பாரதி பிரவீன் பவார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரதி பிரவீன் பவார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 மார்ச், 2022

ஒவ்வொரு மாநிலத்திலும், எய்ம்ஸ் மருத்துவமனை அமையவேண்டும் என்பது பிரதமரின் தொலைநோக்கு சிந்தனையாகும். - இணைஅமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார்


 கல்யாணியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் எம்பிபிஎஸ் 2021ஆம் ஆண்டு வகுப்புத்  தொடக்க விழாவில்  காணொலி காட்சி வாயிலாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணைஅமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் தலைமை வகித்தார்.

125 எம்பிபிஎஸ் மாணவர்களுடன்   2021-ஆம் ஆண்டு 3-வது கல்வியாண்டை தொடங்கும் கல்யாணி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின்  மாணவர்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் வாழ்த்துத் தெரிவித்ததுடன்  தமது மகிழ்ச்சியையம் மத்திய இணை அமைச்சர் வெளிப்படுத்தினார்.

புதன், 27 அக்டோபர், 2021

கொவிட் பெருந்தொற்று மனித உயிர்கள், பொருளாதாரங்கள் மற்றும் சுகாதார அமைப்புகளை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது.- பாரதி பிரவீன் பவார்,


 புதுப்பிக்கப்பட்ட காசநோய் எதிர்வினைக்கான சர்வதேச சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசியப் பகுதிக்கான உயர்மட்ட கூட்டத்தின் தொடக்க நிகழ்வில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் டாக்டர் பாரதி பவார் உரையாற்றினார்.

நிகழ்வில் உரையாற்றிய மத்திய இணை அமைச்சர், அனைத்து ஆறு பிராந்தியங்களிலும் தென்கிழக்கு ஆசியப் பகுதியிலேயே காசநோயின் தாக்கம் அதிகளவில் உள்ளது என்று கூறினார். "பல நூற்றாண்டுகளாக இறப்புகளின் முக்கிய ஆதாரமாக இது இருந்து வருகிறது, எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் மலேரியாவை தற்போது இது தாண்டியுள்ளது. இந்த இறப்புகளில் பெரும்பாலானவை 15-45 வயதுக்குட்பட்ட பொருளாதாரத்தை உருவாக்கும் இளைஞர்களிடையே ஏற்படுகின்றன, இதன் விளைவாக அதிக பொருளாதார மற்றும் சமூக விளைவுகள் ஏற்படுகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.

புதன், 8 செப்டம்பர், 2021

பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை, தடுப்பூசி செலுத்துதல், கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் என்ற 5 தூண்களின் மீது தொற்றை எதிர்த்து போராடும் இந்தியாவின் யுக்தி உருவாக்கப்பட்டது.- டாக்டர் பாரதி பிரவீன் பவார்


 கொவிட் தொற்று காலத்தில் இந்தியாவின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய நாடுகள் பிராந்திய அலுவலகம் (சியரோ)  கூட்டத்தில், மத்திய அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் உரையாற்றினார்.

சியரோ அமைப்பின் 74-வது கூட்டத்தில், இந்தியா சார்பில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு பேசியதாவது:

புதன், 11 ஆகஸ்ட், 2021

மருத்துவச் சேவைகள், உள்கட்டமைப்பு வசதி, தடுப்பூசித் திட்டம், பொது சுகாதார முறை உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்காக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை.- டாக்டர் பாரதி பிரவீன் பவார்



பிரதமரின் தற்சார்பு ஆரோக்கிய இந்தியா திட்டம்:

ரூ. 64,180 கோடி மதிப்பில் 6 ஆண்டு காலத்திற்கு (நிதியாண்டு 2025-26 வரை) பிரதமரின் தற்சார்பு ஆரோக்கிய இந்தியா திட்டம் அமல்படுத்தப்படும் என்று 2021-22 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் தேசிய சுகாதார இயக்கத்திற்கும் கூடுதலானதாகும். நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்திற்குள் இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள முக்கிய நடவடிக்கைகள்:

புதன், 4 ஆகஸ்ட், 2021

சுகாதாரத் துறையின் பல்வேறு திட்டங்கள்: மத்திய இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மாநிலங்களவையில் தகவல்


 மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:

புதிய குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கை:

மக்கள் தொகையை நிலைபடுத்துவதற்கானக் கொள்கைத் திட்டங்களுக்கிணங்க, குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. 2005-ஆம் ஆண்டில் தேசிய சுகாதார இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இந்தத் திட்டம் கூடுதல் வலுப்பெற்றது. தேசிய சுகாதாரக் கொள்கை, 2017, மக்கள் தொகையை நிலைப்படுத்துவதற்குக் கொள்கை சார்ந்த வழிகாட்டுதல்களை அளிக்கிறது. குறிப்பிட்ட 7 மாநிலங்களின் 146 மாவட்டங்களில் கருத்தடைச் சாதனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது.

சனி, 24 ஜூலை, 2021

நீட் மற்றும் இதர பொது நுழைவுத் தேர்வுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை.- மத்திய இணையமைச்சர் DR.பாரதி பிரவீன் பவார்


 நீட் மற்றும் இதர பொது நுழைவுத் தேர்வுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்தார்.

அவர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

நீட் மற்றும் இதர பொது நுழைவுத் தேர்வுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை. நீட் (முதுநிலை மற்றும் நீட் (இளநிலை) 2021 தேர்வுகள் 2021 செப்டம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெறவுள்ளன.