வெள்ளி, 26 ஜூன், 2020

சிறு, குறு தொழில்களுக்கும், விவசாயத்திற்கும் கடன்பெறும் முறை எளிதாக்கப்பட வேண்டும்.- ஜி.கே.வாசன்


சிறு, குறு தொழில்களுக்கும், விவசாயத்திற்கும் கடன்பெறும் முறை
எளிதாக்கப்பட வேண்டும்.- ஜி.கே.வாசன்

மத்திய அரசு, மாநில, நகர கூட்டறவு வங்கிகளை RBI யின் கட்டிப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என்று முடிவெடுத்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இதில் 58-மாநில கூட்டுறவு வங்கிகளும், 1482- நகரக் கூட்டுறவு வங்கிகளும் ஆக 1540 வங்கிகள் RBI யின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதற்கு மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர உள்ளதாக, மத்திய அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவ்டேகர் அறிவித்துள்ளார்.

இந்த புதிய முடிவால் கூட்டுறவு வங்கிகளில் உள்ள வைப்பு தொகைக்கு ரிசர்வு வங்கி பாதுகாப்பு மற்றும் உத்திரவாதம் அளிக்கும். இதன் மூலம் முதலீட்டார்களுக்கு வங்கியின் மீது நம்பிக்கை ஏற்படும், தொகையும் உயரும். இதுவரை கண்காணிப்பு குறைவால், சில வங்கிகள் திவாலாகும் நிலை தடுத்து நிறுத்தப்படும்.

மத்திய அரசின் முடிவால் கூட்டுறவு வங்கிகள், ரிசர்வு வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் சட்டமசோதா நிறைவேற்றப்படும் போது சில வரையறுத்து நிறைவேற்ற வேண்டும்.  அதாவது சிறு, தொழில்களுக்கும், விவசாயிகளுக்கும், கிராமபுற மக்களுக்கும் கடன்பெறும் முறை எளிதாக்கப்பட வேண்டும். 

இயற்கை சீற்றங்களால் ஏற்படும் புயல், வெள்ளம், வறட்சி ஆகிய காலங்களில் விவசாயிகள் நலன் கருதி அவர்கள் வாங்கிய கடன்களை அந்தந்த மாநில அரசுகள் மக்கள் நலன் கருதி தள்ளுபடி செய்ய முடிவுசெய்தால் அவற்றிக்கு ரிசர்வு வங்கி, மாநில அரசிற்கு முடிவெடுக்கும் உரிமையை, சட்டத்தில் இடம் பெற செய்ய வேண்டும்.

தமிழக அரசு கூட்டுறவு சங்கங்கள் RBI யின் கட்டிப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுவது தொடர்பாக தனது கருத்துக்களை மத்திய அரசிற்கு தெரிவித்திருப்பதாக அறியப்படுகிறது. சட்டம் இயற்றும் போது அக்கருத்துக்களையும் கவனத்தில் எடுத்து பரிசீலிக்க வேண்டும். வங்கிகளின் முறையான செயல்பாட்டிற்கு இது வழிவகுக்கும் என தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக