டெல்லி துணைநிலை ஆளுநர் , சுகாதார அமைச்சருடன் கோவிட்-19 சூழ்நிலையை சமாளிப்பதற்கான ஆயத்த நிலை மற்றும் தற்போதைய நிலை குறித்து டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் ஆய்வு.

``டெல்லியில் கொரோனா பாதிப்பும், அதன் காரணமாக ஏற்படும் மரணங்களும் அதிகரித்து வரும் நிலையில், பரிசோதனை ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்துவது, தீவிர கண்காணிப்பு, தொடர்புத் தடமறிதல் மற்றும் கடுமையான கட்டுப்பாட்டு ஏற்பாடுகள், எல்லைகள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது.''  கோவிட்-19 சூழ்நிலையை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவதற்கான ஆயத்த நிலை குறித்து காணொளி மூலம் உயர்நிலைக் கூட்டத்தில் இன்று ஆய்வு செய்ய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். அமைச்சகத்தின் இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே, டெல்லி துணை நிலை ஆளுநர் திரு அனில் பைஜால், டெல்லி சுகாதார அமைச்சர் திரு சத்யேந்திர ஜெயின் ஆகியோரும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

டெல்லியில் அனைத்து மாவட்டங்களிலும் இப்போது கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ``நோய்த் தாக்குதல் எண்ணிக்கை அதிகரிப்பதும், பல மாவட்டங்களில் மருத்துவப் பரிசோதனைகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் கவலை தரும் விஷயங்களாக உள்ளன'' என்று டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் கூறினார். டெல்லியில் ஒரு மில்லியன் பேருக்கு பரிசோதனை செய்யப்படுவோரின் எண்ணிக்கை 2018 ஆக உள்ள நிலையில், வட கிழக்கு (ஒரு மில்லியனுக்கு 517 பரிசோதனைகள்) மற்றும் தென் கிழக்கு (ஒரு மில்லியனுக்கு 506 பரிசோதனைகள்) போன்ற மாவட்டங்களில்