டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பற்றிய 3வது நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
டாக்டர் அப்துல்கலாம் இந்தியாவின் சிறந்த நபராக திகழ்ந்தார். அவரால் பல்வேறு மரபுகள் மற்றும் ஒழுங்குகளை வெற்றிகரமாக ஒன்றிணைக்க முடிந்தது. அவர் எங்கு சென்றாலும், யாரை சந்தித்தாலும், அவர் நம்பிக்கையையும், நேர்மறையையும் வெளிப்படுத்தினார். இன்றைய அவநம்பிக்கையான சூழலில், நாம் டாக்டர் கலாமை பற்றி நினைப்பது நல்லது. பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு டாக்டர் கலாம், அறிவியல் ஆலோசகராக இருந்தபோது, நான் அத்துறையில் இணை செயலாளராக இருந்தேன். அப்போது அவருடன் இணைந்து பணியாற்றும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.



