சனி, 14 செப்டம்பர், 2019

இந்தியாவின் அடையாளமாக இந்தி ஒருபோதும் திகழ முடியாது - DR. ராமதாஸ்

ஒரே மொழியாக இந்தியை அடையாளப்படுத்த வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்து ராமதாஸ் எதிர்ப்பு.



இந்தியாவின் ஒற்றை மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து தவறானது. இந்தி மொழி நாளில் இந்தியை உயர்த்திப் பேச அவருக்கு உரிமை உண்டு. ஆனால், பிற மொழி பேசும் மக்கள் மீது இந்தியை திணிக்கக் கூடாது!

நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மூடாமல் விபத்துகளை குறைக்கும் முயற்சி ஈடேறாது! - DR. ராமதாஸ்

நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மூடாமல்
விபத்துகளை குறைக்கும் முயற்சி ஈடேறாது!
- DR. ராமதாஸ் அறிக்கை
(நிறுவனர்,பாமக)


இந்தியாவில் சாலைவிபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைக்கும் நோக்கத்துடன் மோட்டார் வாகனச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்கள் குறித்தும், அதன் விளைவாக போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது குறித்தும் நாடு முழுவதும் விவாதங்கள் எழுந்துள்ளன. விபத்துகளுக்கு காரணமான மிகப்பெரிய ஓட்டையை அடைக்காமல்,

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

உண்மையைச் சொல்லணும்னு நான் நினைக்கிறேன் ; கேஸ் போடுவோம்'னு மிரட்டுறாங்க - மதுமிதா

உண்மையைச் சொல்லணும்னு நான் நினைக்கிறேன் கேஸ் போடுவோம்'னு மிரட்டுறாங்க - மதுமிதா 


பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியாக மதுமிதா நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சக போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், ஆனால் தொகுப்பாளர் கமல்ஹாசனும் கூட அதனை கண்டிக்கவில்லை எனவும் தபால் மூலம் அவர் புகார் அளித்துள்ளார். தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி 56-வது நாளில் வலுக்கட்டாயமாக போட்டியிலிருந்து வெளியேற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில்  'ஒண்ணு நீ இங்க இருக்கணும்.. இல்லாட்டி நாங்க இருக்கணும் டீ' எட்டு போட்டியாளர்கள் தன்னை கட்டாயப்படுத்தி போட்டியிலிருந்து வெளியேற்றியதாகவும். ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கத்தியால் தன் கையை அறுத்துக் கொண்டார். விதியை மீறி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு ஷோவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.  

அந்த எட்டு பேர்  தந்த மன அழுத்தத்தை மற்றும் நடந்த உண்மையைச் சொல்லணும்னு நான் நினைக்கிறேன். அதனாலதான் 'ஒண்ணு நீங்க பத்திரிகையாளர்களை சந்திக்க ஏற்பாடு பண்ணுங்க, இல்லை நானே பேட்டி தாரேன். 

ஆனால் நிகழ்ச்சி தொடர்பா மதுமிதா வாழ்நாள் முழுவதும் எங்கயுமே பேட்டி தரக்கூடாதுன்னு விஜய் டிவி நிர்வாகத்துல இருந்து மெயில் அனுப்புறாங்க. நீங்க பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி  எங்கேயும் எதையும் பேசக்கூடாது. மீறினால் அக்ரிமென்ட் படி கேஸ் போடுவோம்னு மிரட்டுறாங்க. ஆனா, நிகழ்ச்சியில் கலந்துகிட்டதுக்காக டிவி நிர்வாகம் எனக்குப் பேசின சம்பளம் முழுசையும் இப்போ கொடுத்திட்டாங்க. ஆனால் வாயைக் கட்டிப் போட்டு வச்சிருக்காங்க.

நடிகை இலியானாவிடம் பலான கேள்வி கேட்ட ரசிகர்

நடிகை இலியானாவிடம் பலான கேள்வி கேட்ட ரசிகர் 


பிரபல நடிகையாக வலம் வந்த இலியானா. நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தவர் . தெலுங்கு மற்றும் தமிழில்  இந்தியில் என பல வெற்றிப் படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இலியானாவும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரூவ் நீபோனும் காதலித்து வந்தனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்போது பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. சமூகவலைதளத்தில் தங்கள் தங்களை ஒருவருக்கு ஒருவர் பின் தொடர்வதை நிறுத்தினர். ஒன்றாக எடுத்து கொண்ட புகைப்படத்தை நீக்கி உள்ளனர்.

சமூக வலைதளத்தில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருப்பர்  இலியானா தனது புகைப்படங்களை தொடர்ந்து பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய போது, ரசிகர் ஒருவர் மாமேன் நான் இருக்கும்போது நீ ஏன் புள்ள அதுக்குள்ள உன்னுடைய கன்னித்தன்மையை இழந்துட்டே?. அதற்கு பதிலளித்த நடிகை இலியானா, “ஏன் இதில் எல்லாம் மூக்கை நுழைக்கிறீர்கள். என்னிடம் நீங்கள் கேட்ட கேள்வியை உங்களின் அம்மாவிடம்  கேளு ” என்று காட்டமாக பதிலளித்துள்ளார். தன்னிடம் வரம்பு மீறி கேள்வி கேட்ட ரசிகர் நடிகை இலியானா பதிலடி கொடுத்துள்ளார்.



வியாழன், 5 செப்டம்பர், 2019

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டண கணக்கீடு சுரண்டலின் உச்சம்! - DR.ராமதாஸ்

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் 
கட்டண கணக்கீடு சுரண்டலின் உச்சம்!
- DR.ராமதாஸ் அறிக்கை.
(நிறுவனர்,பாமக)


தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது. சுங்கக் கட்டணம் நீண்ட காலமாகவும், அளவுக்கு அதிகமாகவும் வசூலிக்கப்படுவதற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறியுள்ள காரணங்கள், கந்து வட்டியை நியாயப்படுத்தும் வகையில் தான் அமைந்துள்ளன.