வெள்ளி, 26 ஜூன், 2020

உத்தேச மின்சார (திருத்தச்) சட்ட மசோதா 2020 மூலம், மின்துறையில் பெரும் மாற்றத்திற்கு இந்தியா தயாராகி வருகிறது.- ஆர்.கே.சிங்


உத்தேச மின்சார (திருத்தச்) சட்ட மசோதா 2020 மூலம், மின்துறையில் பெரும் மாற்றத்திற்கு இந்தியா தயாராகி வருகிறது

காணொளிக்காட்சி மூலம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய மின்துறை மற்றும் புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு.ஆர்.கே.சிங், மின்துறையில் மேற்கொள்ளப்பட உள்ள சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன், இது தொடர்பான சந்தேகங்கள் மற்றும் வதந்திகளுக்கும் விளக்கமளித்தார். ஆட்சியாளர்கள் மக்களுக்குப் பணியாற்றுவதற்காக உள்ளவர்கள் என்பதால், நுகர்வோர் நலன் சார்ந்தே இந்தச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய ஆட்சிப் பணி குடிமைப் பட்டியல் 2020 மற்றும் அதன் மின்-பதிப்பை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார்.


இந்திய ஆட்சிப் பணி குடிமைப் பட்டியல் 2020 மற்றும் அதன் மின்-பதிப்பை மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று வெளியிட்டார். சரியான பணிக்கு சரியான அலுவலரை தேர்ந்தெடுக்க இந்த சிறப்பான பட்டியல் உதவும் என்றும், பல்வேறு பதவிகளை வகிக்கும் அலுவலர்களைப் பற்றி பொது மக்கள் தெரிந்து கொள்வதற்கு இது ஒரு முக்கியமான தகவல் ஆதாரம் என்றும் அவர் தெரிவித்தார். 

ஆரோக்கியமான உலகளாவிய கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் பழங்காலக் கடற்பாசிகளின் பங்கு


ஆரோக்கியமான உலகளாவிய கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் பழங்காலக் கடற்பாசிகளின் பங்கு

பழங்கால நுண்ணிய  கடல் பாசிகள் (Coccolithophores) பற்றி துருவ மற்றும் கடல் ஆராய்ச்சி தேசிய மையத்தின் (National Centre for Polar and Ocean Research - NCPOR) தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தென்னிந்தியப் பெருங்கடல் பகுதியில் கால்சியம் கார்பனேட் (CaCO3) செறிவு குறைந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. டையடோம்கள் எனப்படும் மற்றொரு ஒற்றை செல் பாசிகளின் செறிவு அதிகரிப்பதே, கால்சியம் கார்பனேட் குறைவுக்குக் காரணம். இது கொக்கோலிதோபோர்களின் வளர்ச்சி, எலும்புக்கூடு அமைப்பு மற்றும் கடல் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை பாதிக்கும்.

வியாழன், 25 ஜூன், 2020

ஆர்ட்டிக் கடலில் பனிக்கட்டி குறைவது சுற்றுச்சூழலுக்கு நல்லதல்ல


ஆர்ட்டிக் கடலில் பனிக்கட்டி குறைவது சுற்றுச்சூழலுக்கு நல்லதல்ல: 

துருவப்பகுதி மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் எச்சரிக்கை
சர்வதேச அளவில் புவி வெப்பமாதலின் காரணமாக ஆர்ட்டிக் கடலின் பனிக்கட்டி அளவானது பெருமளவில் குறைந்து வருவதாக துருவப்பகுதி மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (National Centre of Polar and Ocean Research –NCPOR) கண்டறிந்துள்ளது.  கடலின் பனிக்கட்டி அளவு குறைவது என்பது உள்ளூர் நிலையில் நீர் ஆவியாதல், காற்றின் ஈரப்பதம், மேகமூட்டம் மற்றும் மழையின் அளவு ஆகியவற்றை அதிகரிக்கச் செய்கிறது.  பருவநிலை மாறுதலை மிக நுட்பமாகத் தெரிவிக்கின்ற குறியீடாக ஆர்ட்டிக் கடலின் பனிக்கட்டி விளங்குகிறது.  இதில் ஏற்படும் தாக்கமானது பருவநிலை அமைப்பின் பிற கூறுகளின் மீதும் எதிர் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பழங்கற்காலப் பருவநிலை குறித்த வரலாற்றை சிந்து நதியின் சரளைக்கல் வடிவவியல் வெளிப்படுத்துகிறது.


இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாகச் செயல்படும் டேராடூனில் உள்ள இமாலய புவி அமைப்பியலுக்கான வாடியா நிறுவனம் (Wadia Institute of Himalayan Geology - WIHG) லடாக்கின் இமாலயா பகுதியில் சிந்து நதியின் பழங்கற்காலப் பருவநிலை குறித்த வரலாற்றை தடம் அறிந்துள்ளது.  கால்வாய்ப் படிவுகளில் ஒன்றின் மேல் ஒன்றாக உள்ள சரளைக் கற்களின் வடிவவியல் தரவுகளின் உதவியோடு இது கண்டறியப்பட்டுள்ளது.