பாஜக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாஜக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 ஜனவரி, 2026

பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், சுகாதாரத் துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தங்கள் இந்தியாவில் ஏற்பட்டு வருகின்றன - திரு. சி.பி. ராதாகிருஷ்ணன்

 பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், சுகாதாரத் துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தங்கள் இந்தியாவில் ஏற்பட்டு வருகின்றன - திரு. சி.பி. ராதாகிருஷ்ணன்

வியாழன், 14 நவம்பர், 2024

வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள் - கடற்படை விமான செயல்பாடுகள் மற்றும் விமான பாதுகாப்பு கருத்தரங்கு.


 கிழக்கு கடற்படை தலைமையகத்தின் கீழ் விசாகப்பட்டினத்தில் உள்ள ஐஎன்எஸ் தேகாவில் நவம்பர் 12-13 தேதிகளில் 2024 ஆம் ஆண்டிற்கான விமான பாதுகாப்பு கருத்தரங்கு மற்றும் வருடாந்திர கடற்படை விமான பாதுகாப்பு கூட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. விமான பாதுகாப்பு கருத்தரங்கு நவம்பர் 12 அன்று தொடங்கியது, தலைமை விருந்தினராக, கிழக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

செவ்வாய், 18 ஏப்ரல், 2023

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா கலாச்சார மறுமலர்ச்சியின் சகாப்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. - பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்


 பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா கலாச்சார மறுமலர்ச்சியின் சகாப்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சோம்நாத்தில் சௌராஷ்டிரா- தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்   இதனைத் தெரிவித்தார்.  நாட்டின் நூற்றாண்டு கால பழமை மிகுந்த பாரம்பரியங்களும், கலாச்சாரங்களும்  மக்களை இணைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் கூறினார்.  இந்தியாவின் ஆழமாக வேரோடிய பாரம்பரியங்கள் அதன் வலிமையையும், ஒற்றுமையை பிரதிபலிப்பதுடன்,  எந்த சவாலையும் எதிர்நோக்கி உறுதியுடன் நிற்கும் திறனைப் பெற்றுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு மட்டும் உரிய சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருந்திருக்காது.- மத்திய இணையமைச்சர் DR. ஜிதேந்திர சிங்


 ஜம்மு - காஷ்மீரில் சர்தார் வல்லபாய் பட்டேலினால் முடிக்கப்படாத பணியை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றியுள்ளதாக மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற "ஒரே பாரதம் உன்னத பாரதம்" என்ற விழாவில் தலைமையேற்றுப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், சுதந்திரத்திற்குப் பிறகு 560-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைப்பதில் சர்தார் வல்லபாய் பட்டேல் முக்கியப் பங்காற்றியதாகவும், துரதிர்ஷ்டவசமாக, ஜம்மு - காஷ்மீரைக் கையாள பட்டேலுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு மட்டும் உரிய சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தால், இந்தியாவின் வரலாறு வேறுவிதமாக இருந்திருக்கும் என அவர் கூறினார். ”பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருந்திருக்காது, ஜம்மு - காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும், இந்த பிரச்சினை இவ்வளவு  ஆண்டுகளாக நீடித்திருக்காது” என்றார்.

சனி, 15 ஏப்ரல், 2023

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி மூலம் நாட்டை மேம்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.-மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங்


 அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் நாட்டை மேம்படுத்த புதிய யோசனைகளைக் கொண்டு வரவும், இந்தியாவை பாதுகாப்பான மற்றும் வலிமையானதாக மாற்றுவதற்கான முயற்சிகளில் அரசுக்கு உதவுமாறும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 2023 ஏப்ரல் 15-ம் தேதியன்று உதய்பூரில் ஜனார்தன் ராய் நகர் ராஜஸ்தான் வித்யாபீடத்தின் (பல்கலைக்கழகமாக கருதப்படும்) 16-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் உரையாற்றினார். வருங்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

திங்கள், 26 டிசம்பர், 2022

வீர பாலகர் தினம், பாஞ்ச் பிராண்ஸ் எனப்படும் ஐந்து தீர்மானங்களுக்கான உயிர் சக்தி போன்றதாகும்.- பிரதமர் திரு நரேந்திர மோடி


 வீர பாலகர் தினத்தையொட்டி புதுதில்லி மேஜர் தயான்சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியில் இன்று  பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் போது 300 சிறார்கள் பங்கேற்று சப்த கீர்த்தனைகள் பாடிய நிகழ்ச்சியிலும் பிரதமர் கலந்து கொண்டார்.  சுமார் 3000 குழந்தைகள் பங்கேற்ற அணிவகுப்பையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். குரு கோபிந்த் சிங்கின்  பிரகாஷ் பூரப் தினமான 2022 ஜனவரி 9-ந் தேதி அன்று   ஒரு அறிவிப்பை வெளியிட்ட பிரதமர், டிசம்பர் 26-ந் தேதி வீர பாலகர் தினமாக கொண்டாடப்படும் என்று தெரிவித்தார். ஸ்ரீ குரு கோபிந்த் சிங்கின் மகன்களான சாஹிப்ஜாதா பாபா ஜோராவர் சிங் மற்றும் சாஹிப்ஜாதா பாபா ஃபதேசிங்கின் தியாகத்தை குறிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

சனி, 30 ஜூலை, 2022

கடந்த எட்டு ஆண்டுகளில், நாட்டின் நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பணிகள் துரித கதியில் செய்யப்பட்டுள்ளன.- நரேந்திர மோடி


 பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நடைபெற்ற முதலாவது  அகில இந்திய மாவட்ட சட்ட சேவைகள் அதிகாரிகள் கூட்டத்தின் தொடக்க அமர்வில் உரையாற்றினார். இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதி யு.யு.லலித், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, இணையமைச்சர் திரு எஸ்.பி.சிங் பாகேல், மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள், மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் நிர்வாகத் தலைவர்கள்  மற்றும் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையங்களின்  தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 'இலவச சட்ட உதவிக்கான உரிமை' குறித்த நினைவு அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிட்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இது விடுதலையின் அமிர்த கால நேரம். அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் தீர்மானங்களுக்கான நேரம் இது. எளிதாக தொழில் செய்வது போலவும், எளிதாக வாழ்வது போலவும், நாட்டின் இந்த அமிர்த யாத்திரையில் எளிதாக நீதி கிடைத்தலும் சமமாக முக்கியமானது, என்றார்.

ஞாயிறு, 24 ஜூலை, 2022

ஒற்றுமை, அமைதி, சமூக நல்லிணக்கம் ஆகிய இந்திய நாகரிக விழுமியங்களை மேம்படுத்த, ஆன்மீக மறுமலர்ச்சி அவசியம் – குடியரசு துணைத்தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு


 ஒற்றுமை, அமைதி மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகிய  உலகளாவிய விழுமியங்களை இந்திய நாகரிகம், நிலைநிறுத்துகிறது என்று குடியரசு துணைத்தலைவர்  திரு எம். வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.  இந்தப் பழமையான மதிப்புகளைப் பாதுகாக்கவும் பரப்பவும் ஆன்மீக மறுமலர்ச்சி அவசியம் என அவர் கூறினார்.

குடியரசு துணைத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ,  “பாடு, நடனமாடு,  பிரார்த்தனை செய் - ஸ்ரீல பிரபுபாதாவின் உத்வேகம் தரும் கதை” என்ற புத்தகத்தை வெளியிட்ட பின்னர் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், சுவாமி பிரபுபாதா போன்ற சிறந்த துறவிகள் மற்றும் ஆன்மீக குருக்களிடமிருந்து உத்வேகம் பெறவும், அவர்களின் குணங்களை இளைஞர்கள் உள்வாங்கவும் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். சிறந்த மனிதர்களாக மாற ஒழுக்கம், கடின உழைப்பு, பொறுமை மற்றும் கருணை ஆகியவை முக்கியம் எனக்கூறிய அவர்,  "நீங்கள் எப்போதும் சாதி, பாலினம், மதம் மற்றும் பிராந்தியம் என்ற குறுகிய கருத்துக்களுக்கு அப்பால் உயர்ந்து சமுதாயத்தில் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் அமைதியைக் கொண்டுவர உழைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். இஸ்கான் நிறுவனர் ஸ்ரீல பிரபுபாதரின் இந்த வாழ்க்கை வரலாற்று நூலை  டாக்டர் ஹிந்தோல் சென்குப்தா எழுதியுள்ளார்.

செவ்வாய், 19 ஜூலை, 2022

புதுமை கண்டுபிடிப்புகள் முக்கியமானதாக உள்ள நிலையில், அது உள்நாட்டில் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.-பிரதமர் திரு நரேந்திர மோடி


 பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் நடைபெற்ற  கடற்படை புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தற்சார்பு அமைப்பின் ‘ஸ்வாவ்லம்பன்’ கருத்தரங்கில்  உரையாற்றினார்.

இந்திய கடற்படையில் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் ‘ஸ்பிரிண்ட் சேலஞ்சஸ்’ திட்டத்தையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.  அப்போது பேசிய அவர், 21-ம் நூற்றாண்டில் இந்திய பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு கொள்கை  மிக முக்கியமானது என்று கூறினார்.

புதுமை கண்டுபிடிப்புகள் முக்கியமானதாக உள்ள நிலையில், அது உள்நாட்டில் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான ஆதாரங்களாக இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஞாயிறு, 10 ஜூலை, 2022

இந்திய உலகக் கண்ணோட்டத்தை அறிந்துகொள்ள, அவர் சமஸ்கிருதத்தை கற்பது அவசியம்.- திரு.எம்.வெங்கையா நாயுடு


 சமஸ்கிருத மொழியை கற்பதற்கு புத்துயிரூட்ட, மக்கள் இயக்கம் தொடங்கப்படுவதுடன்,  இந்தியாவின் மிகவும் பழமையான செம்மொழி இலக்கியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மீள் உருவாக்கம் செய்ய, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் பாடுபட வேண்டுமென, குடியரசு துணைத்தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.   “அரசியல் சட்ட விதிமுறைகளாலோ அல்லது அரசாங்க உதவி அல்லது பாதுகாப்பு மூலம் மட்டும், ஒரு மொழியை பாதுகாத்துவிட முடியாது“  என்றும் அவர் கூறியுள்ளார்.  

சனி, 9 ஜூலை, 2022

பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் நலத் திட்டங்களின் அவசியத் தூதுவர்கள். - மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

 பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மற்றும் அவற்றின் பிரதிநிதிகள் பிரதமர் நரேந்திர மோடியின் நலத்திட்டங்களின் அத்தியாவசியத் தூதர்கள் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.  கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய ஏழைகள் மற்றும் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றின் பலனையும், கடைசி வரிசையில் உள்ள கடைசி மனிதர் வரை, அடிமட்டத்தில் கொண்டு சேர்ப்பதில் பஞ்சாயத்து அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு தனிப் பங்கு உள்ளது என அவர் கூறியுள்ளார்.

கொசு ஒழிப்பு நடவடிக்கையை மக்கள் இயக்கமாகத் தொடங்குவதற்கு மக்கள் பங்களிப்பு முக்கியமானது.- டாக்டர் மன்சுக் மாண்டவியா

 வீடுகள், வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் கொசுக்கள் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய மக்களையும், சமுதாயங்களையும்  ஈடுபடுத்தும் வகையில், அவர்களது பங்கேற்புடன் மக்கள் இயக்கங்களைத் தொடங்குமாறு 13 மாநிலங்களுக்கு (உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், திரிபுரா, டெல்லி, குஜராத், மத்தியப் பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு) டாக்டர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.  கொசு ஒழிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற மக்களின் பங்கேற்பு முக்கியமானது. சுற்றுப்புறங்களில் கொசு  இனப்பெருக்கம் இல்லை என்பதை உறுதிப்படுத்த, நமது சொந்த வீடுகள் மற்றும் சமூகங்களுடன் தொடங்குவோம் என கொசு மூலம் பரவும் நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தயார்நிலையை ஆய்வு செய்தபோது மத்திய சுகாதார அமைச்சர் கூறினார். மழைக்காலம் தொடங்கவுள்ளதை அடுத்து இன்று காணொலி மூலம் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் , தில்லி துணை முதலமைச்சர் திரு மணீஷ் சிசோடியா, பீகார் சுகாதார அமைச்சர் திரு மங்கள் பாண்டே, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  திரு மா. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்,  ஜார்கண்ட் மாநில சுகாதார அமைச்சர் திரு பன்னா குப்தா ஆகியோர் மெய்நிகர் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

வெள்ளி, 8 ஜூலை, 2022

சாத்தியமான ஸ்டார்ட்-அப்களை அணுகிஅவர்களுக்கு ஆதரவளிக்குமாறு மத்தியஅமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தல்


 சாதிக்கும் ஆற்றல் கொண்ட ஸ்டார்ட்-அப்களை அணுகி அவர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் மற்றும் BIRAC உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் ஆதரவளிக்க வேண்டும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ( தனிப்பொறுப்பு), புவி அறிவியல் ( தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொதுக் குறை தீர்வு , ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்  கேட்டுக் கொண்டார்

டெல்லி-மும்பை விரைவுச்சாலை மற்றும் பல புதிய சாலைத்திட்டங்கள் மகாராஷ்டிராவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் - நிதின் கட்கரி


 அமைக்கப்பட்டு வரும் தில்லி-மும்பை விரைவுச்சாலை, நாக்பூர்-மும்பை சம்ரித்தி மஹாமார்க் மற்றும் பல புதிய சாலைத் திட்டங்கள் மகாராஷ்டிராவில் மேலும் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி கூறினார். மும்பையில் இன்று சிஐஐ ஏற்பாடு செய்திருந்த இரண்டாவது 'சங்கல்ப் சே சித்தி - புதிய இந்தியா, புதிய தீர்வு மாநாட்டில்' பேசிய திரு கட்கரி, மும்பையை தில்லி, புனே மற்றும் பெங்களூருவுடன் இணைக்கும் சிறந்த உள்கட்டமைப்பு திட்டங்கள் தயாராகி வருவதாகக் கூறினார்.

ஏழை விவசாயிகளுக்கு உழவர் கடன் அட்டைகள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திருமதி நிர்மலா சீதாராமன் ஆய்வு


 கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன்வளத் துறையிலிருந்து ஏழை விவசாயிகளுக்கு உழவர் கடன் அட்டை வழங்குவதில் உள்ள முன்னேற்றம் குறித்து, ஆய்வு செய்ய வங்கிகள் மற்றும் மண்டல கிராமப்புற வங்கிகளுடன் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா கலந்து கொண்டார்.

நேற்று நடைபெற்ற கூட்டத்தில், இந்த விஷயத்தில் வங்கிகள் இணக்கமாக நடந்து கொள்ள சில நடவடிக்கைகளை திரு பர்ஷோத்தம் ரூபாலா பரிந்துரைத்தார். நிராகரிப்பதற்கான காரணங்களைத் தெளிவாகக் குறிப்பிட்டால், கள அலுவலர்கள் படிவங்களைச் சரிசெய்து மீண்டும் சமர்ப்பிக்க முடியும் என்று அவர் கூறினார். மல்தாரி (குமந்து) சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உழவர் கடன் அட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் பரிந்துரைத்தார். மேலும் ஜாமீன் எதுவும் கொடுக்க முடியாத ஏழை மீனவர்களுக்கு கடன் அட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

வியாழன், 7 ஜூலை, 2022

இளைஞர்களின் மனதில் பிரிவினைவாத சிந்தனையை விதைப்பதே திமுகவின் நோக்கம் - வானதி சீனிவாசன்


 இளைஞர்களின் மனதில் பிரிவினைவாத சிந்தனையை விதைப்பதே திமுகவின் நோக்கம்

ஜூன் 3-ம் தேதி நாமக்கல்லில் நடைபெற்ற, திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பேசிய, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான திரு. ஆ.ராசா, “ 'பிரிவினை வேண்டும். தனித் தமிழ்நாடு வேண்டும். இளைஞர்களே முன்வாருங்கள். சுதந்திர தமிழ்நாடு தான் நம்முடைய கடைசித் தீர்வு' என்ற பெரியார் சொன்னார். ஆனாலும், இந்திய ஒருமைப்பாட்டுக்காக, இந்தியா வாழ்க என்றோம். முதல்வர் ஸ்டாலின் அண்ணா வழியில் பயணம் செய்கிறார். எங்களை பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள். தனி நாடு கேட்க வைத்து விடாதீர்கள்" என பேசியுள்ளார்.

கொரோனா காலத்திலும், இந்தியாவில் இருந்து 3.75 லட்சம் கோடி விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது.- நரேந்திரசிங் தோமர்


 மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு.நரேந்திரசிங் தோமர், சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய சபை மற்றும் தேசிய பங்குச் சந்தையின் கூட்டு கூட்டத்தை, குவாலியரில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு.தோமர், விவசாய சகோதார, சகோதரிகளின் கடின உழைப்பு மற்றும் விவசாயிகளின் நலன் சார்ந்த அரசின் கொள்கைகள் காரணமாக, உலகில், அதிக விவசாய விளைபபொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளின் முதல் இரண்டு இடங்களில் இந்தியா உள்ளது என்றார். இந்தியாவின் இயற்கை வேளாண் பொருட்களுக்கு உலக அளவில் அதிகதேவை இருக்கிறது. கொரோனா காலத்திலும், இந்தியாவில் இருந்து 3.75 லட்சம் கோடி விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது நல்ல அறிகுறி. இந்நிலையில், நமது விவசாயப் பொருட்களின் தரத்தை நிலைநிறுத்தி, அது உலகத்தரத்தை எட்டுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.

செவ்வாய், 5 ஜூலை, 2022

பிரெஞ்ச் விமான என்ஜின் உற்பத்தியாளரான (SAFRAN) குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி புதுதில்லியில் பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் சந்திப்பு.

 


பிரெஞ்ச் நிறுவனமான சாஃப்ரான் குழுமத்தின் உயர்மட்ட குழுவினர், புதுதில்லியில் ஜூலை 5, 2022 அன்று பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கை சந்தித்தனர்.  பயணியர்  மற்றும் போர் விமானங்களுக்கான அதிநவீன என்ஜின் அசல் பாகங்கள்  உற்பத்தியாளர்களில்,சாஃப்ரான் குழுமம் முன்னோடி நிறுவனமாக திகழ்கிறது.

சனி, 2 ஜூலை, 2022

இந்தியா நீடித்த தூய்மையான எரிசக்தி ஒத்துழைப்பின் இலக்குகளை அடைவதற்கான முன்னேற்றத்தை விரைவுபடுத்தவும் சூரியசக்தி டெகத்லான் இந்தியா உதவிகரமாக உள்ளது என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.


 பருவநிலை மாற்றம் தொடர்பான  COP26 உச்சிமாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திரமோடி அளித்த வாக்குறுதிப்படி,   2030-க்குள் புதைபடிம எரிபொருள் பயன்பாடு அல்லாத 500ஜிகாவாட் மின் உற்பத்தித் திறனை இந்தியா அடைவதற்கு,    “கார்பன் சமநிலை“ கட்டட கட்டுமான ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதோடு, அவற்றை தொழில்துறையுடன் இணைக்க வேண்டுமென, மத்திய அறிவியல்- தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திரசிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   

வெள்ளி, 1 ஜூலை, 2022

லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் மருத்துவர்கள் தினம் கொண்டாட்டம்


 தில்லி லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர்கள் தின கொண்டாட்டம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில்,  இணையமைச்சர்கள் டாக்டர் பாரதி பிரவீன் பவார், சுகாதாரத்துறை செயலாளர்  திரு ராஜேஷ் பூஷன் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, தன்னலமற்ற சேவையாற்றி வரும் மருத்துவ துறையினருக்கு தமது பாராட்டுகளை தெரிவித்து கொள்வதாக கூறினார். “நமது மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வல்லுனர்கள், நமது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்” என்றும் அவர் கூறினார். அந்தவகையில் அவர்களது அளப்பரிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவே ஆண்டுதோறும் ஜூலை 1-ந் தேதி தேசிய மருத்துவர் தினமாக கொண்டாடப்படுகிறது.