ஈஸ்வரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈஸ்வரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 28 ஜூன், 2020

முதலமைச்சர் தமிழகத்தில் உயிரிழப்பு குறைவு என்று பேசியிருப்பது தமிழக மக்களுக்கு வருத்தமளிக்கிறது.- E.R.ஈஸ்வரன்


தமிழகத்தில் ஒரு நாளைக்கு எவ்வளவு பேர் உயிரிழந்தால் உயிரிழப்பு அதிகம் என்று முதலமைச்சர் ஏற்றுக்கொள்வார்.

தமிழக அரசு உயிரிழப்புக்களை மெத்தனமாக எடுத்துக்கொள்வது வேதனையளிக்கிறது. கொரோனா தொற்று ஏற்பட்ட ஆரம்பத்தில் ஒருவர் அல்லது இருவர் இறந்த போது தமிழக முதலமைச்சரும், சில அமைச்சர்களும் தமிழகத்தில் உயிரிழப்பு குறைவுதானே என்று பேசி தாங்கள் திறமையாக செயல்படுகிறோம் என்று சொன்னார்கள். அரசின் கவனக்குறைவால் இப்போது ஒவ்வொரு நாளும் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். இப்போதும் முதலமைச்சர் தமிழகத்தில் உயிரிழப்பு குறைவு என்று பேசியிருப்பது தமிழக மக்களுக்கு வருத்தமளிக்கிறது. ஒரு நாளைக்கு தமிழகத்தில் எவ்வளவு பேர் இறந்தால் இது அதிக உயிரிழப்பு என்று முதலமைச்சர் ஏற்றுக் கொள்வார். 

வியாழன், 20 ஜூன், 2019

எதிர்க்கட்சிகள் என்று வித்தியாசம் பார்க்க கூடிய நேரம் இதுவல்ல - ஈஸ்வரன்

தமிழகத்தின் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க அரசாங்கத்தோடு கைகோர்த்து பணியாற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் தயாராக இருக்கிறோம்.
ஈஸ்வரன் அறிக்கை
(கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி)

தமிழகத்தில் நிலவுகின்ற வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் தமிழக மக்களை நிலைகுலைய செய்திருக்கிறது. நகரங்கள், கிராமங்கள் என்று வித்தியாசமில்லாமல் அனைத்து பகுதிகளுமே தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. கல்லூரிகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் என்று அனைத்து நிறுவனங்களுமே தண்ணீர் பற்றாக்குறை காரணமாக எப்போது மூடப்படும் என்கின்ற பயத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.