புதன், 6 நவம்பர், 2019

யூரியா தட்டுப்பாட்டால் விவசாயம் பாதிப்பு: தாராளமாக கிடைக்க நடவடிக்கை தேவை! - Dr. S. ராமதாஸ்

யூரியா தட்டுப்பாட்டால் விவசாயம் பாதிப்பு:
தாராளமாக கிடைக்க நடவடிக்கை தேவை!
- Dr. S. ராமதாஸ் அறிக்கை
(நிறுவனர், பாமக.)

காவிரி பாசன மாவட்டங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் யூரியா உரத்திற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் சம்பா நெல் உள்ளிட்ட பயிர்களின் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், யூரியா தட்டுப்பாட்டைப் போக்க போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது மிகவும் வருத்தமளிக்கிறது.

நீட் தேர்வில் ஊழல் மோசடிகள்; ஏழைகளுக்கு எட்டாத மருத்துவக் கல்வி - வைகோ அறிக்கை

நீட் தேர்வில் ஊழல் மோசடிகள்; 
ஏழைகளுக்கு எட்டாத மருத்துவக் கல்வி

- வைகோ அறிக்கை.
(பொதுச்செயலாளர், மதிமுக.)

மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு குறித்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாண்புமிகு கிருபாகரன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவு பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது. நீட் தேர்வு என்பது ஒடுக்கப்பட்ட,

தாய்மொழி பாதுகாப்பு - இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

“தாய்மொழி பாதுகாப்பு - இந்தி திணிப்பு எதிர்ப்பு
தென் மாநிலங்களின் மாநாடு”

- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)


இந்திய நாடு பல தேசிய இனங்களைக் கொண்டது. இதை அரசியல் சட்டமும் அங்கீகரித்துள்ளது. அதனடிப்படையிலேயே அரசியல் சட்டத்தின் முதல் பிரிவு இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று வரையறுத்திருக்கிறது. இந்த வரையறுப்பு இந்தியாவின் பன்முகத் தன்மையை அங்கீகரிக்கிறது. எனவேதான், வேற்றுமையில் ஒற்றுமை என்பது நம் நாட்டின் பெருமைமிகு அடையாளமாக போற்றப்படுகிறது.

பசுமைத் தாயகம் சார்பில் பிளாஸ்டிக் கழிவுக்கு அரிசி வழங்கும் திட்டம்! - Dr. S. ராமதாஸ்

பசுமைத் தாயகம் சார்பில் பிளாஸ்டிக்
கழிவுக்கு அரிசி வழங்கும் திட்டம்!
- Dr. S. ராமதாஸ் அறிக்கை
(நிறுவனர், பாமக.)

தமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு, 10 மாதங்கள் நிறைவடைந்து விட்டாலும் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதுமட்டுமின்றி பிளாஸ்டிக் குப்பைகளின் உருவாக்கமும் அதிகரித்து வரும் சூழலில், அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகள் பற்றி நினைத்துப் பார்க்கவே அச்சமாகவுள்ளது.

அரசு மருத்துவர்களிடம் பேச்சு நடத்தி போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும்! - DR. ராமதாஸ்

அரசு மருத்துவர்களிடம் பேச்சு நடத்தி
போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும்!
- DR. ராமதாஸ் அறிக்கை.
(நிறுவனர், பாமக.)

ஊதிய உயர்வு, மருத்துவ மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் கடந்த 24&ஆம் தேதி முதல் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தம் நான்காவது நாளாக இன்றும் நீடிக்கிறது. இந்தப் போராட்டத்தால் அப்பாவி ஏழை நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படாதது வருத்தமளிக்கிறது.