புபேந்தர் யாதவ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புபேந்தர் யாதவ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 அக்டோபர், 2021

இ-ஷ்ரம் இணையளத்தில் 4 கோடிக்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு


 அமைப்பு சாரா தொழலாளர்களுக்காக இ-ஷ்ரம் இணையதளம் தொடங்கப்பட்டு 2 மாதத்துக்குள் 4 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

இத்தகவலை சுட்டுரையில் பகிர்ந்து கொண்ட மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் திரு புபேந்தர் யாதவ், கூறுகையில், இதில் பதிவு செய்வதன் மூலம், அரசு திட்டங்களின் பயன்களை, அமைப்பு சாரா தொழிலாளர்கள் எளிதில் பெற முடியும் என்றார். 

கட்டுமானம், ஆடை தயாரிப்பு, மீன்பிடித் தொழில், நடைபாதை வியாபாரிகள், தெரு வியாபாரிகள், வீட்டு வேலை செய்வோர், வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த துணை தொழில்களில் ஈடுபடுவோர், போக்குவரத்து துறையில் உள்ளவர்கள் இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

திங்கள், 4 அக்டோபர், 2021

ஆதாரம் அடிப்படையிலான கொள்கை உருவாக்கம் மூலம் தொழிலாளர்கள் நலனில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது.- மத்திய அமைச்சர் திரு புபேந்தர் யாதவ்


 ஆதாரம் அடிப்படையிலான கொள்கை உருவாக்கம் மூலம் தொழிலாளர்கள் நலனில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது என மத்திய தொழிலாளர்  மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் திரு புபேந்தர் யாதவ்  கூறினார்.

தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தின் 101வது நிறுவன தினத்தை முன்னிட்டு சண்டிகரில் உள்ள ஷ்ரம் அலுவலக பவனில் கணக்கெடுப்பு பணியை (AFES) மத்திய தொழிலாளர்  மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் திரு புபேந்தர் யாதவ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

புதன், 18 ஆகஸ்ட், 2021

சர்வதேச சூரிய சக்தி கூட்டணி உள்ளிட்ட சர்வதேச முன்முயற்சிகள் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் இந்தியாவால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.- திரு புபேந்தர் யாதவ்


 பருவநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு மாநாடு மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தில் இந்தியா எப்போதுமே உறுதிபூண்டிருப்பதாக  மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சர் திரு புபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 26-ஆவது பருவநிலை மாற்ற உறுப்பினர்கள் மாநாட்டின்  (காப்26) வெற்றி மற்றும் சமமான விளைவுகளுக்காக இந்தியா தொடர்ந்து ஆக்கபூர்வமாக பணியாற்றும் என்றும், வரும் நவம்பர் மாதம் கிளாஸ்கோவில் நடைபெற உள்ள காப் 26 மாநாட்டிற்கு இந்தியா அனைத்து ஆதரவையும் இங்கிலாந்திற்கு வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.