புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2021-ல் காதி இந்தியா அரங்கை மத்திய வெளியுறவு மற்றும் கலாச்சார இணை அமைச்சர் திருமதி மீனாட்சி லேகி சனிக்கிழமையன்று பார்வையிட்டார்.
காதி இந்தியா அரங்கை பார்வையிட்ட இணை அமைச்சர், அங்கிருந்த ராட்டையில் நூல் நூற்றார். மின்சார சக்கரத்தில் களிமண் பானைகள் செய்தல், கையால் காகிதம் செய்தல், கையால் செய்யப்பட்ட காலணிகள், எண்ணெய் உற்பத்தி உள்ளிட்டவற்றை அவர் பார்வையிட்டார்.
