வெள்ளி, 26 ஜூன், 2020

இந்தியாவில் உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கு, அறிவாற்றலை செல்வமாக மாற்றுவது அவசியம் – திரு.நிதின் கட்கரி


கோவிட் பெருந்தொற்று பாதிப்புக்குப் பிறகு, பொறியியல் ஏற்றுமதித் துறையின் வளர்ச்சி குறித்து, பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் பிரதிநிதிகளுடன், மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் மற்றும் சாலைப்போக்குவரத்து      நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு.நிதின்கட்கரி, நேற்று (25 ஜுன், 2020) காணொலிக்காட்சி மூலம் கலந்துரையாடினார். 

ஊரடங்கு  காலத்தில், பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளும் குறுகிய கால நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்தாலும்,    “ஆக்கப்பூர்வ மனப்பான்மையும் தன்னம்பிக்கையும்”  இருந்தால், தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறலாம் என்று அவர் பொறியியல் ஏற்றுமதியாளர்களை ஊக்குவித்தார். 

மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரி வருவாய் வசூல்கள் மீது பொருளாதாரக் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தக்கூடிய எதிர்மறை விளைவுகள் குறித்தும் ஆலோசனை

தனது ஆலோசனைக் குழுவுடன் ஜூன் 25 மற்றும் 26, 2020 ஆகிய நாட்களில் மெய்நிகர் கூட்டங்கள் நடத்திய பதினைந்தாவது நிதி ஆணையம், ஆணையம் தற்போது எதிர்நோக்கியுள்ள பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தது. 

பதினைந்தாவது நிதி ஆணையத்தின் தலைவர் திரு. என்.கே. சிங் தலைமையேற்ற இந்தக் கூட்டத்தில், ஆணையத்தின் அனைத்து உறுப்பினர்களும், மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 25 ஜூன், 2020 அன்று நடைபெற்றக் கூட்டத்தில், ஆலோசனைக் குழுவில் இருந்து டாக்டர். கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், டாக்டர். சஜ்ஜித் Z சினாய், டாக்டர். பிரச்சி மிஷ்ரா, திரு. நீல்காந்த் மிஷ்ரா மற்றும் டாக்டர். ஓம்கார் கோசுவாமி ஆகியோரும், சிறப்பு அழைப்பாளராக டாக்டர். ரத்தின் ராயும் கலந்துக் கொண்டனர். 26 ஜூன், 2020 அன்று நடைபெற்றக் கூட்டத்தில், ஆலோசனைக் குழுவில் இருந்து டாக்டர். அர்விந்த் விர்மானி, டாக்டர். டி.கே. ஸ்ரீவத்சவா, டாக்டர். எம். கோவிந்த ராவ் மற்றும் டாக்டர். சுதிப்டோ முண்ட்லே ஆகியோர், டாக்டர். ஷங்கர் ஆச்சார்யா மற்றும் டாக்டர். ப்ரொனாப் சென் ஆகியோருடன் கலந்துக் கொண்டனர். 2020-21-ஆம் ஆண்டுக்கான அறிக்கையை பதினைந்தாவது நிதி ஆணையம் சமர்பித்தப் பிறகு நடைபெறும் மூன்றாவது கட்டக் கூட்டமும், கொவிட்-19 பெருந்தொற்றால் தேசியப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து நடைபெறும் இரண்டாவது கூட்டமும் இதுவாகும். 

இந்தியக் கடற்படையின் சமுத்திர சேது திட்டத்தின் ஒரு பகுதியாக 687 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு இந்தக் கப்பல் தாயகம் புறப்பட்டது.


சமுத்திர சேது திட்டத்தின்கீழ், ஐ.என்.எஸ் ஜலஷ்வா கப்பல், ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திலிருந்து இந்தியர்களுடன் புறப்பட்டது.

இந்தியக் கடற்படையின் சமுத்திர சேது திட்டத்தின் ஒரு பகுதியாக,  ஐ.என்.எஸ் ஜலஷ்வா  கப்பல்,  24 ஜுன், 2020 அன்று மாலை ஈரான் சென்றடைந்து. 25 ஜுன், 2020 அன்று அந்நாட்டு துறைமுகத்திற்குள் சென்றது.  கட்டாய மருத்துவ மற்றும் உடமைகள் பரிசோதனைக்குப் பிறகு, 687 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு இந்தக் கப்பல் தாயகம் புறப்பட்டது. 

சுயசார்பு வேலைவாய்ப்பு இயக்கத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ளூர் உற்பத்திப் பொருள்களுக்கு ஊக்கமளிக்கும் தொழிற்சாலைத் தொகுப்புகள் உருவாக்கப்படும். - நரேந்திர மோடி


சுயசார்பு உத்தரப்பிரதேசம் வேலைவாய்ப்பு இயக்கத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

சுயசார்பு உத்தரப்பிரதேசம் வேலை வாய்ப்பு இயக்கத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதன் கீழ், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், உள்ளூர் தொழில்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, கோவிட்-19 தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள சிரமங்களைக் கடந்து செல்ல ஒவ்வொருவராலும் இயலும் என்று கூறினார். இந்த நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை, முகத்தை முகக்கவசத்தால் மூடிக்கொள்வது மிகச்சிறந்த தடுப்பு நடவடிக்கை என்று அவர் கூறினார். 

சிறு, குறு தொழில்களுக்கும், விவசாயத்திற்கும் கடன்பெறும் முறை எளிதாக்கப்பட வேண்டும்.- ஜி.கே.வாசன்


சிறு, குறு தொழில்களுக்கும், விவசாயத்திற்கும் கடன்பெறும் முறை
எளிதாக்கப்பட வேண்டும்.- ஜி.கே.வாசன்

மத்திய அரசு, மாநில, நகர கூட்டறவு வங்கிகளை RBI யின் கட்டிப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என்று முடிவெடுத்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இதில் 58-மாநில கூட்டுறவு வங்கிகளும், 1482- நகரக் கூட்டுறவு வங்கிகளும் ஆக 1540 வங்கிகள் RBI யின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதற்கு மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர உள்ளதாக, மத்திய அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவ்டேகர் அறிவித்துள்ளார்.

இந்த புதிய முடிவால் கூட்டுறவு வங்கிகளில் உள்ள வைப்பு தொகைக்கு ரிசர்வு வங்கி பாதுகாப்பு மற்றும் உத்திரவாதம் அளிக்கும். இதன் மூலம் முதலீட்டார்களுக்கு வங்கியின் மீது நம்பிக்கை ஏற்படும், தொகையும் உயரும். இதுவரை கண்காணிப்பு குறைவால், சில வங்கிகள் திவாலாகும் நிலை தடுத்து நிறுத்தப்படும்.