அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ள நீர் மின் திட்டங்கள்/ மின் நிலையங்களுக்கான முன்னெச்சரிக்கை அமைப்பு முறையை அமல்படுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் மத்திய எரிசக்தி அமைச்சகமும், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ-வும் கையெழுத்திட்டுள்ளன. எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் திரு அலோக் குமாரும், டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தின் தலைவர் மற்றும் பாதுகாப்புத் துறையின் (ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு) செயலாளருமான டாக்டர் சமீர் வி. காமத்தும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.




