வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

கவினின் விளையாட்டு ; யாருக்கு வினையானது ?

கவினின் விளையாட்டு; யாருக்கு வினையானது ?




கவின் - சாக்‌ஷி - லாஸ்லியா ஆகியோரது முக்கோண காதல் விவகாரம் பிக்பாஸ் வீட்டில் இப்போது விஸ்வருபம் எடுத்துள்ளது. கவின் ஆரம்பித்த விளையாட்டை சாக்‌ஷி முடிக்க விடாமல் தொடர்கிறார். இது மற்ற ஹவுஸ்மேட்ஸுக்கும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யார் மீது தவறு ?

யாரை ஆதரிப்பது யாரை எதிர்ப்பது ? யார் மீது தவறு என்று புரியாமல் ஹவுஸ்மேட் திணறி வருகிறார்கள். தொடர்ந்து இந்த விவகாரத்தில் எழுந்து வரும் பிரச்னையால் பிக்பாஸ் வீட்டில் புயல் வீசி வருகிறது. மேலும், கடந்த வாரம் நடந்த பிரச்னைகளை மீண்டும் தட்டி எழுப்பும் வகையில் மொட்டை கடுதாசி டாஸ்க்கை வடிவமைத்தார் பிக்பாஸ். 

ஹவுஸ்மேட் பொருத்தவரை கவின் சாக்‌ஷியிடம் நெருக்கம் காட்டினார். அதை கவின் நட்பு என்ற பெயரில் காதலுக்கான அச்சாணியை அமைத்தார். அப்போது லாஸ்லியா மீது ஈர்ப்பு ஏற்பட கவின் அவர் பக்கம் சாய்ந்தார். இது சாக்‌ஷிக்கு பொறுக்கவில்லை. இவ்வாறு இருபெண்களுக்கான உணர்வுகளில் கவின் விளையாடியது உறுதியானது.

மொட்டை கடுதாசி டாஸ்க்

நேற்று வழங்கப்பட்ட மொட்டை கடுதாசி டாஸ்க்கில் கவின் மீதான கோபத்தை வெளிப்படையாகவே காட்டினார் சாக்‌ஷி. லோஸ்லியாவிடம் கவின் நெருங்கி பழகியதை மறைமுகமாக பேசினார். இதனால் கோபமடைந்த லோஸ்லியா சாக்‌ஷிக்கு எதிராக பேசினார். கவினுக்கும் தனக்கும் இருந்தது நட்பு தான். அதை தாண்டி எங்கள் இருவருக்கும் எதுவுமில்லை. இதற்கு மேல் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றார் லோஸ்லியா.

இதே பிரச்னை இன்றைய நிகழ்ச்சியிலும் தொடர்கிறது. அதன்படி, சாக்‌ஷிக்கு ஆதரவாக ஹவுஸ்மேட் கவினிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அதற்கு கவின், சாக்‌ஷி தன்னை வைத்து நாடகம் ஆடுகிறார். எல்லாம் முடிந்துவிட்டதாகவே பேசுகிறார். 

கவினுக்கு எதிராக ஹவுஸ்மேட் 

சாக்‌ஷிக்கு ஆதரவாக பேசிய ரேஷ்மா கவின் மற்றும் லாஸ்லியாவின் நட்பு சாக்‌ஷியின் மனம் புண்படுவதற்கு காரணம் அமைகிறது என்றார். அப்போது பேசிய சரவணன் ஒருவர் மீது அன்பாக இருந்து விட்டு பின்பு விலகி, மற்றொருவர் மீது கவனம் செல்லுத்தினால். அது சாக்‌ஷி மனம் காயபடுவது இயல்பானது தான். இது மனிதர்களுக்கு மட்டுமில்லாமல், மிருகங்களுக்கும் இந்த நிலை ஏற்படத்தான் செய்கிறது என்றார். 

இதற்கிடையில் பேசும் தர்ஷன், கமல் பேசியதை சுட்டி காட்டி ஒன்றுமில்லாமல் லோஸ்லியாவின் கையை பிடித்துக் கொண்டு தற்காக நள்ளிரவு 2 மணி வரை பேச வேண்டும் என்று கவினை பார்த்து கேட்கிறார். இதை ஆமோதிக்கும் மது, லோஸ்லியாவிடம் நள்ளிரவு 2 மணி வரை பேசும் வகையில் அப்படியென்ன நட்பு என்று ஆவேசமாக கேட்கிறார். 


லாஸ்லியாவின் மனநிலை

இப்படி ஒட்டுமொத்த பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸும் கவினுக்கு எதிராக திரும்பினர், இதுவரை கவினுடன் இருந்த சாண்டி மாஸ்டர், சரவணன் ஆகியோர் சாக்‌ஷி ஆதரித்தனர். என்பது உணர்ந்து கொள்ள முடிகிறது. லாஸ்லியாவும் சாக்‌ஷியின் நடவடிக்கையால் மிகவும் வருந்தி நிற்கிறார். பின்பு சாக்‌ஷிக்கு ஏற்பட்ட அநீதிக்கு காரணம் நான் தான். எல்லோரும் தர்மத்தின் பக்கம் நில்லுங்கள். அதனால் அபிராமியை தவிர மற்றவர் யாரும் தயவு செய்து என்னிடம் யாரும் பேசாதீர்கள், என்று கூறி வெளியேறினார்.

அர்த்தமற்ற விளையாட்டு

கடைசியாக் பேசும் கவின், நடப்பு வாரத்தில் தான் எலிமினேட் இல்லை என்றாலும், வரும் வாரத்தில் அனைவரும் தன்னை நாமினேட் செய்ய வேண்டும் 7 வாரங்கள் இருக்க வேண்டும் என்ற முடிவில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தேன். அதன்படி இருந்துவிட்டேன். இதனால் என் கடன்கள் அனைத்தும் அடைந்துவிடும். அதனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற எனக்கு உதவுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.



அர்த்தமற்ற விளையாட்டால் காயபட்டது மூன்று மனங்கள் மட்டுமல்ல, அவர்கள் குடும்பங்களும் தான். காதலுக்கும் நட்புக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கம் சொல்லி விளங்க வைப்பது எளிதல்ல.கவின் விளையாட்டாக ஆரம்பித்து யாருக்கு வினையாகும் என்பது வரும் நாட்களில் தெரியும்.


ALSO READ THIS



ALSO READ THIS: 
கவின், லாஸ்லியா, சாக்‌ஷியை காதல் படுத்தும் பாடு ? - ஒரு ஷைக்காலஜி ரிப்போர்ட்



மதுவுக்கும் , சேரனுக்கும் அநீதி இழைத்த கமல்ஹாசன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக