செவ்வாய், 11 ஜனவரி, 2022

பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் உலக அளவில் முன்னணியில் உள்ள இந்தியா, நடப்பு ஆண்டில் 198.48 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்துள்ளது.

 2021-ம் ஆண்டில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சகத்தின் பல்வேறு முன்முயற்சிகள், சாதனைகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்த சில முக்கிய அம்சங்கள் வருமாறு:

தேசியப் பொருளாதாரத்திற்கு கால்நடைத் துறை பங்களிப்பதோடு, 80 மில்லியன் கிராமப்புற குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் உலக அளவில் முன்னணியில் உள்ள இந்தியா, நடப்பு ஆண்டில் 198.48 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்துள்ளது, இதன் மதிப்பு ரூ. 8.32 லட்சம் கோடிக்கும் அதிகமாகும். இருப்பினும், உலகின் பெரும்பாலான பால்வள நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய பண்ணை விலங்குகளின் உற்பத்தித்திறன் குறைவாக உள்ளது. குறைந்த உற்பத்தித்திறன் காரணமாக, கறவை மாடுகளை வளர்ப்பதன் மூலம் விவசாயிகளுக்கு லாபகரமான வருமானம் கிடைப்பதில்லை.

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

பல்கலைக்கழகளால் கைவிடப்பட்ட கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள்: தமிழக அரசே ஊதியத்தை வழங்க வேண்டும்! - DR.அன்புமணி ராமதாஸ்



பல்கலைக்கழகளால் கைவிடப்பட்ட கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள்: தமிழக அரசே ஊதியத்தை வழங்க வேண்டும்! - DR. அன்புமணி ராமதாஸ்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து, அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 10 கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த  4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதைக் கண்டித்தும், உடனடியாக ஊதியம் உள்ளிட்ட உரிமைகளை வழங்க வலியுறுத்தியும் திருவரங்கம் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் மேற்கொண்டு  வரும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது.

கோவைக் கல்விக் கூடங்கள் ஆர்.எஸ்.எஸின் ஷாகா வன்முறை பயிற்சிக் கூடமா - மைதானமா? - கி.வீரமணி



காக்கிச் சட்டைக் காவல்துறை -காவிகளுக்கு வெண்சாமரமா?

கோவை மாநகரில் தொடர்ந்து பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ். என்னும் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பின் ஷாகா என்னும் வன்முறைப் பயிற்சி நடந்து கொண்டுள்ளது.
கே.எம்.சி.எச். என்னும் செவிலியர் பள்ளியில்கூட பெண்களுக்கு வன்முறைப் பயிற்சி அளிக்கத் திட்டமிட்ட நிலையில், எதிர்ப்பின் காரணமாக பள்ளி நிர்வாகம் அங்கு ஷாகா பயிற்சி அளிப்பதற்கு அனுமதி மறுத்துவிட்டது - சில வாரங்களுக்கு முன்பு.

புதன், 5 ஜனவரி, 2022

நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமல்ல, அமித்ஷா ஒட்டுமொத்த தமிழக மக்களை அவமதித்து, இழிவுபடுத்தியிருக்கிறார்.- கே.எஸ்.அழகிரி


 தமிழகத்தில் உள்ள கிராமப்புற ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை பாழடித்து, மருத்துவ கனவை சிதைத்து வருகிற நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுகிற வகையில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை அனைத்து எதிர்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இக்கோரிக்கையை வலியுறுத்துவதற்காக குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து நாடாளுமன்ற தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்கள் மனு வழங்க முயற்சி செய்தனர். ஆனால், கொரோனா தொற்றை காரணம் காட்டி குடியரசுத் தலைவர் சந்திக்க மறுத்துவிட்டார். அவரிடம் வழங்க வேண்டிய மனுவை அவருடைய செயலாளரிடம் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

திங்கள், 3 ஜனவரி, 2022

புதிய உறுப்பினர்கள் சேர்ப்பீர்! எந்நாளும் கழகம் வென்றிட, தொடர்ந்து மேலும் மேலும் வலிவும் பொலிவும் சேர்ப்பீர்! - மு.க.ஸ்டாலின் கடிதம்.

 "புதிய உறுப்பினர்கள் சேர்ப்பீர்!  எந்நாளும் கழகம் வென்றிட, தொடர்ந்து மேலும் மேலும்  வலிவும் பொலிவும் சேர்ப்பீர்!" -  மு.க.ஸ்டாலின் கடிதம்.

புதிய உறுப்பினர்கள் சேர்ப்பீர்!

நம் உயிருடன் கலந்த தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆழமாகச் சிந்தனை செய்து அற்புதமாக வடிவம் தந்த  திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கம், அன்றும் இன்றும் என்றும் இளைஞர் பட்டாளத்தின் நம்பிக்கைக்குரிய அரசியல் இயக்கம் என்பது வரலாற்றுப் பேருண்மை. பேரறிஞர் அண்ணா அவர்களும் கலைஞர், நாவலர், பேராசிரியர் உள்ளிட்ட அவரது நம்பிக்கைக்குரிய தம்பிமார்களும் நமது இந்த இயக்கத்தைத் தொடங்கியபோது எழுச்சியும் எண்ணத் தெளிவும் மிக்க இளைஞர்களாக இருந்தவர்கள். அவர்களின் பின்னே ஆயிரமாயிரமாய்த் தொடங்கி இலட்சோப இலட்சமாக இளைஞர்கள் திரண்டு அணி வகுத்தார்கள். திராவிட இன உணர்வை - தமிழ்மொழிச் சிந்தனையை - சமூகநீதியை - சுயமரியாதையை - பகுத்தறிவை நாடெங்கிலும் நாள்தோறும் முழங்கினார்கள். தேர்தல் அரசியலுக்கு வர விரும்பாத தந்தை பெரியாரின் இலட்சியங்களை, பேரறிஞர் அண்ணாவும் அவரது ஆற்றல் மிக்க தம்பிமார்களும் அரசியல் இயக்கத்தின் வழியே, மக்களைத் திரட்டி, ஆட்சியைப் பிடித்து, தழுவிய இலட்சியங்களை முழுவதுமாக நிறைவேற்றிடத் தொடங்கினர். இளைஞர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் இயக்கமாகத் தி.மு.கழகம் இமயமென உயர்ந்து நின்றது.