கணவன் மனைவியை பாலியல் வல்லுறவு செய்தால் அது குற்றமாகாது என்ற தீர்ப்பை நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
கணவனால் மனைவி மீது நடத்தப்படும் வன்முறை கடந்த காலத்தில் குற்றமாகக் கருதப்படவில்லை. குடும்பம் என்கிற "புனிதமான" அமைப்புக்குள் சட்டமும் அரசாங்கமும் தலையிடக் கூடாது என்கிற வாதங்கள்தான் முன்வைக்கப்பட்டன.
பெண்கள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் பலகட்ட போராட்டங்களுக்கும் நிர்ப்பந்தத்துக்கும் பிறகுதான் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்பது கொண்டுவரப்பட்டது.

