கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் ஐ.நா பருவநிலை மாற்ற மாநாட்டில், பிரேசில், தென்னாப்ரிக்கா, இந்தியா மற்றும் சீனா நாடுகளை உள்ளடக்கிய BASIC அமைப்பின் சார்பில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் அறிக்கை தாக்கல் செய்தார்.
COP26 சுமார் ஓராண்டு காலம் தாமதமாக நடைபெற்றாலும், இதில் சம்பந்தப்பட்ட நாடுகள் ஏற்கனவே, தங்களது நாட்டில் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை செயல்படுத்த தொடங்கிவிட்டதை சுட்டிக்காட்டிய அவர். பாரீஸ் உடன்படிக்கை விதிமுறைப் புத்தகம் COP26-ல் முடிவுக்கு வருவதாக தெரிவித்தார்.
