"திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்க மாவட்டந்தோறும் சிறப்புத் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும்”
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு அப்பாவிப் பெண்ணை, அங்குள்ள நான்கு கயவர்கள் பல்வேறு கொடுமைகளைச் செய்து, பாலியல் பலாத்காரம் செய்திருக்கும் அக்கிரமத்தைக் கண்டிக்கும் வகையில், இந்தப் போராட்டத்தை இன்று நடத்த நாம் முன் வந்திருக்கிறோம்.




