சனி, 3 ஆகஸ்ட், 2019

அன்புள்ள சேரன் அவர்களுக்கு உடனே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள்

அன்புள்ள சேரன் சார் அவர்களுக்கு வணக்கம்!




இயக்குநர் வசந்த பாலன் தனது பெஸ்புகில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் :

உங்களுக்கு இது கேட்காது என்று தெரியும்.காற்றின் ரகசியப் பக்கங்களில்  இந்த செய்தி ஊடேறி  உங்களைத்தொடும் என்றே நம்புகிறேன். உங்களின் படங்களின் ரசிகனாய் சொல்கிறேன்.வித்யாகர்வத்துடன் நீங்கள் இருந்த இடம் மிக கம்பீரமானது. பருந்து பறக்கும் வானத்தின் உயரத்தில் சஞ்சரிப்பவர் நீங்கள். பாரதிகண்ணம்மா, பொற்காலம், ஆட்டோகிராப் என அற்புதமான இலக்கியப்படைப்புகள்.

திரையில் இலக்கியம் செய்ய ஆசைப்பட்டு அதில் வென்று காட்டியவர் நீங்கள்.
காலத்தின் கரையான் உங்களையும் உங்கள் படங்களையும் அழித்துவிட முடியாது.இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் பாலுகேந்திராவுடன் 
ஒப்பிடக்கூடிய திரை ஆளுமை நீங்கள். பிக்பாஸ் அரங்கில் இருப்பவர்களுக்கு 
உங்களின் உயரம் தெரியாது. நீங்களும் நடிகர் சரவணனும் ஒன்று என்று தான் நினைப்பார்கள். அறியாமை என்ன செய்ய..


உடனே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள். இயக்குனர் சங்கப் பதவியில் கௌரவக்குறைவு ஏற்பட்ட போது  உடனே அதை விட்டு வெளியேறினீர்கள். ஆகவே கலைஞன் எந்த நிலையிலும் அவனின் மேன்மையை  எந்த கீழ்மைக்கும் உட்படவிடுதல் வேண்டாம்.

ALSO READ  THIS : 
கவின், லாஸ்லியா, சாக்‌ஷியை காதல் படுத்தும் பாடு ? - ஒரு ஷைக்காலஜி ரிப்போர்ட்
ALSO READ THIS : 
கவின், லாஸ்லியா, சாக்‌ஷியை காதல் படுத்தும் பாடு ? - ஒரு ஷைக்காலஜி ரிப்போர்ட். 
ஒரு ஆணின் நினைவை பெண்களின் மனதிலிருந்து போராடிப் பிய்த்து எறிவது என்பது நடவாத காரியம். 


ALSO READ THIS: 
சாண்டி வெளியே வரும் போது அவருக்கு கண்டிப்பாக ஜெயில் காத்திருக்கிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக