வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

பிக்பாஸ் வீட்டில் தொடரும் வனிதாவின் ஆட்டம்

பிக்பாஸ் வீட்டில் தொடரும் வனிதாவின் ஆட்டம்


பிக்பாஸ் வீட்டில் வனிதா வழக்கம் போல காலை முதலே ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் சிண்டு முடியும் வேலையில் ஈடுபட்டார். சேரன், மது, மற்றும் ஷெரீனிடம் லோஸ்லியா, தர்ஷன் குறித்தும், கோள்மூட்டி பிளவுபடுத்தி வருகிறார். முகின், தர்ஷன், மற்றும் லோஸ்லியா அவர்களை குறிவைத்து வனிதா செயல்படுவதாக தோன்றுகிறது. அதை தொடர்ந்தே காய்களை நகர்த்துகிறார் வனிதா.

ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் அபிராமி உடல் நலிவடைந்து காணப்பட்டார். இதை கண்ட லோஸ்லியா வீட்டின் தலைவரான சாண்டி மாஸ்டரிடம் முறையிட்டார். சாண்டி மாஸ்டர் பிக்பாஸ் அறிவிப்பதற்குள் சாவியை எடுத்து வந்து அபிராமியை வெளியே வரும்படி அழைத்தார். ஆனால் அபிராமி வர மறுத்தார். அப்போது சாண்டிக்கும், கஸ்தூரிக்கும் சின்ன வாக்குவாதம் நடந்தது. சேரனும் அனைவரும் சேர்ந்து பிக்பாஸிடம் கோரிக்கை வைக்கலாம் சாண்டி ஆலோசனை கூறினார். அதை தொடர்ந்து அபிராமியை விடுக்குவிக்குமாறு பிக்பாஸ் உத்தரவிட்டார். 

சேரன் இதற்கிடையில் தர்ஷன், கவின், சாண்டி, முகின் ஆகியோரை வாங்க, போங்க, சார் என்று குறிப்பிட்டு அழைக்கத் தொடங்கினார். இதை கவனித்த நான்கு பேரும் தங்களுக்குள் பேசி கொண்டனர். உடனே கவின் சேரனை குறை கூற ஆரம்பித்தார். ஆனால் ஆண்கள் யாரும் சேரனிடம் சென்று பேசவில்லை. 

ஆண்கள் பெண்களும் பிரிந்திருப்பதை உணர்ந்த பிக்பாஸ் அதற்கு ஏற்றார் போல ’சபாஷ் சரியான போட்டி’ டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த விவாத டாஸ்க்கில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக பிரிந்தனர். இது மேலும் பிரச்னையை கூட்டியது.

வனிதாவும் முகின், தர்ஷனை குறிவைத்து காத்து கொண்டு இருந்தார்.  ஆண்கள், பெண்களில் சிறந்த தோழமை எண்ணம் கொண்டவர்களில் யார் என்ற விவாதத்தில் பேசும் போது அபிராமி, முகின் வாதத்தில்  தர்ஷன் முகின் ஆதரவாக கருத்து தெரிவித்தார். இதற்க்காக காத்திருந்த வனிதா தர்ஷனை சீண்டினார். உனக்கு ஏன் கோபம் வரவேண்டும், வாதத்தில் ஈடுபட்டார், இது மேலும் பிரச்னையை கூட்டியது.

ஒருவழியாக விவாதம் டாஸ்க் முடிவடைந்தது.  சிறந்த தலைவர்களாக இருந்தவர்கள் யார் ? சமைக்க தெரிந்தவர்கள் யார் ? தொடர்பான விவாதங்களில் பெண்கள் அணியினர் வெற்றி பெற்றனர். சிறந்த தோழமை எண்ணம் கொண்டவர்களில் யார் ?  ஆண்கள் அணியினர் வெற்றி பெற்றனர்.

பிறகு வனிதா, கஸ்தூரிக்கும் சிறு சலசலப்பு ஏற்பட்டது.  உடனே வனிதா ஆண்களிடம் வந்து  கஸ்தூரியை கேலி செய்தார். அப்போது அங்கே வந்த கஸ்தூரியை நையாண்டி செய்து பாடல் பாடினார்கள். இதனால் கஸ்தூரி எரிச்சலுடன் காணப்பட்டார். கவின் மற்றும் சாண்டி கஸ்தூரிக்கு காக்கா என்று பட்ட பெயர் வைத்து அவ்வப்போது காகம் போல் கரைந்து கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் வனிதாவின் போக்கைக் கண்டு ஆத்திரமடைந்த முகின், அவரை கன்னத்தில் அறைந்து விட்டதாகவும்,  முகின் தன்னை கன்னத்தில் அறைந்ததால் உடனே பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதா வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. அதனால் முகின் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் உண்மையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக