வானதி சீனிவாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வானதி சீனிவாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 7 ஜூலை, 2022

இளைஞர்களின் மனதில் பிரிவினைவாத சிந்தனையை விதைப்பதே திமுகவின் நோக்கம் - வானதி சீனிவாசன்


 இளைஞர்களின் மனதில் பிரிவினைவாத சிந்தனையை விதைப்பதே திமுகவின் நோக்கம்

ஜூன் 3-ம் தேதி நாமக்கல்லில் நடைபெற்ற, திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பேசிய, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான திரு. ஆ.ராசா, “ 'பிரிவினை வேண்டும். தனித் தமிழ்நாடு வேண்டும். இளைஞர்களே முன்வாருங்கள். சுதந்திர தமிழ்நாடு தான் நம்முடைய கடைசித் தீர்வு' என்ற பெரியார் சொன்னார். ஆனாலும், இந்திய ஒருமைப்பாட்டுக்காக, இந்தியா வாழ்க என்றோம். முதல்வர் ஸ்டாலின் அண்ணா வழியில் பயணம் செய்கிறார். எங்களை பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள். தனி நாடு கேட்க வைத்து விடாதீர்கள்" என பேசியுள்ளார்.

வெள்ளி, 18 மார்ச், 2022

திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.- வானதி சீனிவாசன்

 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத பட்ஜெட் - வானதி சீனிவாசன்

திமுக அரசின் முதல் முமுமையான நிதிநிலை அறிக்கையை, தமிழக நிதியமைச்சர் திரு.பழனிவேல் தியாிகராஜன் தாக்கல் செய்துள்ளார். பெரும்பாலும், மத்திய பாஜக அரசின் திட்டங்களின் தமிழ் மொழிபெயர்ப்பாகவே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. இணையவழியில் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்ய, மத்திய அரசு, GEM Portal  என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளது. அதுபோலவே, தமிழக பட்ஜெட்டிலும் E – Procurement திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

ஆளுநருக்கு எதிரான திமுகவின் செயல்பாடுகள் அனைத்தும், முழுக்க முழுக்க, சந்தர்ப்பவாத, சுயநல நடவடிக்கை என்பது தெளிவாகிறது. - வானதி சீனிவாசன்



 தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசின் அங்கம்தான் ஆளுநர்

அரசியல் சட்டப்படிதான் ஆளுநர் செயல்பட முடியும்.- வானதி சீனிவாசன்

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆளுநர் மீதான விமர்சனங்கள் அதிகரித்திருக்கின்றன. "மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைக் கட்டுப்படுத்த நினைக்கிறார். மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும். சட்டமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட, சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து, அதனை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டியதுதான் ஆளுநரின் வேலை" என்று திமுகவினரும், அவர்களது ஆதரவாளர்களும் பேசி வருகின்றனர்.

வியாழன், 7 அக்டோபர், 2021

இந்திய அரசியலின் அதிசயம் பிரதமர் நரேந்திர மோடி, எளிய தேநீர் கடைக்காரரின் மகனாகப் பிறந்து இந்த உயரத்தை அடைந்திருப்பது சாதாரணமானது அல்ல! - வானதி சீனிவாசன்

இந்திய அரசியலின் அதிசயம் பிரதமர் நரேந்திர மோடி

இன்று அக்டோபர் 7. இந்திய வரலாற்றில் மிக மிக முக்கியமான நாள்.  20 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2001 அக்டோபர் 7 ஆம் தேதி குஜராத் முதல்வராக திரு. நரேந்திர மோடி பொறுப்பேற்றார். குஜராத் முதல்வராக 13 ஆண்டுகள், நாட்டின் பிரதமராக 7 ஆண்டுகள் என்று இந்திய அரசியலில் மிக உச்ச பதவிகளில் தொடர்ந்து 20 ஆண்டுகளை நிறைவு செய்து 21 ஆவது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறார் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். அவருக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

'ஒப்பே கூற முடியாத செந்தமிழ் அறிவுச்செல்வன்' தமிழகத்தின் பாலகங்காதர திலகர் வ.உ. சிதம்பரம் பிள்ளை.- வானதி சீனிவாசன்


 'ஒப்பே கூற முடியாத செந்தமிழ் அறிவுச்செல்வன்'

தமிழகத்தின் பாலகங்காதர திலகர் வ.உ. சிதம்பரம் பிள்ளை

வங்காளத்தில் விபின் சந்திரபால், பஞ்சாபில் லாலா லஜபதிராய், மராட்டியத்தில் பாலகங்காதர திலகர் என்றால் தமிழகத்தில் வ.உ.சி. என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை.  அவரது பெயரைக் குறிப்பிடாமல் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை யாராலும் எழுதிவிட முடியாது. அந்த அளவுக்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் வ.உ.சி.

