முக்தார் அப்பாஸ் நக்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முக்தார் அப்பாஸ் நக்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 நவம்பர், 2021

ஹஜ்(Haj) 2022 குறித்த அறிவிப்பை மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி வெளியிட்டார்.


 அன்று (2021 நவம்பர் 1) முதல் ஹஜ் 2022-க்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை தொடங்குகிறது என்று மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி அறிவித்தார். 2022 ஜனவரி 31 வரை இது நடைபெறும்.

மும்பையிலுள்ள ஹஜ் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், குறிப்பிடத்தகுந்த சீர்திருத்தங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஹஜ் 2022 நடைபெறுவதாக கூறினார்.

திங்கள், 4 அக்டோபர், 2021

"வேற்றுமையில் ஒற்றுமை" என்ற நமது பலம் நாடு வளமிக்க பாதையில் முன்னேறுவதை உறுதி செய்துள்ளது.-திரு முக்தார் அப்பாஸ் நக்வி


 "வேற்றுமையில் ஒற்றுமை" எனும் பிணைப்பை எந்த வகையிலும் பலவீனப்படுத்த இந்தியாவின் கலாச்சாரம், மரபுகள் மற்றும் அரசியலமைப்பு அனுமதிக்கவில்லை என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.

“சமூக நல்லிணக்கம் மற்றும் பெண்கள் அதிகாரம் மற்றும் பண்டிட் தீன் தயாள் ஸ்மிருதி சம்மான் திட்டம்” நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், உள்ளடக்கிய வளர்ச்சிக்கு பல தடைகள் வந்த போதிலும், "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற நமது பலம் நாடு வளமிக்க பாதையில் முன்னேறுவதை உறுதி செய்துள்ளது என்றார்.

வெள்ளி, 23 ஜூலை, 2021

சிறுபான்மையினர் நல அமைச்சகத்திற்கான ஒதுக்கீடு 2018-19-ம் ஆண்டில் ரூ 4700 கோடியாக இருந்த நிலையில், 2020-21-ல் இது 7 சதவீதம் அதிகரித்து ரூ 5029 கோடியாக உள்ளது.- திரு முக்தார் அப்பாஸ் நக்வி


 சிறுபான்மையினர் உள்ளிட்ட சமுதாயத்தின் அனைத்து பிரிவினரின், குறிப்பாக நாடு முழுவதுமுள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் மற்றும் பின்தங்கியோரின் நலனுக்காக பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம், பிரதமரின் முத்ரா திட்டம், பிரதமரின் விவசாயிகள் சம்மான் நிதி, பிரதமரின் உஜ்வாலா திட்டம், பிரதமரின் வீட்டுவசதி திட்டம், பெண் குழந்தைகள் கல்விக்கான திட்டம் உள்ளிட்டவற்றை அரசு செயல்படுத்தி வருகிறது.

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஆறு சிறுபான்மை சமுதாயத்தினரான இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிக்கள் மற்றும் சமணர்களுக்கான சமூக-பொருளாதார திட்டங்களை சிறுபான்மையினர் நலன் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

திங்கள், 19 ஜூலை, 2021

உத்தரப் பிரதேசத்தின் ராம்பூரில் பிராணவாயு ஆலையைத் தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி


 உத்தரப் பிரதேசத்தில் ரேடிகோ கெய்தான் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள 6 மருத்துவப் பிராணவாயு ஆலைகளில் ராம்பூரின் பிலாஸ்பூரில் உள்ள சமூக மருத்துவ மையத்தில் ஒரு ஆலையை மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி இன்று தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளினால் பிரதம மந்திரியின் குடிமக்களுக்கான உதவி மற்றும் நிவாரணத்தின் (பிஎம் கேர்ஸ்) மூலம் சுமார் 1500 மருத்துவப் பிராணவாயு ஆலைகள் நாடு முழுவதும் நிறுவப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

சனி, 19 ஜூன், 2021

கொரோனா தடுப்பு மருந்து வழங்கல் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் தேசிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி தகவல்


 நாட்டின் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் கொரோனா தடுப்பு மருந்து வழங்கல் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் வகையிலும், தடுப்பு மருந்து குறித்து சிலர் பரப்பி வரும் வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை முறியடிக்கவும்,  தேசிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி இன்று கூறினார்.

'ஜான் ஹை தோ ஜஹான் ஹை' எனும் இந்த பிரச்சாரம் 2021 ஜூன் 21 அன்று, பல்வேறு சமூக-கல்வி இயக்கங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் ஆகியோருடன் இணைந்து தொடங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வியாழன், 10 ஜூன், 2021

ஹஜ் ஏற்பாடுகள் மற்றும் தடுப்பு மருந்து நிலவரம் குறித்து சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி ஆய்வு


 ஹஜ் பயணம் 2021 குறித்து மும்பையில் உள்ள ஹஜ் இல்லத்தில் ஆய்வு கூட்டமொன்றை மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி இன்று நடத்தினார்.

“எங்களது ஏற்பாடுகளை நாங்கள் செய்திருந்தாலும், சவுதி அரேபிய அரசின் முடிவின் படி நாங்கள் செயல்படுவோம். இரு நாடுகள் மற்றும் ஒட்டுமொத்த மனித குலத்தின் ஆரோக்கியமும், நல்வாழ்வுமே இந்தியாவின் முன்னுரிமை ஆகும்,” என்று கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திரு நக்வி தெரிவித்தார்.

வியாழன், 23 ஜூலை, 2020

முத்தலாக் வழக்கத்தை ஒழித்துக் கட்டியதன் மூலம் மோடி அரசு முஸ்லீம் பெண்களின் சமூக-பொருளாதார, அடிப்படையான, அரசியல் அமைப்புச் சட்ட ரீதியான உரிமைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது. - முக்தார் அப்பாஸ் நக்வி



முத்தலாக் – மிகப்பெரும் சீர்திருத்தம், சிறப்பான பலன் - முக்தார் அப்பாஸ் நக்வி, மத்திய அமைச்சர், சிறுபான்மையினர் விவகாரங்கள்

இந்திய வரலாற்றில் ஆகஸ்ட் மாதம் என்பது “புரட்சி, உரிமைகள், சீர்திருத்தங்கள் ஆகியவற்றுக்கான மாதம்” என அங்கீகாரம் பெற்றுள்ளது. ஆகஸ்ட் - 8 வெள்ளையனே வெளியேறு இயக்கம்; ஆகஸ்ட் - 15 இந்திய விடுதலை நாள்; ஆகஸ்ட்- 19 “உலக மனிதத்தன்மைக்கான நாள்”, ஆகஸ்ட் - 20 “சத்பவன திவஸ்”, ஆகஸ்ட் - 5 அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு அகற்றப்பட்டது என இந்த நாட்கள் அனைத்துமே இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நாட்களாகத் திகழ்கின்றன.