வியாழன், 14 நவம்பர், 2024

பினாகா (Pinaka) ஆயுத அமைப்பின் சோதனைகளை டிஆர்டிஓ (DRDO) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.


 பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) பி.எஸ்.க்யூ.ஆர் சரிபார்ப்பு சோதனைகளின் ஒரு பகுதியாக துல்லியமாக தாக்கும் பினாகா ஆயுத அமைப்பின் சோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. வெவ்வேறு துப்பாக்கி சுடும் நிலைகளில் மூன்று கட்டங்களாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

ஆசிரியர்களை விற்பனை செய்யும் பள்ளிக் கல்வித்துறை, ஏற்கனவே பற்றாக்குறை நிலவும் சூழலில் மேலும் மோசமாக்குவதா? - அன்புமணி ராமதாஸ்

 ஆசிரியர்களை விற்பனை செய்யும் பள்ளிக் கல்வித்துறை: ஏற்கனவே பற்றாக்குறை நிலவும் சூழலில் மேலும் மோசமாக்குவதா?

 - அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள  497 காப்பாளர் பணியிடங்களை ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது. ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக கிடக்கும் நிலையில், எஞ்சியிருக்கும் ஆசிரியர்களையும் விடுதிகளுக்கு விற்பனை செய்ய கல்வித்துறை துடிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

பழங்குடி சமூகத்தினருக்கு அதிகாரம் அளிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். - பிரதமர் நரேந்திர மோடி

 பகவான் பிர்ஸா முண்டா, நமது சுற்றுப்புறத்தோடு எப்படி வாழ்வது, நமது கலாச்சாரம் குறித்து பெருமிதம் கொள்வது எப்படி என்பதை நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அவரால் ஈர்க்கப்பட்டு, அவரது கனவுகளை நிறைவேற்றவும், நமது பழங்குடி சமூகத்தினருக்கு அதிகாரம் அளிக்கவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். - பிரதமர் நரேந்திர மோடி

நீரிழிவு நோய்க்கான ஒருங்கிணைந்த சித்த மருத்துவ புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு சென்னை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனதில் தொடங்கப்பட்டது


 உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் அறிவுறுத்தலின்படி நீரிழிவு நோய்க்கான ஒருங்கிணைந்த சித்த மருத்துவ புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு சென்னை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் திருவனந்தபுரம் மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் இன்று திறக்கப்பட்டது. 

இந்நிறுவனங்களில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இந்த ஒருங்கிணைந்த சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதற்கான நிகழ்ச்சியை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தினுடைய தலைமை இயக்குநர் பேராசிரியர் மரு. திரு என்.ஜெ. முத்துக்குமார் தொடங்கி வைத்து இந்நிகழ்வின் நோக்கம் மற்றும் குறிக்கோளை பற்றி விளக்கினார். 

திங்கள், 21 அக்டோபர், 2024

அறிவுசார் கூட்டாளியாக சிங்கப்பூரை இந்தியா பார்க்கிறது, சிங்கப்பூர் பிரதமர் திரு லாரன்ஸ் வோங்குடன் திரு தர்மேந்திர பிரதான் சந்திப்பு.


 மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் சிங்கப்பூர் பிரதமர் திரு லாரன்ஸ் வோங்கை இன்று சந்தித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே பள்ளிக் கல்வி, தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் விரிவுபடுத்துவது குறித்து இருவரும் அர்த்தமுள்ள உரையாடல்களை நடத்தினர். 'திறமை, வளம் மற்றும் சந்தை' ஆகிய மூன்று முக்கிய தூண்கள் மூலம் கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.