வெள்ளி, 6 செப்டம்பர், 2019

உண்மையைச் சொல்லணும்னு நான் நினைக்கிறேன் ; கேஸ் போடுவோம்'னு மிரட்டுறாங்க - மதுமிதா

உண்மையைச் சொல்லணும்னு நான் நினைக்கிறேன் கேஸ் போடுவோம்'னு மிரட்டுறாங்க - மதுமிதா 


பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியாக மதுமிதா நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சக போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், ஆனால் தொகுப்பாளர் கமல்ஹாசனும் கூட அதனை கண்டிக்கவில்லை எனவும் தபால் மூலம் அவர் புகார் அளித்துள்ளார். தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி 56-வது நாளில் வலுக்கட்டாயமாக போட்டியிலிருந்து வெளியேற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில்  'ஒண்ணு நீ இங்க இருக்கணும்.. இல்லாட்டி நாங்க இருக்கணும் டீ' எட்டு போட்டியாளர்கள் தன்னை கட்டாயப்படுத்தி போட்டியிலிருந்து வெளியேற்றியதாகவும். ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கத்தியால் தன் கையை அறுத்துக் கொண்டார். விதியை மீறி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு ஷோவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.  

அந்த எட்டு பேர்  தந்த மன அழுத்தத்தை மற்றும் நடந்த உண்மையைச் சொல்லணும்னு நான் நினைக்கிறேன். அதனாலதான் 'ஒண்ணு நீங்க பத்திரிகையாளர்களை சந்திக்க ஏற்பாடு பண்ணுங்க, இல்லை நானே பேட்டி தாரேன். 

ஆனால் நிகழ்ச்சி தொடர்பா மதுமிதா வாழ்நாள் முழுவதும் எங்கயுமே பேட்டி தரக்கூடாதுன்னு விஜய் டிவி நிர்வாகத்துல இருந்து மெயில் அனுப்புறாங்க. நீங்க பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி  எங்கேயும் எதையும் பேசக்கூடாது. மீறினால் அக்ரிமென்ட் படி கேஸ் போடுவோம்னு மிரட்டுறாங்க. ஆனா, நிகழ்ச்சியில் கலந்துகிட்டதுக்காக டிவி நிர்வாகம் எனக்குப் பேசின சம்பளம் முழுசையும் இப்போ கொடுத்திட்டாங்க. ஆனால் வாயைக் கட்டிப் போட்டு வச்சிருக்காங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக