சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் . - திரு.விஜயகாந்த்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விடாமல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில், இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான சாலைகள் அனைத்தும் குளம் போல் காட்சியளிக்கின்றன. மேலும் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீருடன் கழிவு நீரும் கலந்து ஓடுவதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.