ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

நமது வரலாறு சார்ந்த சிந்தனைகள் மற்றும் கருத்துகள் பற்றிய விளையாட்டுகளை உருவாக்க வேண்டும்.- பிரதமர் நரேந்திர மோடி


உள்ளூர் விளையாட்டுப் பொருள்களுக்கு ஊக்கமளிக்கும் நேரமிது என்று மனதின் குரலில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்

புதிய விளையாட்டுப் பொருள்களை குழந்தைகளுக்கு எவ்வாறு கிடைக்கச் செய்வது மற்றும் பொம்மை தயாரிப்பின் பெரிய மையமாக இந்தியாவை எப்படி மாற்றுவது என்பது குறித்து காந்தி நகரில் உள்ள குழந்தைகள் பல்கலைக்கழகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலச் அமைச்சகம், கல்வி அமைச்சகம், சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் ஆகியவற்றோடு நடந்த தனது உரையாடல்களைக் குறித்து மனதின் குரலின் புதிய உரையில் பிரதமர் திரு நரேந்திர மோடி பேசினார். விளையாட்டுப் பொருள்கள் செயல்பாட்டை அதிகரிக்கும் அதே வேளையில் நமது ஆசைகளுக்கும் சிறகு கட்டி விடுகின்றன என்று அவர் குறிப்பிட்டார். விளையாட்டுப் பொருள்கள் மனதுக்கு மட்டும் மகிழ்ச்சியை அளிப்பதில்லை, மாறாக அவை மனதை செம்மைப்படுத்துவதிலும், நோக்கத்தை ஆழப்படுத்துவதிலும் துணை புரிகின்றன என்று அவர் கூறினார்.

வகுப்பாசிரியர்கள் போன்று, ஊட்டச்சத்துக் கண்காணிப்பாளர்கள் தேவை; மதிப்பெண் அட்டை போல, ஊட்டச்சத்து விவர அட்டை உருவாக்கப்பட வேண்டும்.- திரு.நரேந்திர மோடி


வகுப்பாசிரியர்கள் போன்று, ஊட்டச்சத்துக் கண்காணிப்பாளர்கள் தேவை; மதிப்பெண் அட்டை போல, ஊட்டச்சத்து விவர அட்டை உருவாக்கப்பட வேண்டும் என்றும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் உரை

மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர்,  செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாகக் கடைபிடிக்கப்பட இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.    தேசமும், ஊட்டச்சத்தும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்பு உள்ளவை என்றும் அவர் குறிப்பிட்டார்.   நாம் உட்கொள்ளும் உணவும், நமது மனநலம்  மற்றும் அறிவுசார் மேம்பாடும் நேரடியாக தொடர்புகொண்டவை என்பதைக் குறிக்கும் விதமாக,  எத்தகைய உணவு உட்கொள்கிறோமோ அதற்கேற்ற மனநிலை தான் உருவாகும் என்ற பழமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார்.

மாநிலங்களுக்கு மத்திய அரசு அளிக்கவேண்டிய GST வருவாய் பங்கை அளிக்காமல் ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கச் சொல்லுவதற்கு ஒரு மத்திய அரசு தேவையா ? - கி.வீரமணி


 மாநில அரசுகளின் சம்பந்தமேயின்றி கல்வியை மத்திய அரசுக்கே உரிய பட்டியல் என்பதுபோல் மத்திய அரசு நடந்துகொள்ளலாமா?

மாநிலங்களுக்கு மத்திய அரசு அளிக்கவேண்டிய ஜி.எஸ்.டி. வருவாய் பங்கை அளிக்காமல் ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கச் சொல்லுவதற்கு ஒரு மத்திய அரசு தேவையா?

மாநில அரசை ‘திருவோடு’ ஏந்த செய்யும்

இந்த யோசனை கைவிடப்படவேண்டும்! - கி.வீரமணி

மத்தியில் ஆளும் பா.ஜ.க. பிரதமர் மோடி தலைமையிலான அரசு - தங்களுக்குக் கிடைத்துள்ள நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி, ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை மும்முரமாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வேகமாக நிறைவேற்றி வருகிறது!

தமிழக அரசு உடனடியாக கந்து வட்டி தடுப்புச் சட்டத்தை கறாராக அமல்படுத்த வேண்டும். - கே.பாலகிருஷ்ணன்

 வட்டி கொடுமையால் இளைஞர் தீக்குளித்து மரணம் அனைத்து கடன் வசூலையும் ஒத்தி வைப்பதுடன், கந்துவட்டி தடுப்புச் சட்டத்தை கறாராக அமல்படுத்த சிபிஐ (எம்) வலியுறுத்தல்

தஞ்சாவூர் அருகே, வல்லத்தில் தனியார் வங்கியில் வாங்கிய வீட்டுக் கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் வழங்காததால், வங்கிக் கிளை முன்பு ஆனந்த் என்ற இளைஞர் நேற்று (29.8.2020)  தீக்குளித்து உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி நெஞ்சை உலுக்குகிறது. 

தனிநபர் மற்றும் நிறுவனங்களின் வங்கிக்கடன் தவணைகளை (EMI) திருப்பிச் செலுத்த ஆகஸ்ட் 31 வரை அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்.- மு.க.ஸ்டாலின்


 "தனிநபர் மற்றும் நிறுவனங்களின் வங்கிக்கடன் தவணைகளை (EMI) திருப்பிச் செலுத்த ஆகஸ்ட் 31 வரை அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்" - மு.க.ஸ்டாலின்.

“வங்கிகளில், தனிநபர் மற்றும் நிறுவனங்கள் பெற்ற கடனுக்கான தவணைத் தொகையை (EMI) செலுத்தும் கால அவகாசம், ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படாது” என்று ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்ததாக வரும் செய்திகள், கொரோனா பேரிடரால் - வேலை இழந்து, சம்பளக் குறைப்புக்கு உள்ளாகியுள்ளோருக்கும், தொழில் முடங்கிப் போயிருக்கும் நிறுவனங்களுக்கும் - குறிப்பாக, சிறு - குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளிப்பதாக இருக்கிறது.