வெள்ளி, 6 மே, 2022
மாமூல் தர மறுத்த வணிகர் அடித்துக் கொலை: மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலை காவல்துறை கட்டுப்படுத்துமா? - DR.S.ராமதாஸ்
பொருளாதாரம் மற்றும் தொழில்துறைக்கு ஊக்கமளிக்க அறிவுசார் சொத்துரிமையின் கீழ் கண்டுபிடிப்பு உரிமையை அமலாக்குவதில் பல்கலைக்கழகங்கள் அதி முக்கியத்துவம் அளிப்பது அவசியம்.
பொருளாதாரம் மற்றும் தொழில்துறைக்கு ஊக்கமளிக்க அறிவுசார் சொத்துரிமையின் கீழ் கண்டுபிடிப்பு உரிமையை அமலாக்குவதில் பல்கலைக்கழகங்கள் அதி முக்கியத்துவம் அளிப்பது அவசியம் என்று குடியரசு துணைத்தலைவர் திரு எம். வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார். சிறந்த ஆராய்ச்சி முடிவுகளுக்கு தொழில்துறை – கல்வி நிறுவனங்கள் இடையேயான இணைப்புகளை வலுப்படுத்துவது அவசியம் என்று அவர் கூறினார்.
சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் 69-வது பட்டமளிப்பு விழாவில் இன்று உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர் சாதாரண விருப்பத்திலிருந்து வெளியேற வேண்டும் என்றும் நாம் சாதித்தவற்றிலிருந்து திருப்தி அடையக் கூடாது என்றும் கூறினார். உலக அளவில் உள்ள 10 சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று என்பதை நோக்கி பஞ்சாப் பல்கலைக்கழகம் முன்னேற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
செவ்வாய், 3 மே, 2022
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கரீஃப் பருவத்திற்கான பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கான மானியத் தொகையாக ரூ. 60939.23 கோடி திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டில் இருப்பில் உள்ள உரங்களின் இருப்பு குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர், மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆய்வு செய்தனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கரீஃப் பருவத்திற்கான பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கான மானியத் தொகையாக ரூ. 60939.23 கோடி திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆய்வில் பேசிய மத்திய உரங்கள் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, அரசின் சிறப்பான நடவடிக்கை காரணமாக, இந்த கரீப் பருவத்திற்கு தேவையான உரங்கள் தேவைக்கு அதிகமாகவே உள்ளன என்றும், உரங்களின் இருப்பு குறித்து விவசாயிகளுக்கு தேவையான, சரியான விவரங்களை தெரிவிக்க வேண்டும் என மாநிலங்களுக்கு அறிவுறுத்தினார்.
‘கிசான் ட்ரோன்களை ஊக்குவித்தல்-பிரச்சனைகள், சவால்கள் மற்றும் முன்னெடுத்து செல்லுதல்’ குறித்த மாநாட்டை வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கிவைத்து உரையாற்றினார்.
சுதந்திரப் பெருவிழாவின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட, ‘கிசான் ட்ரோன்களை ஊக்குவித்தல்-பிரச்சனைகள், சவால்கள் மற்றும் முன்னெடுத்து செல்லுதல்’ குறித்த மாநாட்டை வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கிவைத்து உரையாற்றினார். விவசாயிகளின் வசதிக்காகவும், செலவினத்தை குறைத்து வருமானத்தை அதிகரிப்பதற்காகவும் ட்ரோன் பயன்பாட்டை அரசு ஊக்குவித்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். கிசான் ட்ரோன் பயன்பாட்டை ஊக்குவிக்க, எஸ்சி- எஸ்டி, சிறு மற்றும் நடுத்தர, பெண் விவசாயிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ட்ரோன் வாங்குவதற்காக, அரசு 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மான்ய உதவி வழங்கி வருகிறது. மற்ற விவசாயிகளுக்கு 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஏழைகளுக்கு உயர் கல்வி: டி.பி. ஜெயின் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும்! - DR. அன்புமணி ராமதாஸ்
ஏழைகளுக்கு உயர் கல்வி: டி.பி. ஜெயின்
கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும்! - DR.அன்புமணி ராமதாஸ்
சென்னை துரைப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் டி.பி.ஜெயின் அரசு உதவி பெறும் கலை - அறிவியல் கல்லூரியை சுயநிதி கல்லூரியாக மாற்ற கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகக்குறைந்த செலவில் உயர்கல்வி கிடைப்பதை தடுப்பதற்கான இந்த முயற்சியை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது கவலை அளிக்கிறது.




