நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சுற்றுலா அமைச்சர் திரு ஜி கிஷண் ரெட்டி, கீழ்கண்ட தகவல்களை அளித்தார்.
நாட்டில் உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக நமது நாட்டை பாருங்கள் இணைய கருத்தரங்குகள், ஒரே பாரதம் ஒப்பற்ற பாரதத்தின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள், சென்னை உட்பட பல்வேறு நகரங்களை வானில் இருந்து படம் பிடித்தல், தொழில்துறை பங்குதாரர்களுடன் தொடர் ஆலோசனை, பாதுகாப்புடன் கூடிய உயர்தர சேவைகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை சுற்றுலா அமைச்சகம் எடுத்து வருகிறது.
