செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

தீதும் நன்றும் பிறர்தர வாரா; முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். - கமல் கூறியதன் காரணம்

தீதும் நன்றும் பிறர்தர வாரா
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். கமல் கூறியதன் காரணம் இப்போது தான் புரிந்தது.
சரவணனுக்கு அநீதி இழைத்த பிக்பாஸ்.


கடந்த வாரங்களில் மீரா மிதுன் மற்றும் சேரனின் நாட்டாமை டாஸ்க்கில்  சேரன் தன்னை தவறாக பிடித்து இழுத்ததாக மீரா தெரிவித்த புகாரை அவர் விசாரித்தார். ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அப்போது பேசிய கமல், மீரா போல பேசிக்கொண்டிருந்தால் எந்த பெண்ணும் அரசு பேருந்தில் செல்ல முடியாது. பெண்களை உரச வேண்டும் என்று சிலர் வருபவர்களும் உண்டு என்று கமல் சொன்ன போது, அதை கையை உயர்த்தி ஆமோதித்தார் சரவணன்.

ஏன் கையை உயர்த்தீனர்கள் என கமல்ஹாசன் அவரிடம் கேட்ட போது, நான் கல்லூரிக் காலத்தில் அப்படி செய்திருக்கிறேன் என்று பொதுவெளியில் கூறினார் சரவணன். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கமல்ஹாசன், சரவணன் அதையும் தாண்டி புனிதராகிவிட்டார் என்று கூறினார். அதற்கு பிக்பாஸ் பார்வையாளர்கள் பலரும் கை தட்டி சிரித்தனர்.

நான் கல்லூரி காலத்தில் அப்படி செய்திருக்கிறேன் என்று பொதுவெளியில் கூறி அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தார். சரவணனின் இந்த செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இது தொடர்பாக  சரவணன் பேசிய வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட பாடகி சின்மயி, பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதை சரவணன் பேசியது பார்வையாளர்களுக்கு நகைச்சுவையாக உள்ளது. அந்த கூட்டத்தில் இருந்த பெண்களும் தைட்டுகின்றனர். சரவணன் செய்தது பாலியல் சீண்டல் என்று காட்டமாக விமர்சித்தார். 

இதற்கு எதிரொலியாக, கடந்த நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது பேசிய பிக் பாஸ் பெண்களை இழிவாகவோ, அவமரியாதை செய்வதையோ இந்நிகழ்ச்சி ஒரு போதும் அனுமதிக்காது. அதனால், மக்களிடையே மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். இதையடுத்து பேசிய சரவணன், தன்னைப் போன்று இனிமேல் யாரும் செய்யக்கூடாது என்பதற்காகவே தான் தான் அவ்வாறு பேசியதாகவும், இனிமேலும், பிக் பாஸ் வீட்டிலேயேயும் சரி, வெளியிலும் சரி இது போன்று யாரும் செய்யக் கூடாது என்பதைத் தான் நான் கூற வந்தேன். ஆனால், அதற்குள் என்னால் முழுவதுமாக பேச முடியாமல் போய்விட்டது. எது எப்படியோ நான் அவ்வாறு பேசியதற்காக நான் பகிரங்கமாக  மன்னிப்பு கேட்கிறேன் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சர்ச்சையின் எதிரொலி காரணமாக சரவணன் போட்டியிலிருந்து வெளியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. கல்லூரி காலத்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதை கண்டிக்கும் விதமாக சரவணனை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தயாரிப்புக் குழுவினர் நேற்று வெளியேற்றினர். போட்டியாளர்களிடம் தெரிவிக்காத வகையில் அவர் மற்றொரு கதவு வழியாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

அவரை மெயின் டோர் வழியாக அனுப்பாமல், கன்ஃபெஷன் ரூமில் இருந்த மற்றொரு கதவு வழியாக சரவணனை வெளியே அனுப்பினார் பிக்பாஸ். அவருடைய வெளியேற்றம் குறித்து மற்ற போட்டியாளர்கள் யாருக்கும் எதுவும் தெரியாது. அதன் எதிரொலி இன்று பிக்பாஸ் வீட்டில் எதிர் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக