வியாழன், 1 ஆகஸ்ட், 2019

விஜய் சேதுபதி கூறியதால், நான் இங்கே நிகழ்ச்சிக்கு வந்தேன். மனம் திறந்த சேரன்

விஜய் சேதுபதி கூறியதால், நான் இங்கே நிகழ்ச்சிக்கு வந்தேன். மனம் திறந்த சேரன்

பிக்பாஸ் நேற்றுபோட்டியாளர்களுக்கு மொட்டை கடுதாசி டாஸ்க்கை வழங்குகிறார்.  ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸுக்கும் மொட்டைக் கடுதாசி கிடைக்கிறது. அதில் சேரன் தனக்கான கடிதத்தை பிரித்து படித்தார்.

அதை தொடர்ந்து சேரனிடம் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கான காரணம் அடங்கிய கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர்,  நான் பெயர், புகழ், விருதுகள் பல வாங்கியிருந்தாலும், இறுதியாக நான் சுவைத்த வெற்றி என்பது ஆட்டோகிராஃப் தான். அதன் பிறகு ஒவ்வொன்றும் போராடி நான் சினிமா பயணத்தை ஓட்டினேன். தொடர்ந்து எல்லாம் தோல்வி படம் தான். இதனால் 4 வருடங்களாக சினிமாவில் நான் இல்லை சினிமவை தவிற வேறு எதுவும் எனக்கு தெரியாது. 

விஜய் சேதுபதி கூறியதால், நான் இங்கே நிகழ்ச்சிக்கு வந்தேன்.

நடிகர் விஜய் சேதுபதி தான் என்னை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போகும்படி சொன்னார். ‘பட்டி தொட்டி முதல் வெளிநாடுகள் வரை பல கோடி மக்கள் பார்க்கும் இந்நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் மக்களுடனான தொடர்பை நெருக்கப்படுத்திக் கொள்ள முடியும் என்று ஆலோசனை கூறினார்.

மேலும் சேரன் கூறியதாவது என் வாழ்க்கையில் ஆரம்பக்கட்டம் முதல், சினிமா எடுத்தது, சொந்த வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள், கடன், என பல்வேறு அனுபவங்களை வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. அந்த அனுபவத்தை மக்கள் முன்னிலையில் கூறும் போது அது அவர்களுக்கு பாடமாக அமையும் எனக் கூறி விஜய் சேதுபதி தான் இந்நிகழ்ச்சி போகச் சொன்னார்.

விஜய் சேதுபதி, சேரன் கூட்டணி 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் கையில் ஏகப்பட்ட படங்கள் உள்ளன. விஜய் சேதுபதி , சேரன் இருவரும் இணைந்து நிச்சயம் படம் திரைப்படம் ஒன்றை உருவாக்குவோம் என்று கூறியிருந்தார்கள். என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க






















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக