விமானப்படை மேற்கு கட்டுப்பாட்டு மையத்தின் விமானப்படை கமாண்டர்களின் இரண்டு நாள் மாநாடு தில்லியில் ஜூன் 24 மற்றும் 25ம் தேதிகளில் நடைப்பெற்றது. கொவிட் தொற்று காரணமாக இந்த மாநாடு நேரடியாகவும், காணொலி மூலமும் நடைப்பெற்றது. சில கமாண்டர்கள் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் ஆர்கேஎஸ் பதாரியா தலைமை விருந்தினராக கலந்துக் கொண்டார். அவரை விமானப்படை மேற்கு கட்டுப்பாட்டு மைய தலைமை அதிகாரி ஏர் மார்ஷல் வி.ஆர். சவுத்திரி வரவேற்றார்.
