தேசம் சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் 2047ல், அயராது உழைக்கவும், வாய்ப்புகளைப் பயன்படுத்தவும், புதிய இந்தியாவுக்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும். என்று மாணவர்களுக்கு குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் அழைப்பு விடுத்தார். சவால்களில் இருந்து வாய்ப்புகளை உருவாக்க மாணவர்களை ஊக்குவித்த அவர், "உங்கள் மனதில் ஒரு அற்புதமான யோசனையை நிறுத்துவதை விட ஆபத்தானது எதுவுமில்லை. உங்கள் திறமையை வெளிக்கொணர்ந்து உங்கள் திறனைப் பயன்படுத்திக் கொண்டு யோசனைகளைச் செயல்படுத்துங்கள்’’ என்று கேட்டுக்கொண்டார்.
சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் 70வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத்தலைவர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். விழாவின் போது, பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான குடியரசு துணைத்தலைவர், பிரபல கல்வியாளர் டாக்டர் சுதா என். மூர்த்தி, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ரஞ்சன் கோகோய் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார்.