சனி, 31 ஆகஸ்ட், 2019

பிக்பாஸிடம் மொக்கை வாங்கிய லாஸ்லியா

பிக்பாஸிடம் மொக்கை வாங்கிய லாஸ்லியா 



இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி காலையில் கவின் உடல்நிலை சரியில்லாததால் மாத்திரை கொண்டு வந்து கொடுத்த லாஸ்லியாவிற்கு கவின் நன்றி கூறினார். இதற்கு எதற்கு நன்றியெல்லாம் என்று லாஸ்லியா கேட்டார். மேலும் லாஸ்லியா கவினிடம் எதையும் கண்டு கொள்ளாமல் இருக்குறீங்க. பார்த்தும் பார்க்காத மாதிரி போறீங்க, நீங்கள் எப்போதும் போல் இருக்க வேண்டும். கேம் விளையாடுங்கள், சிரித்துக் கொண்டே இருங்கள் என்று அறிவுரை வழங்கினார். பின்னர் வருத்தத்துடன் நான் இனிமேல் உங்களிடம் பேச மாட்டேன் என்று லோஸ்லியா தெரிவித்தார். நீண்ட நேரம் வெயிலில் உட்க்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

பின்னர் லாஸ்லியா தர்ஷன் பேசிக் கொண்டிருந்தனர். இதில் தர்ஷனை வாடா போடா என்று கூறினார். ஆனால் கவினை மட்டும் அவர் இவர் என்று கூறியதைக் கேட்டு சேரன் மற்றும் தர்ஷன் கிண்டல் செய்து சிரித்தனர். 

லாஸ்லியா மற்ற போட்டியாளர்களிடம் பேசினார், நான் மட்டும் தான் இந்த வீட்டில் ரூல்ஸ் எல்லாவற்றையும் ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கிறேன். மைக்கை சரியாக மாற்றவில்லை என்றால் கூட பிக் பாஸ் என்னிடம் எதுவும் கூறியதில்லை என்று கூறியதைக் கேட்டு தர்ஷன் வீட்டில் ரூல்ஸ் பின்பற்றாமல் இரண்டு தடவை ஜெயிலுக்கு போனீங்க என்று கேட்டார். அதற்கு லாஸ்லியா மற்றவர்களை ஜெயிலுக்கு அனுப்பி அதன் மூலம் சந்தோஷப்படும் ஆள் நான் இல்லை என்று லோஸ்லியா கூறிக்கொண்டே இருக்கும் போது பிக் பாஸ் லோஸ்லியா மைக்கை சரியாக மாட்டுங்கள் என்று கூறியதைக் கேட்டு மற்ற போட்டியாளர்கள் நக்கலாக சிரித்தனர். 


லாஸ்லியா தொடர்ந்து மைக்கை பயன்படுத்தாமல் இருந்த லோஸ்லியாவை, மைக் பயன்படுத்தும்படி பிக் பாஸ் கூறினார். இதில், தர்ஷன் என்னது நீங்க தான் ரூல்ஸ் பாலோ பண்ணுறேன் என்று சொன்னீங்கள் இப்போ எதுக்கு பிக் பாஸ் உங்களை சொல்கிறார் என்று கேள்வி கேட்க, பிக் பாஸ்க்கு எனது பெயரை சொல்ல வேண்டும் என்று ஆசை இருப்பதால், அவர் எனது பெயரை கூறுகிறார் என்று லோஸ்லியா சமாளித்தார். லாஸ்லியாவை தொடர்ந்து பிக்பாஸ் காலாய்த்து வந்தார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக