"கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி - பேச்சுவார்த்தை மூலம் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்" - திரு. ஏ.கே.எஸ்.விஜயன்
தமிழக விவசாயிகளின் மிகப்பெரிய ஆதாரமாக இருப்பது தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களாகும். அதன் முக்கியத்துவங்களை அறிந்திருந்ததால்தான் மண்ணின் மைந்தர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், ‘உள்ளாட்சியில் நல்லாட்சி தந்த’ கழகத் தலைவர் தளபதி அவர்களும் கழக ஆட்சியின்போது தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களின் அதிகார வரம்புகள் அனைத்தையும் விவசாயத்திற்கு ஆதரவாகவும் விவசாயிகளுக்குப் பயன்தரும் வகையிலும் அமைத்துத் தந்திருந்தார்கள்.

