கார்த்திகேய சிவசேனாபதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கார்த்திகேய சிவசேனாபதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 நவம்பர், 2021

வனங்களை அம்பானி, அதானி போன்ற தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்த்து நம் வனத்தையும், வளத்தையும் அழிப்பதற்கு ஒன்றிய அரசு துணிந்துவிட்டது.- கார்த்திகேய சிவசேனாபதி



வனப் பாதுகாப்பு சட்டத் திருத்தத்தில் உள்ள ஆபத்துகள்!

வனப் பாதுகாப்பு சட்டத் திருத்தத்தின் வரைவை வெளியிட்டு மாநில அரசுகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அதன் மீதான கருத்துகளைத் தெரிவிப்பதற்காக அக்டோபர் 2 முதல் நவம்பர் 1 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வனப் பாதுகாப்பு சட்ட திருத்த வரைவு தமிழில் கடந்த அக்டோபர் 28 அன்று தான் வெளியிடப்பட்டது. ஏறக்குறைய மூன்று நாட்கள் மட்டுமே கால அவகாசம் இருக்கும்படி சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு தமிழ்நாட்டின் கருத்துகளை புறக்கணிக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது. ஆகவே நவம்பர் 27 வரை கால அவகாசம் தந்து எங்களின் முழுமையான கருத்துகளைத் தெரிவிக்க அனுமதியளிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசையும், ஒன்றிய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடாமல் காது குத்தி தோடும், மூக்குத்தியுமா அணிவிக்க முடியும்? - கார்த்திகேய சிவசேனாபதி


 மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடாமல் காது குத்தி தோடும், மூக்குத்தியுமா அணிவிக்க முடியும்?

நீதிமன்றங்களின் நேரத்தை வீணடிப்பதற்காகவும், அதன் முக்கியத்துவத்தை கேள்விக்குறியாக்கும் வகையிலும் தொடரப்படும் இது போன்ற வழக்குகளை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், நேரத்தை வீணடிப்பதற்காக அவர்களுக்கு அபராதமும் விதித்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.