புதன், 24 நவம்பர், 2021

மானிய விலையில் அரசே தக்காளி மற்றும் காய்கறிகளை விற்பதன் மூலம் மக்களின் சுமையை குறைப்பது தான் இன்றைய தேவை ஆகும்.- DR.S.ராமதாஸ்

 தக்காளி, காய்கறி விலைகளை குறைக்க

அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!. - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலைகள் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் கைகளுக்கு எட்டாத அளவுக்கு உயர்ந்துள்ளன. தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த  அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ள போதிலும், நிலைமையை சமாளிக்க அவை போதுமானவையல்ல.

ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்கள் வேறு உருவத்தில் வருமாம்! ‘அனுகூல சத்ருவா’ தமிழ்நாடு பாஜக தலைவர்? - கி.வீரமணி



ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்கள் வேறு உருவத்தில் வருமாம்!

‘அனுகூல சத்ருவா’ தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர்? - கி.வீரமணி

தி.மு.க.வுக்கு அடுத்து பா.ஜ.க.தானாம் - ஆசைப்படலாம் அண்ணாமலை!
ஆனால், யதார்த்தம் கைகொடுக்காது!

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை வளர்க்க அதன் புதிய தலைவர் அண்ணாமலை (அய்.பி.எஸ். - ஓய்வு) திசை தெரியாமல் திக்குமுக்காடுகிறார்; தெளிவற்ற அவரது பேச்சுகளுக்கு சில ஏடுகள் விளம்பரம் கொடுத்தாலும், அவை விழலுக்கிறைத்த நீராகவே ஆவது உறுதி!

தமிழ்நாட்டிலும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 நிதியுதவி வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.- DR.S.ராமதாஸ்


நோய் பரவலில் இருந்து கடலூர் மாவட்ட மக்களைக் காப்பாற்றுங்கள்: அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.5000 வழங்குங்கள்! - DR.S.ராமதாஸ்

கடந்த ஆண்டுகளைப் போலவே இப்போதும் மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகளை சந்தித்த கடலூர் மாவட்டத்தில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. மற்றொருபுறம் உதவி கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், மழை - வெள்ள நீர் இன்னும் வடியாத பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுகாதாரக் கேடுகளின் விளைவாக நோய் பரவுவதற்கான ஆபத்தும் அதிகரித்திருக்கிறது.

திடகாத்திரமான காவல்துறை அதிகாரியை 10 வயது சிறுவர்கள் கொலை செய்திருக்கிறார்கள் என்பது நம்பத் தகுந்ததாக இல்லை!- டாக்டர் K. கிருஷ்ணசாமி



பூமிநாதன் கொலைவழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!!

ஆடு திருட்டுக் கும்பலை துரத்திப் பிடிக்கச் சென்ற சிறப்பு உதவிக் காவல் ஆய்வாளர் பூமிநாதன் அவர்கள் நேற்று முன்தினம் இரவில் நவல்பட்டு காவல்நிலைய எல்லையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த துயர்மிகு சம்பவத்திற்குக் காரணமான குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, அவர்களுக்குரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டுமென்று நாம் தமிழக அரசை வலியுறுத்தியிருந்தோம். பூமிநாதன் கொலைக்குக் காரணமானவர்களை தேடிக் கண்டுபிடிக்க நான்கு சிறப்புப் படை அமைக்கப்பட்டிருந்தது. அதில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் ஒருவனுக்கு 19 வயது என்றும், மற்றவர்களுக்கு 10 வயது என்றும் காவல்துறை மூலமாகவே அறிவிப்பு வந்திருக்கிறது.  

திங்கள், 22 நவம்பர், 2021

மக்கள் பிரதிநிதிகளின் அவையான சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க தாமதிக்கலாமா? - கி.வீரமணி


சட்டப்பேரவை குறித்து தந்தை பெரியார் கூறியது என்ன?

மக்கள் பிரதிநிதிகளின் அவையான சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட  மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க தாமதிக்கலாமா?

மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலவரையறை தேவை!

சட்டப்பேரவைத் தலைவர்களின் மாநாட்டில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவரின் அரிய கருத்துரை

இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் கடந்த 17 ஆம் தேதி அனைத்திந்திய சட்டப் பேரவைத் தலைவர்கள் மாநாடு நடைபெற்றது.

அந்த மாநாட்டில் கலந்துகொண்டு தமது கருத் துரையை முன்வைத்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மாண்பமை அப்பாவு அவர்கள் மிக அருமையான, அரசியல் சட்ட ரீதியான கருத்துகளை எடுத்துக் கூறியுள்ளார்.