சனி, 16 மார்ச், 2019

40 தொகுதிகளிலும் தனித்து போட்டி - ஜெ.தீபா அதிரடி

40 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கப் போவதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவர் ஜெ.தீபா அதிரடி


சென்னையில் (மார்ச் 15) செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் நிலைப்பாடு குறித்து விளக்கிய தீபா, “வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவுள்ளோம். இதுவரையில் ஏன் இந்த முடிவை எடுக்கவில்லை என்று கேட்கிறார்கள். கூட்டணி தொடர்பாக நாங்கள் அதிமுக மூத்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவந்த காரணத்தால் இந்த அறிவிப்பை வெளியிடவில்லை. மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கக் கூடாது, கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்று தமிழக முழுவதுமுள்ள தொண்டர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக