெளியேறினார்.

அர்த்தமற்ற விளையாட்டு

கடைசியாக் பேசும் கவின், நடப்பு வாரத்தில் தான் எலிமினேட் இல்லை என்றாலும், வரும் வாரத்தில் அனைவரும் தன்னை நாமினேட் செய்ய வேண்டும் 7 வாரங்கள் இருக்க வேண்டும் என்ற முடிவில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தேன். அதன்படி இருந்துவிட்டேன். இதனால் என் கடன்கள் அனைத்தும் அடைந்துவிடும். அதனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற எனக்கு உதவுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.



அர்த்தமற்ற விளையாட்டால் காயபட்டது மூன்று மனங்கள் மட்டுமல்ல, அவர்கள் குடும்பங்களும் தான். காதலுக்கும் நட்புக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கம் சொல்லி விளங்க வைப்பது எளிதல்ல.கவின் விளையாட்டாக ஆரம்பித்து யாருக்கு வினையாகும் என்பது வரும் நாட்களில் தெரியும்.


ALSO READ THIS



ALSO READ THIS: 
கவின், லாஸ்லியா, சாக்‌ஷியை காதல் படுத்தும் பாடு ? - ஒரு ஷைக்காலஜி ரிப்போர்ட்



மதுவுக்கும் , சேரனுக்கும் அநீதி இழைத்த கமல்ஹாசன்


வியாழன், 1 ஆகஸ்ட், 2019

கவின், லாஸ்லியா, சாக்‌ஷியை காதல் படுத்தும் பாடு ? - ஒரு ஷைக்காலஜி ரிப்போர்ட்

கவின், லாஸ்லியா, சாக்‌ஷியை காதல் படுத்தும் பாடு ?
ஒரு ஷைக்காலஜி ரிப்போர்ட்


ஒரு ஆண் என்னை ஒரு வாரமாக தினமும் பின் தொடர்கிறான் .


பஸ்ஸில் ஒரு ஆண் என்னை தினமும் பின் தொடர்கிறான். அவன் முகம் என் மனதில் அப்படியே ஒட்டிக்கொண்டுவிட்டது. கல்லூரி தேர்வு நேரம் இது. படிப்பதற்காகப் புத்தகங்களைத் திறந்தால், அந்தப் அவனின் முகமே வந்துவந்து என்னைத் தொந்தரவு செய்கிறது. அவன் முகம் தரும் சந்தோஷம் ஒருபுறம், அவன் என்னை பின் தொடர்வதால் வரும் கோபம் மறுபுறம். இரண்டும் சேர்ந்து வறுத்தெடுக்கின்றன. நான் அவனை காதலிக்கிறேனா ? 

ஒரு வாரத்தில் யாரோ ஒருத்தன் நினைவு பெண்னின் மனதிற்கு சந்தோஷம் தர முடியும். துக்கத்தை தர முடியும். என்றால் சாக்‌ஷியும், லாஸ்லியாவும் அப்படி தான் கவினால் பாதித்து உள்ளனர். காதல் எப்போதும் உங்களுக்குள்தான் இருக்கிறது. அதைத்  தூண்டி உயிர்ப்பிக்கும் சக்தியை வெளியில் ஆணின் கையிலோ ஒப்படைத்துவிட்டீர்கள். அதனால், அவனின் செயல் உங்களை சந்தோஷம் அல்லது காயப்படுத்தும்.

ஒரு ஆணின் நினைவை பெண்களின் மனதிலிருந்து போராடிப் பிய்த்து எறிவது என்பது நடவாத காரியம். அப்படி முயற்சி செய்ய ஆரம்பித்தீர்கள் என்றால், அதுவே உங்கள் முழுநேர வேலையாக ஆகிவிடும்.


சாக்‌ஷியின்  நிலைமை இப்ப அப்படி தான் இருக்கும். கவினுடன் பேசும் போதும், காதலாக உறவாடும் போதும், கோபமாக பேசும் போதும். தான் மனம் போன பொக்கில் நடந்து வருகிறார். சாக்‌ஷி இவ்வாறு நடந்து கொள்வதை கவினும் அறிந்து வைத்துள்ளார். அதனால் தான் அவரிடம் வெளிப்படையாகவே விலகுவது போல இருந்து வருகிறார் கவின். இதை உணர்ந்து கொண்டே சாக்‌ஷி, தற்போது லாஸ்லியா பக்கம் திரும்பியுள்ளார்.

கவின் தன்னை புறக்கணிக்க லாஸ்லியா தான் காரணம் என்று சாக்‌ஷி  நினைகிறார். கவின் மற்றும் லாஸ்லியா பேசும் போது சாக்‌ஷி  தன்னை அறியாமல் கோபம், வருத்தம் அடைகிறார். பின்பு கவினுடன் சமாதானம் அடைந்தாலும் அதனை தக்க வைத்து கொள்ள முடியவில்லை.



காதலிக்கும் ஆண்களுக்கு தெரியும். தன் காதலி காலையில் “ நீ தான் எனக்கு எல்லாம் “ என்பார்கள் ஆனால் மாலையில் “ நீ எனக்கு எதுவும் இல்லை ” என்னிடம் பேசதே என்பார்கள், மறுநாள் வந்து இரவு ஏன் பேசவில்லை என்பாள். இந்த உளவியல் ஏமாற்று தனத்தில். உடல் தொடர்பில் நடக்கும் அத்தனை வேதியல் மாற்றங்களும்  மூளையில் நடக்கும்  நாடகத்தில்  எந்தவிதமான விளக்கமும் கூற தேவையில்லை.

ALSO READ













விஜய் சேதுபதி கூறியதால், நான் இங்கே நிகழ்ச்சிக்கு வந்தேன். மனம் திறந்த சேரன்

விஜய் சேதுபதி கூறியதால், நான் இங்கே நிகழ்ச்சிக்கு வந்தேன். மனம் திறந்த சேரன்

பிக்பாஸ் நேற்றுபோட்டியாளர்களுக்கு மொட்டை கடுதாசி டாஸ்க்கை வழங்குகிறார்.  ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸுக்கும் மொட்டைக் கடுதாசி கிடைக்கிறது. அதில் சேரன் தனக்கான கடிதத்தை பிரித்து படித்தார்.

அதை தொடர்ந்து சேரனிடம் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கான காரணம் அடங்கிய கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர்,  நான் பெயர், புகழ், விருதுகள் பல வாங்கியிருந்தாலும், இறுதியாக நான் சுவைத்த வெற்றி என்பது ஆட்டோகிராஃப் தான். அதன் பிறகு ஒவ்வொன்றும் போராடி நான் சினிமா பயணத்தை ஓட்டினேன். தொடர்ந்து எல்லாம் தோல்வி படம் தான். இதனால் 4 வருடங்களாக சினிமாவில் நான் இல்லை சினிமவை தவிற வேறு எதுவும் எனக்கு தெரியாது. 

விஜய் சேதுபதி கூறியதால், நான் இங்கே நிகழ்ச்சிக்கு வந்தேன்.

நடிகர் விஜய் சேதுபதி தான் என்னை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போகும்படி சொன்னார். ‘பட்டி தொட்டி முதல் வெளிநாடுகள் வரை பல கோடி மக்கள் பார்க்கும் இந்நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் மக்களுடனான தொடர்பை நெருக்கப்படுத்திக் கொள்ள முடியும் என்று ஆலோசனை கூறினார்.

மேலும் சேரன் கூறியதாவது என் வாழ்க்கையில் ஆரம்பக்கட்டம் முதல், சினிமா எடுத்தது, சொந்த வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள், கடன், என பல்வேறு அனுபவங்களை வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. அந்த அனுபவத்தை மக்கள் முன்னிலையில் கூறும் போது அது அவர்களுக்கு பாடமாக அமையும் எனக் கூறி விஜய் சேதுபதி தான் இந்நிகழ்ச்சி போகச் சொன்னார்.

விஜய் சேதுபதி, சேரன் கூட்டணி 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் கையில் ஏகப்பட்ட படங்கள் உள்ளன. விஜய் சேதுபதி , சேரன் இருவரும் இணைந்து நிச்சயம் படம் திரைப்படம் ஒன்றை உருவாக்குவோம் என்று கூறியிருந்தார்கள். என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க






















புதன், 31 ஜூலை, 2019

பிக்பாஸ் போடு ஆட்டம் போடு டாஸ்கில் நடந்த சுவையான சுவாரசியங்கள்

பிக்பாஸ் போடு ஆட்டம் போடு டாஸ்கில் நடந்த சுவையான சுவாரசியங்கள்



37வது நாள் துள்ளுவதோ இளமை என்ற எம்.ஜி.ஆர் பாடலுடன் இன்றைய நாள் துவங்கியது. இதை தொடர்ந்து  முகின் தான் மற்ற போட்டியாளர்களுக்கு ரேப் சாங் கற்றுக்கொடுத்தார். சாண்டி நச்சுனு ஒரு பாடலை பாடினார். பின்னர் அபிராமி காதலா நட்பா என்று  ரேப் சாங் பாடினார். இவருக்கு போட்டியாக ரேஷ்மா மற்ற போட்டியாளர்களைக் கொண்டு ரேப் சாங் பாடினார்.

இன்றைய நாளில் போட்டியாளர்களுக்கு ல்க்‌ஷூரி பட்ஜெட்டுக்கான போடு ஆட்டம் போடு என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.  இதன் விதிமுறைகளை மதுமிதா அனைவருக்கும் படித்து காட்டினார். 

இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்திற்கான உடைகளை அணிந்து கொண்டு, அவர்களுக்கு என்று போடப்படும் பாடலுக்கு நடனம் ஆட வேண்டும். பாடல் ஒலித்த 15 வினாடிக்குள் மேடை ஏறி ஆட வேண்டும்.  இல்லையேன்றால் ல்க்‌ஷூரி பட்ஜெட்டுக்கான பாய்ண்ட் குறைக்கப்படும்.

சேரன் – ரஜினிகாந்த் (ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்)
அபிராமி – பத்மினி (மறைந்திருந்து பார்க்கும் மர்ம என்ன)
சாண்டி – சிம்பு (தத்தை தத்தை தத்தை இவன் மன்மதன்)
சரவணன் – விஜயகாந்த் (கடைவீதி கலகலக்கும்)
கவின் – அஜித் (ஆலுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா),
முகென் – விஜய் (போக்கிரி பொங்கல்)
தர்ஷன் – கமல் (சகலகலா வல்லவன்)
லோஸ்லியா – திரிஷா (கட்டு கட்டு கீரை கட்டு)
ரேஷ்மா - ரம்யா கிருஷ்ணன் (வை ராஜா வை)
மதுமிதா - சரோஜா தேவி (ஒரு பெண்ணை பார்த்து நிலவை),
ஷெரின் - குஷ்பு (போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி)
சாக்‌ஷி - தமன்னா (தஞ்சாவூர் ஜில்லாக்காரி)

குரூப் டான்ஸ் (அனைவரும் மேடையின் பக்கத்தில் ஆட வேண்டும்) - ஊத்திக்கிண்ணு கடிச்சிக்கவா கடிச்சுக்கிட்டு ஊத்திக்கவாஎன்று பாடல் கொடுக்கப்பட்டது. 

முதலில் குரூப் டான்ஸ்க்கான (ஊத்திக்கிண்ணு கடிச்சிக்கவா கடிச்சுக்கிட்டு ஊத்திக்கவா) பாடல் ஒலித்தது. ஆனால், அபிராமியால்  வந்து ஆட முடியாததால் வார்னிங் கொடுக்கப்பட்டு மதிப்பெண்கள் குறைக்கப்பட்டது. 




  • இதனை தொடர்ந்து வேட்டி தூக்கி கட்டி கொண்டு கழிவறை சென்ற சரவணனின் விஜயகாந்த் கெட்டப்புக்கான (கடைவீதி கலகலக்கும் )என்ற பாடல் ஓலித்தது . இந்தப் பாடலுக்கு  சரவணன் விஜயகாந்த் போல ஆடினார்.





  • அடுத்தாக ரஜினியின் ராமன் ஆண்டாலும் என்ற பாடலுக்கு சேரன் அவரது ஸ்டைலில் ஆடினார். இதற்கு மற்ற போட்டியாளர்கள் உற்சாகம் கொடுத்ததோடு, அவருக்கு பாராட்டும் தெரிவித்துள்ளனர். 






  • 3வது தாக தல அஜித்தின் வேதாளம் படத்தின் ஆலுமா டோலுமா என்ற பாடலுக்கு கவின் மங்காத்தா உடையில் நடனம் ஆடினார்.







 இதற்கிடையே விஜய் வேஷத்தில் இருந்த முகின் அவர்கள் அஜித்தாக இருக்கும் கவினுக்கு கையில் வாட்ச் ஒன்றை பரிசாக கட்டிவிட்டார்.





  • 4வது ஆக விஜய் – த்ரிஷா கூட்டணியில் வந்த கில்லி படத்தின் கட்டு கட்டு கீரை கட்டு என்ற பாடல் ஒலித்தது . இந்த பாடலுக்கு த்ரிஷாவாக இருந்த லாஸ்லியா சூப்பராக ஆடினார்.


  • 5வது தத்தை தத்தை தத்தை என்ற பாடல் ஒலித்தது. இந்த பாடலுக்கு சிம்புவாக இருந்த சாண்டி மாஸ்டர் மற்ற போட்டியாளர்களும் சூப்பராக ஆடினார்.


  • 6வது ஒரு பெண்ணை பார்த்து நிலவை என்ற பாடல் ஒலித்தது. சரோஜா தேவியாக உடை அணிந்திருந்த மதுமிதா அந்த காலகட்டத்திற்கு ஏற்ப சரோஜா தேவி போல டான்ஸ் ஆடினார். ஆனால் தாமதமாக வந்து ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடைசியில் இலங்கை மற்றும் மலேசியாவின் கலாச்சாரம், மக்கள், உணவு, திருவிழா, சினிமா பற்றி லோஸ்லியா மற்றும் முகின் ஆகியோர் பகிர்ந்துகொண்டனர். 

செவ்வாய், 30 ஜூலை, 2019

பிக்பாஸ் ஓபன் நாமினேஷன் ; கதறி அழுத போட்டியாளர்கள்

மீரா மிதுன் வெளியே போயிட்டார், இனிமே யாரு கன்டென்ட் கொடுப்பா ? என்ற பலரது கேள்விக்கு பிக்பாஸ் ஓபன் நாமினேஷன் பிராசஸ் மூலமாக தக்க பதிலடி கொடுத்துள்ளார்.



இதுவரை கன்பெக்‌ஷன் ரும்க்குள் நடந்து வந்த இந்த நாமினேஷன் பிராசஸ் முதல் முறையாக அனைவரது முன்னிலையிலும் நடந்து இருக்கிறது. இந்த வாரம் எலிமினேஷனுக்கு மது (6) , கவின் (6)  ரேஷ்மா (4) சாக்க்ஷி (3)  மற்றும் அபிராமி (2) என ஐந்து பேர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.

சேரன் கடந்த வாரம் மக்களால் பாதுகாக்கப்பட்டுள்ளதால், அவரை இந்த வாரம் ரேஷ்மாவை தவிர யாரும் நாமினேட் செய்யவில்லை. ரேஷ்மா  நாட்டாமை டாஸ்க்கில் யார் மீதோ காட்ட வேண்டிய கோபத்தை என் மீது காட்டியதால் சேரனை நாமினேட் செய்கிறேன் என்று கூறினார். குறிப்பாக கடந்த நாட்களில் சேரன் மீது அதிருப்தியில் இருந்த கவின், சரவணன், சாத்தான் என்று கூறிய சாண்டி மாஸ்டர் ஆகியோர் யாரும் நாமினேட் செய்யவில்லை.

கவினை இந்த வாரம் பெண்களில் லாஸ்லியாவை தவிர ரேஷ்மா, அபிராமி, ஷெரின், மதுமிதா மற்றும் சாக்‌ஷி முதல் முறையாக கவினை நாமினேட் செய்தனர். அதுபோல ஆண்களில் சேரன் மட்டுமே நாமினேட் செய்தார். மேலும் சாக்‌ஷி தன்னை நாமினேட் செய்த காரணத்தால் அதிருப்தியில் இருத்தார். கவின் சென்ற வாரம் சாக்‌ஷியை நாமினேட் செய்தார் என்பது குறிப்பிடதக்கது.

மதுமிதாவை கடந்த இரண்டு வாரங்களுக்கு பிறகு நாமினேஷன் செய்யப்பட்டுள்ளார். ஆண்களில் கவின், சாண்டி, முகின், தர்ஷன் மற்றும் பெண்களில் அபிராமி, லாஸ்லியாவும் நாமினேட் செய்தனர்.



ரேஷ்மா முதல் முறையாக நாமினேட் செய்யப்பட்டுள்ளார். அவரை முகின், தர்ஷன், சேரன், கவின் ஆகியோர் நாமினேட் செய்தனர். முகின் ரேஷ்மாவை ஒருவரிடம் ஒரு விஷயத்தை கேட்டு அதனை மற்றொருவரிடம் சொல்லும் போது தவறாகவே சொல்கிறார் என்று கூறி நாமினேட்  செய்தார். ரேஷ்மாவும் முகின், தர்ஷன் ஆகியோர் தன்னை நாமினேட் செய்த காரணத்தால் கண்ணீர் சிந்தி அழுதார்.

சாக்‌ஷியை மதுமிதா, லாஸ்லியா, மற்றும் சரவணன் ஆகியோர் நாமினேட் செய்தனர். மேலும் கவினுக்கும் – சாக்‌ஷிக்கும் இடையிலான காதலுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சாக்‌ஷி மன அழுத்தம் காரணமாக ஷெரினிடம் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

அபிராமியை சாண்டி மற்றும் சரவணன் நாமினேட் செய்தனர். அபிராமி தன்னை இந்த வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளதால் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.


சாண்டி வெளியே வரும் போது அவருக்கு கண்டிப்பாக ஜெயில் காத்திருக்கிறது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இருந்து சாண்டி வெளியே வரும் போது அவருக்கு கண்டிப்பாக ஜெயில் காத்திருக்கிறது. 



பிக்பாஸ் ஓபன் நாமினேஷன் ; கதறி அழுத போட்டியாளர்கள்

வசந்த பாலன் தனது பெஸ்புக் இவ்வாறு பதிவிட்டுள்ளார் :

நடன இயக்குநர் சாண்டியை நான் அறிந்ததில்லை. ஜெயில் திரைப்படத்தில் ஒரு நடனக்காட்சி இருந்தது. ஜீவி நடன இயக்குநராக யாரை போடப்போகிறீர்கள் என்று கேட்டார்.பட்ஜெட்டுக்குள் யார் வருகிறார்கள் என்று பார்த்து போட வேண்டும் என்றேன். சர்வம் தாள மையம் திரைப்படத்தில் சாண்டி திறமையாக நடனக்காட்சிகள் அமைத்தார் என்று பரிந்துரை செய்தார்.

இசையமைப்பாளரைத் தாண்டி இப்ப ஹீரோ வேற..,
அவர் சொல் தட்ட முடியுமா. உடனே சாண்டியிடம் பேசுங்கள் என்று என் தயாரிப்பு மேலாளரிடம் கூறினேன். நம் பட்ஜெட்டுக்குள் வருவாரா என்று கேட்கச்சொன்னேன். சாண்டி எந்த நிபந்தனையின்றி எங்கள் பட்ஜெட்டிற்குள் எல்லாவற்றுக்கும் சம்மதித்தார். படப்பிடிப்புக்கு முன் இரண்டு முறை சந்தித்தேன்.நடனக்காட்சியை விவரித்தேன். அமைதியாக பதிலுரைத்தார். படப்பிடிப்பிலும் அமைதியாக தன் வேலையை பார்த்து கொண்டிருப்பார்.நான் தான் அதிகம் கத்திக்கொண்டு இருந்தேன். அந்த நாட்களில் எனக்கு அவரை பற்றி எந்த மதிப்பீடும் உருவாகவில்லை. இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் போது  எத்தனை ஜனரஞ்சகமான கலைஞன் என்று தோன்றுகிறது.

வாழ்த்துகள் சாண்டி.
வென்று வாருங்கள்.
ஜெயில் காத்திருக்கிறது.


நீங்கள் விடுத்த சவாலில் ஜெயித்து விட்டீர்கள். நீங்கள் போட்டியிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக என்னை வெளியேறிவிட்டீர்கள் - மீரா மிதுன்

மதுவுக்கும் , சேரனுக்கும் அநீதி இழைத்த கமல்ஹாசன்

கவின் சேரனுக்கு எதிராக செயல்பட எட்டு முக்கிய காரணங்கள்.

அபிராமி மற்றும் லோஸ்லியா தங்களை நடுநிலையாக காட்டி கொள்ள விரும்பி செய்யும் நாடகம்.

சேரன் சிறையில் அடைக்க படமால் இருக்க நாடகம் போடும் லோஸ்லியா

திங்கள், 29 ஜூலை, 2019

நீங்கள் விடுத்த சவாலில் ஜெயித்து விட்டீர்கள் - மீரா மிதுன்

நீங்கள் விடுத்த சவாலில் ஜெயித்து விட்டீர்கள். நீங்கள் போட்டியிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக என்னை வெளியேறிவிட்டீர்கள்


மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். முந்தைய நாள் நிகழ்ச்சியில் சேரனுக்கு ஆதரவான கருத்துக்களை கமல்ஹாசன் பேசும் போது பார்வையாளர்கள் மத்தியில் இருந்து பலத்த ஆரவாரம் எழுந்தது. அப்போதே மீராவுக்கு இந்த வாரம் வெளியேற்றப்படலாம் என சந்தேகம் எழுந்தது. அதனால் சாண்டிக்கும் மீராவுக்கு  ஒரு உரையாடல் நிகழ்ந்தது. ஆனால் அப்போதும் சேரன் மீதான தன்னுடைய கருத்தை மீரா மிதுன் மாற்றிக்கொள்ளவே இல்லை. பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த மீரா மிதுன் மிகவும் பதட்டமாக காணப்பட்டார். 

கமல்ஹாசன் நிகழ்ச்சியில் தோன்றி எலிமிமேஷனுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள போட்டியாளர்களை ஒவ்வொரையும் காப்பாற்றி, கடைசியில் மீராவை வாங்க பேசலாம் என அழைத்த உடன் பார்வையாளர்கள் மத்தியில் ஆரவாரம் எழுந்தது.  பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து மீரா வெளியேறிய போது சேரனை பார்த்து “நீங்கள் விடுத்த சவாலில் ஜெயித்து விட்டீர்கள். நீங்கள் போட்டியிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக என்னை வெளியேறிவிட்டீர்கள்” என்றார் மீரா. இதை கேட்டு அதிர்ந்து போன சேரன், நான் எப்ப சொன்னேன் என்று கூறி திகைத்து நின்றார். 

ஹவுஸ்மேட்களிடம் இருந்து விடைப் பெற்று பிக்பாஸ் மெடலை உடைத்து  பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பின்பு கமல்ஹாசனை சந்தித்தார் மீரா. அவரிடம் உரையாடிய கமல், தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது தான் மனிதன். அது போல உங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டால் நீங்களும் வெற்றியாளர் தான். என்று அறிவுரை கூறி வெளியேற்றினார்.







கவினால் பாதிக்கப்பட்ட லாஸ்லியா மீள்வாரா ?

கவினால் பாதிக்கப்பட்ட லாஸ்லியா மீள்வாரா ?



கவின் பிக்பாஸ் 3 சீசன் ஆரம்பம் முதலே நான்கு பேரை காதலிப்பதாக கூறி வந்தார். இதற்கு காரணமாக அவர் சொன்னது ஜாலியாக மற்றும் மக்கள் பொழுதுப்போக்கு அம்சமாக அமையும் என்று கூறினார். ஆனால் அதற்கான எல்லையை கவின் வகுக்க வில்லை,அனைவரிடம் நெருக்கம் காட்டி வந்தார். இதை தவறாக உணர்ந்த சாக்க்ஷி தன்னை காதலிப்பதாக உணர்ந்தார். இதனை தன் நெருங்கிய நண்பர்கள் ஆன ஷெரின் மற்றும் அபிராமியுடன் பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு கவின் காதல் ரசம் பேச்சை ரசிக்கவில்லை, அதனால் விலகி நட்புடன் மட்டும் பழகி வந்தனர். ஆனால் இதனை லாஸ்லியா அறியாமல் கவின் தன்னிடம் மட்டும் தான் அதிகம் நெருக்கம் காட்டுகிறார், என நம்பி பழகி வந்தார்.

மதுவுக்கும் , சேரனுக்கும் அநீதி இழைத்த கமல்ஹாசன்

கமல் வரும் நாளான எலிமினேஷன் நாட்களில் லாஸ்லியா பேசும் பொது மக்கள் செய்யும் ஆரவாரத்தை கவனித்த கவின் லாஸ்லியாவிடம் அதிகம்  நெருக்கம் காட்டினார். இதனை அறியாத லாஸ்லியாவும் கவினுடன் நெருக்கமாக நட்புக்கு மேல் புனித தன்மை பழகி வந்தார். பிக்பாஸ் ஹவுஸ்மேட்களும் கவினையும் லாஸ்லியாவையும் இணைத்து காலாய்த்து கொண்டு இருந்தனர். இதனை கவினும், லாஸ்லியாவும் உள்ளுர மகிழ்ந்தனர். லாஸ்லியா கவினை அண்ணா என்று அழைப்பதும், கவின் வருந்துவது போல நடித்து பின்பு காதலில் உருகுவது போன்று பேசுவதும், வாடிக்கையாக இருந்து வந்தது இதன் பொருட்டு லாஸ்லியா மனதளவில் கவினுடன் நெருங்கி நட்புக்கு மேல்புனித தன்மையுடன் பழகி வந்தனர்.

