வனப் பாதுகாப்பு சட்டத் திருத்தத்தில் உள்ள ஆபத்துகள்!
வனப் பாதுகாப்பு சட்டத் திருத்தத்தின் வரைவை வெளியிட்டு மாநில அரசுகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அதன் மீதான கருத்துகளைத் தெரிவிப்பதற்காக அக்டோபர் 2 முதல் நவம்பர் 1 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வனப் பாதுகாப்பு சட்ட திருத்த வரைவு தமிழில் கடந்த அக்டோபர் 28 அன்று தான் வெளியிடப்பட்டது. ஏறக்குறைய மூன்று நாட்கள் மட்டுமே கால அவகாசம் இருக்கும்படி சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு தமிழ்நாட்டின் கருத்துகளை புறக்கணிக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது. ஆகவே நவம்பர் 27 வரை கால அவகாசம் தந்து எங்களின் முழுமையான கருத்துகளைத் தெரிவிக்க அனுமதியளிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசையும், ஒன்றிய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.