உதயநிதி ஸ்டாலின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உதயநிதி ஸ்டாலின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

என் மகள் ரசித்த களிமண்ணில் செய்த பிள்ளையார் சிலையை அவரின் விருப்பத்துக்காக என் ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்தேன். - உதயநிதி ஸ்டாலின்


மத்திய பாசிச பாஜக மற்றும் மாநில அடிமை எடுபிடி அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள், ஊழல்கள் குறித்து நான் பகிரும்போது அவற்றை எடுத்து விவாதித்து பேசுபொருளாக்காதவர்கள் தற்போது பிள்ளையார் சிலையின் புகைப்படத்தைப் பகிர்ந்ததைப் பரபரப்பாக விவாதிக்கிறார்கள்

நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதையெல்லாம் விட்டுவிட்டு இதைப்பிடித்துக்கொண்டு வெவ்வேறு விதமாகக் கயிறு திரிப்பதைப் பார்க்கையில், இங்கு எது நடந்தாலும் அதைக் கழகத்துக்கு எதிரானதாகத் திசைதிருப்பும் சந்தர்ப்பவாதிகளின் சதி வேலைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது

புதன், 5 ஆகஸ்ட், 2020

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கரத்தை வலுப்படுத்தும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழைப் போற்றுவோம். - உதயநிதி ஸ்டாலின்


முத்தமிழறிஞரின் நினைவைப் போற்றுவோம்.- உதயநிதி ஸ்டாலின்

இந்த கொரோனா பெருந்தொற்று நேரத்திலும் ஓய்வின்றி பணியாற்றி இவரும் கழக இளைஞரணி நிர்வாகிகள், செயல்வீரர்கள் உள்ளிட்ட தனது சகோதரர்களுக்கு வணக்கம்

நம்முடைய கழகத்தலைவர் அவர்களால் தொடங்கப்பட்ட பெருமைக்குரிய கழக இளைஞரணி அமைப்பு ஒன்றிய கிளைகள் பகுதி-நகர-பேரூர் வட்டங்கள்... என விரிவடைந்து வருவதும், அதற்கான பணிகளில் நீங்கள் உங்களை ஒப்படைத்துக் கொண்டுள்ளதும் மன நிறைவைத் தருகிறது அதேநேரம், முத்தமிழறிஞர் கலைஞரின் உடன்பிறப்புகளாகவும், நம் கழகத் தலைவர் அவர்களின் அன்புக்குரியவர்களாகவும் திகழும் நீங்கள் உங்களுடைய உடல் நலத்திலும் குடும்பத்தினரின் பாதுகாப்பிலும் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்

செவ்வாய், 17 மார்ச், 2020

'தலைவர் கிரிக்கெட் லீக் போட்டிகளை வரும் 31ம் தேதிவரை தள்ளிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். - உதயநிதி ஸ்டாலின்


இளைஞர் அணியின் சார்பில், நம் கழகத் தலைவர் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடும் வகையில், 'தலைவர் கிரிக்கெட் லீக் போட்டிகளை அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 14ம் தேதி தொடங்கி நடத்தி வருகிறோம். தமிழகம் முழுவதும் எழுச்சியாகத் தொடங்கிய இந்த கிரிக்கெட் போட்டிகளின் புகைப்படங்கள், செய்திகள் பார்த்து மகிழ்ந்தேன்.

அதைத்தொடர்ந்து மண்டல அளவிலான போட்டிகள் மற்றும் சென்னையில் நடைபெறும் அரையிறுதி, இறுதிப்போட்டிகளை நடத்துவதற்கான மைதானங்களைத் தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.