ஆர் கே சிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆர் கே சிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 ஜூலை, 2021

மின்சாரக் கட்டணங்களை எளிதில் கணக்கிட்டு டிஜிட்டல் முறையில் செலுத்துவதற்காக 7 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களுக்கு மத்திய மின்சாரம் அமைச்சர் திரு ஆர் கே சிங் ஒப்புதல்


 நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு ஆர் கே சிங் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

மின்சாரக் கட்டணங்களை எளிதில் கணக்கிட்டு டிஜிட்டல் முறையில் செலுத்துவதற்காகவும், தங்களது மின்சாரப் பயன்பாடு குறித்து நுகர்வோர் உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும், மின்சாரச் சிக்கனத்தைக் கடைபிடிக்கும் விதமாகவும், முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் வாய்ப்பை வழங்குவதற்காகவும், மின்சார விநியோக நிறுவனங்களுக்கு உதவுவதற்காகவும் ஸ்மார்ட் மீட்டர்களை (திறன்மிகு கணக்கீட்டுக் கருவிகள்) பொருத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 16 ஜூலை, 2021

1.52 லட்சம் சர்க்கியூட் கிலோமீட்டர்களுக்கு கூடுதல் பகிர்மான தடங்களை அமைத்து ஒரே நாடு-ஒரே மின் தொகுப்பு-ஒரே அலைவரிசை இலக்கை எட்ட வேண்டும்.-ஆர் கே சிங்


 அரசு மின் விநியோக நிறுவனங்களின் 9-வது ஒருங்கிணைந்த தரவரிசை பட்டியலை மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு ஆர் கே சிங் இன்று வெளியிட்டார். அனைத்து நிறுவனங்களின் உற்சாக பங்களிப்புடன் நிறைவு செய்யப்பட்ட 2019-20 நிதியாண்டிற்கான 41 அரசு மின் விநியோக அமைப்புகளுக்கான இந்த ஒன்பதாவது வருடாந்திர தரவரிசைப் பணியை அமைச்சர் பாராட்டினார்.

1.52 லட்சம் சர்க்கியூட் கிலோமீட்டர்களுக்கு கூடுதல் பகிர்மான தடங்களை அமைத்து ஒரே நாடு-ஒரே மின் தொகுப்பு-ஒரே அலைவரிசை இலக்கை எட்டுவது குறித்து திரு சிங் பேசினார்.

வெள்ளி, 25 ஜூன், 2021

எரிசக்தி மாற்றத்தை உருவாக்குவதற்கான இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்த கையேடான “தி இந்தியா ஸ்டோரி”-ஐ எரிசக்தி இணை அமைச்சர் திரு ஆர் கே சிங் வெளியிட்டார்.


 கடந்த 6 வருடங்களில் இந்தியாவில் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் இரண்டரை மடங்கு உயர்ந்து 141 ஜிகா வாட் எனும் அளவை அடைந்திருக்கிறது என்றும், நாட்டின் மொத்த திறனில் இது 37 சதவீதம் (2021 ஜூன் 16 நிலவரப்படி) என்றும் புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இணை அமைச்சரும் (தனிப் பொறுப்பு), திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைதல் இணை அமைச்சருமான திரு ஆர் கே சிங் கூறினார்.

நிறுவப்பட்ட சூரிய சக்தி திறன் இதே காலத்தில் 15 மடங்கு அதிகரித்து 41.09 ஜிகா வாட் எனும் அளவை அடைந்திருக்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் உலகிலேயே நான்காவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது.

வியாழன், 17 ஜூன், 2021

கரியமில வாயுவின் வெளியேற்றத்தைக் குறைக்கும் நோக்கத்தோடு எரிசக்தி சேமிப்புத் துறையில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி மத்திய அமைச்சர் திரு ஆர் கே சிங் தலைமையில் உயர்நிலை ஆய்வுக்கூட்டம்


 மத்திய எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இணை அமைச்சரும் (தனி பொறுப்பு), திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு இணை அமைச்சருமான திரு ஆர் கே சிங், பல்வேறு எரிசக்தி சேமிப்புத் திட்டங்களின் வளர்ச்சி குறித்தும் பருவநிலை மாற்ற செயல்பாடுகளுக்கான தயார்நிலை குறித்தும் ‌இன்று ‌நடைபெற்ற உயர்நிலை ஆய்வுக் கூட்டத்திற்குக் காணொலி வாயிலாகத் தலைமை தாங்கினார்.

கரியமில வாயுவின் வெளியேற்றத்தைக் குறைக்கும் நோக்கத்தோடு எரிசக்தி சேமிப்புத் துறையில் நாடு முழுவதும்  மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி விவாதிப்பதற்காக இந்த உயர்நிலைக் கூட்டம் நடத்தப்பட்டது.