பூபேந்தர் யாதவ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பூபேந்தர் யாதவ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 நவம்பர், 2021

எதிர்காலத்தில் குறைந்த அளவிலான கார்பன் வெளியேற்றத்தை உருதி செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.- திரு பூபேந்தர் யாதவ்


 கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் ஐ.நா பருவநிலை மாற்ற மாநாட்டில், பிரேசில், தென்னாப்ரிக்கா, இந்தியா மற்றும் சீனா நாடுகளை உள்ளடக்கிய BASIC அமைப்பின் சார்பில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் அறிக்கை தாக்கல் செய்தார்.

COP26 சுமார் ஓராண்டு காலம் தாமதமாக நடைபெற்றாலும், இதில் சம்பந்தப்பட்ட நாடுகள் ஏற்கனவே, தங்களது நாட்டில் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை செயல்படுத்த தொடங்கிவிட்டதை சுட்டிக்காட்டிய அவர். பாரீஸ் உடன்படிக்கை விதிமுறைப் புத்தகம் COP26-ல் முடிவுக்கு வருவதாக தெரிவித்தார்.

ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

இ-ஷ்ரம் இணையதளத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களின் பதிவு நாடு முழுவதும் வேகம் எடுக்கிறது.- மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ்


 அமைப்பு சாரா தொழிலாளர்கள் இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளும் நடவடிக்கை கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி  தொடங்கப்பட்டதில் இருந்து, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  24 நாட்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். இன்று வரை 1,03,12,095 தொழிலாளர்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 43 சதவீத பயனாளிகள் பெண்கள், 57 சதவீதம் பேர் ஆண்கள்.