அஸ்வினி குமார் சவுபே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஸ்வினி குமார் சவுபே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 டிசம்பர், 2021

வெங்காய விலையை கட்டுப்படுத்த, 2.08 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை இருப்பு வைப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. - திரு அஸ்வினி குமார் சவுபே

 நாடாளுமன்றத்தின் மக்களவையில், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சவுபே எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

பல காரணங்களால் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படுகின்றன. தேவைக்கும், விநியோகத்துக்கும் சமநிலையற்ற தன்மை ஏற்படும்போது, விநியோக  சங்கிலியில் பாதிப்பு ஏற்படும்போது, விளைச்சல் பருவ மாறுபாடுகள், கள்ளச் சந்தையில் பதுக்குவதன்  மூலம் செயற்கையாக ஏற்படுத்தப்படும் தட்டுப்பாடு, சர்வதேச சந்தையில் விலை உயர்வு ,போன்றவை காரணமாக உணவுப் பொருட்கள் விலையில் மாற்றம் ஏற்படுகின்றன.

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

கொவிட் சவால் ஏற்பட்டாலும், இந்தியாவின் இ-வர்த்தகம் ஆண்டுக்கு ஆண்டு 5 சதவீதம் வளர்ச்சியடையும்.- மத்திய அமைச்சர் திரு அஸ்வினி குமார் சவுபே


 கொவிட் சவால் ஏற்பட்டாலும், இந்தியாவின் இ-வர்த்தகம் ஆண்டுக்கு ஆண்டு 5 சதவீதம் வளர்ச்சியடையும் என நாஸ்காம் தெரிவித்துள்ளதாக  மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சவுபே கூறினார். 

 மக்களவையில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் திரு அஸ்வினி குமார், இணையமைச்சர் திருமிகு சாத்வி நிரஞ்சன் ஜோதி ஆகியோர் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

கொவிட் சவால்கள் ஏற்பட்டாலும் இந்தியாவின் இ-வர்த்தகம் ஆண்டுக்காண்டு 5 சதவீதம் அதிகரிக்கும் எனவும், 2021ம் நிதியாண்டில் இது, 56.6 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.