1872 செப்டம்பர் 5-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் என்ற ஊரில் உலகநாதப் பிள்ளை - பரமாயி அம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர். பாலகனாக இருந்த போதே படிப்பில் ஆர்வம் காட்டிய வ.உ.சி., தந்தையைப் போலவே வழக்கறிஞராக பட்டம் பெற்றார். வழக்கறிஞராக தொழில் செய்தாலும் அவரது மனம் தத்துவத்திலும், ஆன்மிகத்திலும் திளைத்தது.

சனி, 31 ஜூலை, 2021

1000 ரூபாய், 1500 ரூபாய் அளவு மின் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 5000 முதல் 6000 ரூபாய் வரை மின் கட்டணம் வந்திருக்கிறது.- வானதி சீனிவாசன்


 கொரானா பரவல் கால கட்டத்தில் வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் பயன்பாட்டுக்கட்டணம் எந்த வித முன்னறிவிப்புமின்றி மூன்று முதல் ஐந்து மடங்கு அதிகமாக வந்திருக்கிறது. பூட்டியிருக்கும் வீட்டிற்கு 5 மடங்கு அதிகமாக மின் கட்டணம் வந்திருக்கிறது. தொழிற்சாலைகள், திருமண மண்டபங்களுக்கு மூன்று மடங்கு அதிகமாக வந்திருக்கிறது என்று மாவட்டம் முழுவதும் பரவலாக புகார் எழுந்திருக்கிறது.  

வியாழன், 29 ஜூலை, 2021

அகில இந்திய ஒதுக்கீடு மருத்துவ இடங்களில் OBC பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. - வானதி சீனிவாசன்


அகில இந்திய ஒதுக்கீடு மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (OBC) நடப்பாண்டு முதல் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மத்திய பாஜக அரசு செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குறிப்பாக தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் அவதூறு பிரச்சாரம் செய்து வந்தன. 

ஞாயிறு, 4 ஜூலை, 2021

சென்ற ஆண்டு பொது தேர்வில் தேர்ச்சியை தவற விட்டவர்களும் இன்னொரு வாய்ப்பு வழங்கி அவர்களையும் தேர்வு பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்.- வானதி சீனிவாசன்


 பள்ளிகளில் குறைவான மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை தனித்தேர்வர்கள் என்ற பெயரில் தனியாக 10, 12 ஆம் வகுப்பிற்குரிய பொது தேர்வை எதிர் கொள்ள வைக்கும் போக்கு தமிழகத்தில் இருக்கிறது. பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக கற்றலில் சிறு பின் தங்கல் உள்ள மாணவர்களை தனித்தேர்வர்களாக்குகிறார்கள். அதோடு சென்ற ஆண்டு பொது தேர்வில் தேர்ச்சியை தவற விட்டவர்களும் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுகிறார்கள். 

வியாழன், 24 ஜூன், 2021

இந்தியாவில் இருந்து பிரிகிறோம் என்று மாநிலங்கள் கூற முடியாது. அப்படி கூறினால் அது பிரிவினைவாதம். தேசத் துரோகம்.- வானதி சீனிவாசன்


 பிரிவினைவாத உள்நோக்கத்துடன் திமுக ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் பயன்படுத்தி வரும் ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையை கடந்த 2-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழக அரசும் பயன்படுத்தி வருகிறது. இதுபற்றி சட்டமன்றத்தில் பாஜக குழுத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், "நமது அரசியலமைப்புச் சட்டத்தில், “இந்தியா, அதாவது பாரதம் - மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியமாய் இருக்கும்" என்றுதான் உள்ளது. அதைத்தான் பயன்படுத்துகிறோமே தவிர, சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை. கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருப்பதால் ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தைைப் பயன்படுத்துகிறோம்" என்று கூறியிருக்கிறார்.