மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இந்தியாவின் உஜ்வாலா அனுபவம் வங்கதேசத்தில் சமூக மாற்றத்திற்கு கிரியா ஊக்கியாக இருக்கும் என்கிறார்
துபாயில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் கழகத்தின் துணைநிறுவனமான ஐஓசி மத்திய கிழக்கு, எஃப்.இசட்.இ என்ற நிறுவனத்துக்கும் பெக்சிம்கோ குழுமத்தின் ஆர்.ஆர். ஹோல்டிங்ஸ் லிமிடெட்டுக்கும் இடையிலான கூட்டுத்தொழில் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் நிகழ்ச்சியில் செவ்வாய்கிழமை அன்று மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி வங்கதேசத்தின் மாண்புமிகு பிரதம மந்திரியின் ஆலோசகர் மதிப்புமிகு சல்மான் ஃபஸ்லூர் ரகுமான் மற்றும் வங்கதேசத்தின் மின்சக்தி, எரிசக்தி மற்றும் கனிம மூலவளத் துறைகளின் இணையமைச்சர் மதிப்புமிகு நஸ்ருல் ஹமித் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டு ஒப்பந்தத்தின் மூலமாக பெக்சிம்கோவுடன் இணைந்து ஐஓசிஎல் வங்கதேசம் மற்றும் இதர நாடுகளில் ஊரக அளவில் வர்த்தகத்தை விரிவுபடுத்தத் திட்டமிடும்.