பில்டப் கொடுக்கும் கமல் ; மீராவிடம் புஸ்வானம் ஆவார்

கவின் லாஸ்லியாவின் ஜோடியை கண்டு சாக்க்ஷி பொசசிவ் ஆனார், சாக்க்ஷியும் கவின் தன்னிடம் காட்டிய நட்புக்கு மேல் புனித தன்மையுடன் லாஸ்லியாவிடம் நெருக்கம் காட்டி வருகிறார் என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்பு சில நேரங்களில் கோபம் அடைந்தும் மற்றும் மனம் உடைந்தும் காணப்பட்டார். இதனை பார்த்து கொண்டிருந்த ஹவுஸ்மேட்களும் கவின் மீது அதிருப்தி அடைந்தனர்.

கவின் சேரனுக்கு எதிராக செயல்பட எட்டு முக்கிய காரணங்கள்

இதனை உணர்ந்த கவினும் சாக்க்ஷியை சமாதானம் செய்ய முயற்சித்தார், இதனை லாஸ்லியாவும் தவறாக உணர்ந்தார். அதனால் லாஸ்லியா கவினுடன் சென்று “ நாம் பழக்கத்தால் சாக்க்ஷி மனம் வருந்துவதால் நீ என்னிடம் பேசமால் இரு”  என கூறி வந்தார். இதனால் இரண்டு லட்டு சாப்பிட நினைத்த கவினுக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. இது லாஸ்லியாவிற்கும் மனதளவில் பாதிப்பாக அமைந்தது. பின்பு லாஸ்லியாவிற்கு கவினுக்கும் சாக்க்ஷிக்கும் இருக்கும்  நட்புக்கு மேல் புனித தன்மையுடன் இருந்த உறவு அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் கவினுடன் பேசமால் தவிர்த்தார்.


பின்னர் கவின் அழுது புலம்பி இரண்டு நாள் சோகமாக சுற்றி  லாஸ்லியா, சாக்க்ஷி இருவரையும் சமாதானம் செய்தார். மேலும் இருவரிடமும் நட்பாக பழகி வருவதாக கூறினார். லாஸ்லியாவும் கவினிடம் மன்னிப்பு கூறினார். ஆனால் லாஸ்லியா நட்புக்கு மெல் புனித உறவால் பாதிக்கப்பட்டு கடந்த வாரம் மிகவும் சோகமாக காணப்பட்டார், டாஸ்கில் கவனமின்றி மனம் போன போக்கில் செயல் பட்டார். இதனை கமலும் நேற்று சுட்டி காட்டினார். இன்று அபிராமியுடன் பேசுகையில் கூறியதாவது தான் மனதளவில் பாதிக்க ப்பட்டுள்ளதாகவும் அதில் இருந்து மீண்டுவர தான் முயற்சித்து வருகிறேன். என்று கூறினார். பழைய லாஸ்லியாவை காண மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

அபிராமி மற்றும் லோஸ்லியா தங்களை நடுநிலையாக காட்டி கொள்ள விரும்பி செய்யும் நாடகம்.

வாரம் ஒருவரை டார்கேட் செய்யும் மீரா மிதுன் , இந்த வாரம் பலியான சேரன்

சேரன் சிறையில் அடைக்க படமால் இருக்க நாடகம் போடும் லோஸ்லியா


ஞாயிறு, 28 ஜூலை, 2019

மதுவுக்கும் , சேரனுக்கும் அநீதி இழைத்த கமல்ஹாசன்

மதுவுக்கும் , சேரனுக்கும்  அநீதி இழைத்த கமல்ஹாசன்
"உண்மை ஒரு நாள் வெளிவரும் "; கமலுக்கு தண்ணி காட்டிய மீரா 




கிராம சபை கூட்டம் தீராத பல பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமை கொண்டது. அதனால், தான் பிக் பாஸ் வீட்டிற்குள் கிராம பஞ்சாயத்து நடைபெறும் விதமாக டாஸ்க் தந்தாக கமல் கூறி நிகழ்ச்சி ஆரம்பித்தார்.

