பிரகலாத் ஜோஷி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரகலாத் ஜோஷி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

திறந்தவெளி சுரங்கத்தில் பணிபுரியும் முதல் அகழ்வாய்வு பொறியாளரான ஷிவானி மீனாவுக்கு திரு பிரகலாத் ஜோஷி வாழ்த்து


 நிலக்கரி அமைச்சகத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ராஜ்ரப்பா திட்டத்தில் அகழ்வாய்வு பொறியாளராக இணைந்துள்ள ஷிவானி மீனாவுக்கு மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெண் பணியாளர்கள் அதிக அளவில் சுரங்கத் துறையில் இணைவதற்கான வாய்ப்பை இது உருவாக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் திருமதி ஸ்மிதி இரானியும் ஷிவானியின் சாதனையை பாராட்டியுள்ளார்.

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

மரக்கன்றுகள் நடுவதை விட இயற்கைக்கும், மனிதர்களுக்கும் ஆற்றும் பெரிய சேவை ஏதும் இருக்க முடியாது.- திரு பிரகலாத் ஜோஷி


 முடிந்த வரை பல மரக்கன்றுகள் நடுவதை விட இயற்கைக்கும், மனிதர்களுக்கும் ஆற்றும் பெரிய சேவை வேறு ஏதும் இருக்க முடியாது என மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.

தேசிய அளவிலான மரம் நடும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி கூறியதாவது:

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

நிலக்கரி படுகையில் மீத்தேன் எடுப்பது போன்ற தொழில்நுட்பங்களை, பகிர்வதில் இந்தியாவுடன் கூட்டாக செயல்பட வேண்டும் என ஆஸ்திரேலிய குழுவிடம் மத்திய அமைச்சர் வேண்டுகோள்


 ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமரும் மற்றும் சிறப்பு வர்த்தக தூதருமான திரு. டோனி அபோட் தலைமையிலான உயர்நிலைக் குழுவுடன், மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி, புதுதில்லியில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவின் எரிசக்தி தேவைகள் மற்றும் லட்சிய கொள்கை திட்டங்களுக்கு உதவ ஆஸ்திரேலிய வளங்களை பயன்படுத்துவது உட்பட எரிசக்தி துறையில் விரிவான  முன்னேற்றங்கள் குறித்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே வர்த்தக மற்றும் பொருளாதார  உறவுகளை விரிவுபடுத்துவது பற்றி ஆலோசிக்க ஆஸ்திரேலிய குழுவினர் மத்திய அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷியை சந்தித்தனர்.  திரு. டோனி அபாட்டுடன், இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் திரு பேரி ஓஃபரல், ஆஸ்திரேலிய தூதரகத்தின் பொருளாதார ஆலோசகர் திரு ஹக் பாய்லன் ஆகியோர் உடன் இருந்தனர்.

சனி, 20 ஜூன், 2020

சுரங்கத்துறை மேம்பாட்டில் சுயசார்பு இந்தியா உருவாவதற்கான ஆராய்ச்சி வளர்ச்சி இணையதளம் ஒன்றை திரு பிரகலாத் ஜோஷி துவக்கிவைத்தார்.


சுரங்கத்துறை மேம்பாட்டில் சுயசார்பு இந்தியா உருவாவதற்கான ஆராய்ச்சி வளர்ச்சி இணையதளம் ஒன்றை திரு பிரகலாத் ஜோஷி துவக்கிவைத்தார்.

சுரங்கத்துறையில் சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான அறிவியல் தொழில் நுட்பத் திட்டத்திற்கான, சத்தியபாமா (Science and Technology Yojana for Aatmanirbhar Bharat in Mining Advancement) என்ற இணையதளத்தை, மத்திய சுரங்க அமைச்சகத்தின் அறிவியல் தொழில்நுட்பத் திட்டத்தின் கீழ், நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி  தொடங்கி வைத்தார். இந்த இணையதளம் சுரங்கத் தகவல் பிரிவின் நேஷனல் இன்பர்மேட்டிக்ஸ் சென்டர் மூலமாக வடிவமைத்து செயல்படுத்தப்படுகிறது.. சுரங்க அமைச்சகத்தின் செயலர் திரு சுசில்குமார், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் நிகழ்ச்சியில் உடனிருந்தனர்.