உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் அறிவுறுத்தலின்படி நீரிழிவு நோய்க்கான ஒருங்கிணைந்த சித்த மருத்துவ புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு சென்னை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் திருவனந்தபுரம் மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் இன்று திறக்கப்பட்டது.
இந்நிறுவனங்களில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இந்த ஒருங்கிணைந்த சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதற்கான நிகழ்ச்சியை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தினுடைய தலைமை இயக்குநர் பேராசிரியர் மரு. திரு என்.ஜெ. முத்துக்குமார் தொடங்கி வைத்து இந்நிகழ்வின் நோக்கம் மற்றும் குறிக்கோளை பற்றி விளக்கினார்.
