பல்கலைக்கழக கெளரவ விரிவுரையாளர்களுக்கு நிலுவைத்தொகை மற்றும் ஊதியத்தொகையை அரசு உடனடியாக வழங்க ஆவண செய்ய வேண்டும்!
தமிழகத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் 2006 ஆண்டு முதல் 10 உறுப்பு மற்றும் மாதிரி கல்லூரிகள் துவங்கப்பட்டன. இதில் பணிபுரிவதற்கு பல்கலைக்கழகத்தால் பத்திரிக்கை விளம்பரம் கொடுக்கப்பட்டு முறையாக குழு அமைத்து நேர்காணல் நடத்தி தேர்வு செய்யப்பட்டு,பணி நியமன சான்று வழங்கப்பட்டு கெளரவ விரிவுரையாளர்கள் P.hD.,முடித்திருந்தால் 15,000, NET/SLET 13,000,M.Phil 12,000 என ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு பல்கலைக்கழகத்தால் 12 -மாதங்களும் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆட்சியில் 110 விதியின் கீழ் தமிழகத்திலுள்ள 41 உறுப்புக்கல்லூரிகளையும் அரசே எடுத்து நடத்தும் என அரசு அறிவித்து ,அரசு ஊதியம் வழங்கும் வரை அந்தந்த பல்கலைக்கழகங்களே அந்த கல்லூரி விரிவுரையாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்றும் அதற்கான நிதியினை அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என அரசு அறிவுறுத்தியது.