பில்டப் கொடுக்கும் கமல் ; மீராவிடம் புஸ்வானம் ஆவார்

ஆனால் பிக்பாஸ் வீட்டில் ஒரு பிரச்சனை கூட கமலஹாசனால் தீர்க்க முடியவில்லை, முதலில் பிக்பாஸ் வீட்டில் கோபம் அடைந்தவர்களை நடித்து காட்டினார். பின்பு மிகுந்த கோபம் தனக்கு சிரிப்பை வர வைத்து என்று கூறினார். ஆனால் மதுவை கழிவறை செல்லும் முன் (heavy)யாக டான்ஸ் செய்ய சொல்லியாதால் வந்த கோபத்தை கமலஹாசன் புரிந்து கொள்ளவில்லை, என் நாம் அவசரமாக மலம் அல்லது சிறுநிர் கழிக்கும் முன் இடையூர் செய்து குதிக்க அல்லது ஆட சொன்னால் நாம் எப்படி உணர்வோம், அதை பார்த்து சிரித்தால் நமக்கு கோபம் வாராத ஒரு வேளை மது அவர்களுக்கு மாதவிடாய் பிரச்சனை இருந்தால் கூட(heavy)யாக டான்ஸ் செய்ய சொன்னால் கூட கோபம் வாராத இதை உணராத கமல் நகைச்சுவை இருந்தது கூறினார். மேலும் தன்னை குள்ளம் என்று கூறி கிண்டல் செய்தால் சில முறை ஜாலியாக எடுத்து கொள்ளலாம் தொடர்ந்து கிண்டல் செய்தால் யாராக இருந்தாலும் கோபம் வரும். இதை சாண்டி மாஸ்டரிடம் கமலஹாசன் உணர்த்த தவறினார்.
கடைசியாக மீரா மிதுன் மற்றும் சேரன் ஆகியோரது பஞ்சாயத்தில் வந்து நின்றது. சேரனுக்காக வக்காளத்து வாங்கி பேசிய கமல்ஹாசன். பின்னர் மீராவை நடித்து காட்ட சொன்னார், அவரும் நடித்து காட்டினார், பின்பு மிகுந்த எதிர்பார்ப்பு இடையில் குறும்படத்தை பொட்டு காட்டினார், இதனை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் பார்த்தனர். ஹவுஸ்மேட்ஸ் அனைவரிடம் கருத்தையும் கமல்ஹாசன் கேட்டு அறிந்தார், வீட்டில் அனைவரும் சேரன் மீது தவறு இல்லை கூறினர் ஆனால் மீரா மிதுன் இதனை எற்கவில்லை.
தான் தவறாக தான் உணர்ந்தேன் என்று தன் நிலையில் இருந்தார்.

குறும்படத்தின் பயன் என்ன ? மீரா மிதுன் குற்றம் சாட்டிய அன்றே ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சேரன் மீது தவறு இல்லை என்று தான் கூறினர். மக்கள் அனைவரும் சேரன் மீது எந்த தவறும் இல்லை டிவியில் பார்த்தனர். அது தவிர மீரா மிதுன் குறும்படத்தை சமுக வலைத்தளங்களில் மற்றும் (hotstar) இல் பல முறை மக்கள் பார்த்தனர். குறும்படத்தை பொட்டது மீரா தன் தவறை உணர்வதற்கு தான். ஆனால் அவரோ “உண்மை ஒரு நாள் வெளிவரும்” என்று கூலாக கூறி கமல்ஹாசனுக்கு தண்ணி காட்டினார். சேரனிடம் கடைசி வரை சிறு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. சேரன் தன் மனைவி பிறந்த நாளில் கூட தன் மீது சுமத்திய அபாண்ட குற்றசாட்டிற்கு மீராவை சிறு வருத்தம் கூட தெரிவிக்க செய்ய முடியவில்லை. 
மீரா அவர்கள் சேரன் தன்னிடம் தவறாக நடந்தாக உணர்தேன் இறுதிவரை கூறி உண்மை ஒரு நாள் வெளிவரும் என்று தெரிவித்து குறும்படத்திற்கு எந்த பயனும் இல்லை என்பதை உணர்த்தினார். மேலும் அவர் இந்த வாரம் அவரை வெளியேற்றினாலும். வேளியே வந்து ( youtube channel ) மற்றும் சமுக வலைதளங்களில், சேரன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், உண்மை ஒரு நாள் வெளிவரும் பல பேட்டிகளில் கூறுவார். என்பது குறிப்பிட்தக்கது.

கமல்ஹாசன் நாளை மீராவிடம் தன் தவறை உணர்த்த தாமல் வெளியேற்றினால் சேரனுக்கு பிக்பாஸ் ஹவுஸ் அநீதி இழைத்தாக கருதப்படும்.