32 லட்சம் பண மோசடி : கவினின் தாயார் ராஜலட்சுமிக்கு 5 ஆண்டுகள் சிறை
(கவின்) கவின் ராஜ் , கனா காணும் காலங்கள் என்ற தொடரில் மாணவர் கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு சரவணன் மீனாட்சி தொடரின் 2ம் பாகத்தில் வேட்டையன் என்ற ரோலிலும் நடித்துள்ளார். சின்னத்திரையைத் தொடர்ந்து வெள்ளித்திரையிலும், கால்பதித்துதார். நட்புன்னா என்னான்னு தெரியுமா ? திரைபடத்தில் காதநாயகனாக நடித்துள்ளார்.
தற்போது பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காதல் மன்னன் ஆக வலம் வரும் நடிகர் கவின் (கவின் ராஜ் ) திருச்சி கே.கே நகர் பகுதியை சேர்ந்தவர். கவின் தாத்தாவும் அருணகிரி, தமயந்தி தம்பதிகள் இவருடைய மகன் சொர்ண ராஜன், மகள் ராஜலட்சுமி மற்றும் மருமகள் ராணி. ஆகியோர் இணைந்து அந்தப் பகுதியில் சீட்டு கம்பெனி ஒன்றை அனுமதி இல்லாமல் 1998 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை நடத்தி வந்ததாக தெரிகிறது. ராஜலட்சுமி என்பவர் நடிகரும் பிக்பாஸ் சீசன் போட்டியாளருமான கவினின் தாயார் ஆவார்.
சீட்டு கம்பெனியில் பலர் சீட்டு கட்டி வந்துள்ளனர். இதில் 34 நபர்கள் கட்டிய பணம் 32,28,000 ஆயிரம் திருப்பி தரவில்லை. எனவும் கடந்த 2007 ஆம் ஆண்டு பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு விசாரணை திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில் மேற்படி வழக்கு விசாரணையில், கடந்த வாரம் சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. இதுதொடர்பான குறுக்கு விசாரணையில் இருதரப்பு வாதங்கள் முடிந்தநிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் நடிகர் கவின் ராஜின் பாட்டி, மற்றும் தாய் ராஜலட்சுமி உள்ளிட குற்றவாளிகள் அனைவருக்கும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு குற்றவாளிகள் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கவும், அந்தத் தொகையை வழக்கு தொடர்ந்த 2007ஆம் ஆண்டு முதல் 5 சதவிகித வட்டி விகிம் கணக்கிட்டு ரூ.55.10 லட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்.கவின் குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது குறித்து பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கவினுக்கு தெரிய வந்த பிறகு அவர் உடனடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவாரா என்பது தெரியவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக