செவ்வாய், 23 ஜூன், 2020

தேசம் இன்று இரண்டு சோதனைகளை எதிர்க்கொண்டுள்ளது. இணைந்து செயல்படுபோம், இரண்டு சோதனைகளையும் வெல்வோம் - ஜி.கே.வாசன்


தேசம் இன்று இரண்டு சோதனைகளை எதிர்க்கொண்டுள்ளது. இணைந்து செயல்படுபோம், இரண்டு சோதனைகளையும் வெல்வோம் - ஜி.கே.வாசன்

ஒரு புறம் கொராணா என்ற கொடிய தொற்று நோய் தாக்கம், மறுபுறம் அண்டை நாடுகளான சீனா, மற்றும் பாகிஸ்தான் நாடுகள் எல்லை மீறுதல்களும், மறைந்திருந்து தாக்குதல்களிலும் ஈடுபடுகின்றன.  இந்த இரண்டு சவால்களையும் மத்திய அரசு சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், திறமையாகவும் சமாளித்து வருகிறது.

1962-ஆம் ஆண்டு நடந்த சீன தாக்குதலின் போதும் 1971- ஆம் ஆண்டு நடந்த வங்கதேச உரிமை மீட்பு போரின் போதும் அன்றைய மத்திய அரசிற்கு அனைத்து அரசியல் கட்சிகளும், தலைவர்களும் துணைநின்று தோள் கொடுத்தார்கள். ஒட்டு மொத்த தேசத்தின் ஒற்றுமை, ஒறுங்கிணைந்த செயல்பாடும்தான் அன்றைய நம் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.

அதேப் போல் இன்று நம் தேசம் எதிர்கொண்டுள்ள இரண்டு பிரச்சனைகளிலும் அதாவது ஒன்று மக்களின் நலன் சார்ந்தது, அடுத்தது தேசத்தின் இறையான்மையை சார்ந்தது. இது இரண்டுமே தேசத்தின் உயிரும், உடலும் ஆகும். இன்றைய இந்த இரு பிரச்சனைகளில் அனைத்து அரசியல் கட்சிகளும்,
தலைவர்களும், மக்களும் இனம், மதம், மொழி கடந்து இணைந்து செயல்பட வேண்டும். 

அரசின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பும் நல்க வேண்டும். இதன் மூலம் இரண்டு தளங்களிலும் நம் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். எந்த சோதனைகளையும் சந்திக்கும் வல்லமை கொண்டது இந்தியா என்பதை நிருபிக்க வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றி காண்போம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக