ரவிக்குமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரவிக்குமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 மார்ச், 2020

பிரதமர் ஆக்கபூர்வமான அறிவிப்புகளை வெளியிடவேண்டும்- ரவிக்குமார்


மத்திய அரசு தனது அறிவிப்புகளை இனியும் காலந்தாழ்த்தாமல் வெளியிடவேண்டும் - ரவிக்குமார்

இன்று (24.03.2020) இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றவிருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் ஆக்கபூர்வமான அறிவிப்புகளை வெளியிடவேண்டும். கடந்தமுறை உரையாற்றியபோது அவர் அறிவித்த Economic Task Force இதுவரை அமைக்கப்படவில்லை. கை தட்டச் சொன்னதால் சமூக தனிமைப்படுத்தல் என்பது சீர்குலைந்தது. இவற்றை பிரதமர் கவனத்தில் கொள்ளவேண்டும். 

மாநில அரசுகள் தம்மால் இயன்ற நிவாரண நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. மத்திய அரசு தனது அறிவிப்புகளை இனியும் காலந்தாழ்த்தாமல் வெளியிடவேண்டும்

பொது சுகாதாரம் என்பது மாநிலப் பட்டியலில் இருந்தாலும் இத்தகைய பெருந்தொற்று (pandemic) காலத்தில் மத்திய அரசு கூடுதல் பொறுப்பேற்கவேண்டும். 

பிரதமரின் உரையில் பின்வரும் அம்சங்களை எதிர்பார்க்கிறேன்: